Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது

Featured Replies

வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது

‐ றாவய:

யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.

யுத்தம் மூலம் நாட்டில் வாழும் மற்றுமொரு இனம் தோல்வியடைந்த இனமாக மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்லாது உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையர் அல்லாத தமிழர்கள் இடையிலும் இந்த உணர்வு அழுத்தமான பதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணர்வுக்குள் வாழும் தமிழர்கள் மனதில், இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்களவர்கள் தொடர்பில் அதிருப்தியும், கோபமும், அருவருப்புமே காணப்படக்கூடும். எமது மக்களின் உரிமைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இரும்பினாலும் இரத்தத்தினாலும் அடித்து நொறுக்கப்பட்டதாகவே அவர்களின் உணர்வுகள் காணப்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுகளோ, வன்முறைகளோ தெரியப் போவதில்லை. அவர்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிப் பெற்றிருந்தால், இதனைவிட பாரிய அழிவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. இலங்கையில் மாத்திரமல்ல உலகில் எந்த நாட்டிலும் ஆயுதம் தாங்கி பலவந்தமான பயங்கரவாத அமைப்புக்கு இடமளிக்கப்பட மாட்டாது அது ஒடுக்கப்படும் என எண்ணும் இயலுமை அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஆவேசமான தோல்வியடைந்த மனநிலையிலேயே இவற்றைக் காண்பர்.

இலங்கையில் வாழும் தமிழர்களிடையில் மாத்திரமல்ல, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மற்றும் இலங்கை தமிழர் அல்லாத தமிழர்களிடையே காணப்படும் இந்த தோல்வியான மனநிலையுடன் கூடிய உணர்வை, நீங்க செய்வது இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கான அத்தியாவசியமானதும் முக்கியமான நிபந்தனைகளாகவும் உள்ளன.

இந்தியாவின் காலிஸ்தான் ஆயுத போராட்டமும் இவ்வாறான வகையில் 80 ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது.

எனினும் இந்த ஒடுக்கத்தின் பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் வாழும் சீக்கியர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுவை பெற்றுக்கொடுக்கவும் இந்திய அரசாங்கம் தாமதமின்றி நடவடிக்கை எடுத்தது.

இதனால் சீக்கிய மக்கள் மனதில் காணப்பட்ட தோல்வியான மனநிலை விரைவில் மறைந்ததுடன் தற்போது, பிரபலத்தின் அடிப்படையில் சோனியா காந்திக்கு அடுத்ததாக இந்தியாவின் பிரதமர் பதவி சீக்கிய சமூகத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது சீக்கிய சமூகத்தில் புலம்பெயர்ந்தோரிடம் கூட தனிநாடு தொடர்பான குரல்கள் கேட்பதில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் தோல்வியின் அவமானத்தில் இருந்த இனங்களை கட்டியெழுப்புவதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜேர்மனிய மற்றும் ஜப்பானிய மக்கள் இடையில் காணப்பட்ட தோல்வியான மனநிலையை போக்க பல்வேறு விரிவான வேலைத்தி;ட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது இலங்கையும் நாடு என்ற வகையில், இலங்கையும் அவ்வாறான இடத்திலேயே இருக்கின்றது. அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்துள்ள சவால்களுக்கு ஈடான பொருத்தமான விரிவான, செயற்பாட்டு ரீதியிலான வேலைத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

ஒரு புறம் இலங்கை தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் அமைதியாகவும் அன்பாக விடயங்களைத் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

இதனைத் தவிர இடம்பெயர்ந்துள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை கூடிய சீக்கரமாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் சவால் காணப்படுகிறது. இதனை விட தமிழ் மக்களுக்கு வழங்க போகும் அரசியல் தீர்வு என்ன என்ற பிரச்சினையும் காணப்படுகிறது. அகதிகள் பிரச்சினையே மிகவும் விஸ்தீரனமான பிரச்சினையாக கருத முடியும்.

தற்போது 60 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்த பிரச்சினை இருந்த போதிலும் அரசாங்கம் சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு வலய பகுதியில் இருப்பதாக கூறுகிறது.

இந்த அடிப்படையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தங்குமிட வசதிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்குவது இலகுவாக காரியமாக இருக்காது.

முதலில் இந்த மக்களை அடையாளம் காண்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இந்த மக்கள் இடையே இருக்கும் விடுதலைப்புலிகளை அடையாளம் காணவேண்டும். அடையாளம் காணப்படும் புலிகளை புனர்வாழ்வளிப்பதா அல்லது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது வழக்கு பதிவுசெய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அரசாங்கம் கூறுவது போல் உடனடியாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாது, அதற்கு முன்னர், கண்ணிவெடிகள் மரண பொறிகள் அகற்றப்பட வேண்டும். இதனடிப்படையில் இடம்பெயர்ந்த மக்கள் சில காலத்திற்கு நலன்புரி நிலையங்களிலேயே தங்கவைக்கப்படுவர் என தெரிகிறது.

முகாம்களில் நிலைமைகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். முகாம்களில் பாதுகாப்புப் பணிகள் மாத்திரம் படையினரிடம் வழங்கப்பட்டு, முகாம்களின் நிர்வாக பணிகள் சிறைச்சாலை திணைக்களம் அல்லது புனர்வாழ்வு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அந்த மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இந்த மக்களின் எதிர்கால வாழ்க்கை நலனுக்கும், அர்த்தமுள்ளதுமான பிரயோகமிக்க நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆங்கிலக் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறைகளில் இவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் தமது கிராமங்களுக்கு சென்ற பின்னர், பலன்தரக்கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்கு கௌரவத்திற்கும் ஏதுவான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினையில் புதிய சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படும் முன்னர், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அரசாங்க நிறுவனங்களில் தமிழில் பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழியில் பணியாற்ற கூடியவர்களை கணக்கிட்டு, வெற்றிடமாக உள்ள பணிகளில் தமிழ் மொழியில் பணியாற்றக் கூடிய புதியவர்களை பணியில் இணைத்து கொள்ளும் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும்.

இன, மத, குல பேதங்களை தடைசெய்யும் சட்டம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். 13வது அரசியல் சாசன திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் அனைத்து மாகாண சபைகளுக்கும் வழங்கும் கொள்கை கடைபிடிக்கப்பட வேண்டும்.

யுத்த ரீதியில் காணப்படும் அச்சுறுத்தல்கள் களைந்த பின்னர், பாதுகாப்பு வலய பகுதிக்கென படையினர் கைப்பற்றியுள்ள தமிழர்களின் நிலங்கள், மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் கொள்கை கடைபிடிக்கப்பட முடியும்.

இதனுடன் அழிவடைந்துள்ள பகுதிகளில் காணப்படும் வீதிகள், வீடுகளை புனரமைப்பதற்கான வேலைத்திட்டமும் காணப்பட வேண்டும்.

இந்த பிரதேசங்கள் முன்னர் இருந்ததை விட நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதேவேளை 4 ஆம் கட்ட ஈழப் போர் உள்ளிட்ட கடந்த 25 வருடங்களாக நடைபெற்ற யுத்தம் காரணமாக நாட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இடையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் என மூவினத்தையும் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர். இவர்களில் சிலர் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள், ஏனையோர் விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய அமைப்புகளை சேர்ந்தவர். புடையினரானவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்ந்தோரின் கூக்குரல்கள் எதிர்காலத்திலேயே தெளிவாக கேட்கக்கூடியதாக இருக்கும்.

இவர்களின் துயரத்தை போக்க நிவாரண முறையொன்று நாட்டில் காணப்பட வேண்டும்.

உண்மை ஆணைக்குழுவின் மூலமே தென்னாபிரிக்காவில் இந்த பிரச்சினை தீர்வுகாணப்பட்டது. சில நேரம் இலங்கைக்கும் இவ்வாறான முறை தேவைப்படக்கூடும். இவை அனைத்துக்கும் சகலரினதும் நம்பிக்கைக்கும் கௌரவத்திற்கும் ஏதுவான தேசிய வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும் போது, அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் அதனை உருவாக்கும் போது, அதனை அரசியல் பேதங்களின்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டமாக மாற்ற முடியும் எனவும் ராவய பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=8323&cat=5

இது இயலாத காரியம்...... அதனால் தான்

"தமிழீழம் ஒன்றே தீர்வு"

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது 60 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்த பிரச்சினை இருந்த போதிலும் அரசாங்கம் சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு வலய பகுதியில் இருப்பதாக கூறுகிறது.

ராவயவும் சேர்ந்து அரைக்குது சம்பல். 2001 சனத்தொகை கணக்கெடுப்பின் படி வன்னியின் சனத்தொகை 3,162,254.(2001 census)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.