Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் யுத்த நிறுத்தம் நெருங்குகிறதா ? சர்வதேச காய் நகர்த்தல்கள் சொல்லும் செய்தி என்ன ?

Featured Replies

இலங்கையில் யுத்த நிறுத்தம் நெருங்குகிறதா ? சர்வதேச காய் நகர்த்தல்கள் சொல்லும் செய்தி என்ன ?

இலங்கையில் ஒரு யுத்த நிறுத்தம் வருவதற்கான மறைமுகப் பேச்சுக்கள் இடம் பெறுவதை தற்போது வெளிவரும் செய்திகளின் அதிர்வலைகள் உணர்த்துவதாக உள்ளன. அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை உணர்த்துவதற்கான அதிர்வுகளை சகல தரப்புக்களின் குரல்களில் இருந்தும் அவதானிக்க முடிகிறது. முதலில் சகல கருத்துக்களையும் வகைப்படுத்துவோம்.

சிங்களத் தரப்புக்கு மகிழ்வு தரும் நிகழ்வுகள்.

01. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை வெளியே விட வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைபெறும் இனப் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இது நேற்று வெளியான அறிக்கை.

பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் புலம் பெயர் தமிழ் மக்களால் பெரும் போராட்டங்கள் நடாத்தப்பட்டு பலர் உண்ணாவிரதத்தில் குதித்து மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் பிரிட்டனும் பிரான்சும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிங்கள அரசுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புலம் பெயர் தமிழர் எவ்வளவுதான் போராட்டம் நடாத்தினாலும் மேலை நாடுகள் நமது பக்கமே என்று அது திருப்தியடைய இந்த அறிக்கை உதவும். சிங்கள ஊடகங்களில் எல்லாம் இது தலைப்புச் செய்திகளாகியுள்ளது.

02. கனேடிய அமைச்சர் ஒருவர் விடுதலைப் புலிகள் மீதான தடையை தாம் ஒருபோதும் நீக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

03. தினசரி 50 பேர் சராசரியாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்க இன்று இங்கிலாந்தில் சாந்தனின் வழக்கை எடுத்து அவர் யூரர்களின் கணிப்பின்படி குற்றவாளியாகக் காணப்படுவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

யுத்த நிறுத்தத்திற்குள் போக வேண்டுமானால் சிங்கள அரசுக்கு இவைகள் அவசியம் என்பது நாடுகளின் அரச கட்டில்களில் இருப்போருக்குத் தெரியும்.

சிங்கள அரசுக்கு மகிழ்ச்சி தராத நிகழ்வுகள்.

01. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் மாறான கருத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. வன்னியில் மக்கள் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளது.

02. யுத்த நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தும் பேச்சுக்களை ஐ.நாவின் அதிகாரி நம்பியார் கடந்த சில தினங்களாக சிங்கள அரசுடன் இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

03. மெக்சிக்கோவின் சார்பில் ஐ.நா பாதுகாப்பு சபையில் சிறீலங்காவிற்கு எதிராக ஒரு பிரேரணை கொண்டுவர கடுமையாக முயற்சிக்கப்படுகிறது.

04. உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தும் இளையோருக்கு மேலை நாடுகள் ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளன.

05. வன்னியில் துன்பப்படும் மக்களின் அவலம் இப்படியே தொடர்வதை தாம் விரும்பவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

06. யுத்த நிறுத்தம் செய்யாவிட்டால் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டுமென மு.கருணாநிதி தந்தி கொடுத்திருக்கிறார்.

07. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு இல்லை என்றும், அவர் விடுதலையாவதும் முடிவாகிவிட்டது.

08. யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தாது சோனியா வாக்குக் கேட்க தமிழகம் வரக்கூடாது நடிகர் சங்கம் ஆர்பாட்டம்.

இவை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரும் நகர்வுகள்.

இந்தியாவுக்கு மகிழ்வு தரும் நிகழ்வுகள்.

01. அமைதிப் பேச்சுக்களில் அனுசரணைப் பாத்திரம் வகித்த நோர்வேயின் முயற்சிகள் இனி தேவையில்லை என்று சிறீலங்கா கடிதம் கொடுத்துவிட்டது. ஆகவே இந்த விவகாரத்தில் இந்தியாவை மீறி எதுவும் நடக்கவில்லை என்ற வராலற்றை எழுத இந்தியாவுக்கு இது போதுமான நிகழ்வாக உள்ளது. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்திற்கு இது ஒரு உளவியல் வெற்றி

02. விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை ஒடுக்கும் போரில் சிறீலங்கா படைகளுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் வெளியாகிவிட்டன. இந்தியாவின் கோபம் எப்படி இருக்கும் என்பதை வடுதலைப் புலிகளுக்கு உணர்த்திய திருப்தி இப்போது இந்தியாவுக்கு இருக்கும்.

03. யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்றால் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவையில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தென்னாசியாவில் இந்தியா நின்மதியாக உறங்க உதவியான கருத்தாக உள்ளது.

04. தமிழர் கூட்டமைப்பு இந்தியாவை ஆதரிக்க ஒரு பிரிவாகவும், அதை எதிர்க்க இன்னொரு பிரிவாகவும் செயற்படுகிறது. கூட்டமைப்பிற்குள் செயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ பிளவொன்று முன் உரையாடலால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு ஆனந்தசங்கரி இல்லாத மிதவாதக் குழுவொன்று தயாராகி வருவது தெரிகிறது. அந்தக் குழுவை சிறீகாந்தாவைத் தவிர வேறும் யாரும் எதிர்த்து அறிக்கை விடவில்லை. அவர்களும் விடுதலைப் புலிகள் கோரும் யுத்த நிறுத்தத்தையே இந்தியாவிடம் கோரியுள்ளனர். வென்றால் சம்மந்தர் தோற்றால் சிறீகாந்தா என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றுபட்டு எதுவும் செய்ய முடியாத கூட்டமைப்பு இப்போது இரண்டுபட்டு நன்மை செய்தால் நல்லதே என்பதால் மௌனம் காக்கிறார்கள் பலர்.

யுத்த நிறுத்தம், தீர்வு குறித்த பேச்சுக்கள். துணை ஆயுதக் குழுக்களை புறந்தள்ள மட்டக்களப்பு மாநகராட்சி சிக்கல்கள் போல புதிய சிக்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் யுத்த நிறுத்தம் உறுதியானால் துணைக் குழுக்கள் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரும் போலவே தெரிகிறது.

இவ்வளவு சம்பவங்களும் கடந்த மூன்று தினங்களுக்குள் நடந்த சம்பவங்களாகும். இவ்வளவு காரியங்களையும் தொகுத்துப் பார்த்தால் பொது மக்களுக்கு தெரியாது நடைபெறும் திரை மறைவுப் பேச்சுக்கள் எவ்வாறு நகர்த்தப்படுகின்றன என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் ஒரே வரிசையில் அடுக்குங்கள் ஏதோ ஒரு உண்மை வெளியில் வரும். அது அனைவரும் விரும்பும் யுத்த நிறுத்தமாக இருக்கலாம்.

கி.செ.துரை

அலைகள் 18.04.09

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.