Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்காய் முருகன் உண்ணாவிரதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karu%20wives.png

ஈழத் தமிழர்களிற்காய் திருவிளையாடல் செய்ய விரும்பிய முருகன் வள்ளி - தெய்வானை சகிதம் தமிழகத்தில் எழுந்தருளி இன்று காலை திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள்.

ஆனால் இந்த நவகால முருகன் செந்தூரிலோ பழனியிலோ குடிகொண்டிருக்கவில்லை.. அண்ணா அறிவாலயத்தில் பரிவாரங்கள் சகிதம் குடிகொண்டிருக்கிறார்.

இந்த உண்ணாவிரதம் அவரின் ஈழத்தமிழருக்கான பல திருவிளையாடல்களில் ஒன்று என்பது இருக்க.. பாவம் ஈழத்தமிழர்கள் தான் இன்னும் அவரின் அருள் கிடைக்காமல் ராஜபக்ச என்ற அசுரனின் கைகளில் சிக்குண்டு மாய்ந்து கொண்டிருக்கின்றனர்.

என்ன பாவம் செய்தனரோ.. முருகனுக்கு என்ன பரிகாரம் செய்யாமல் விட்டனரோ.. ஈழத்தமிழரைக் கைவிட்டுவிட்ட முருகன் ராஜபக்ச என்ற அசுரனுக்கே அருள் பாலிக்க தேவி சோனியாங்கைக்கு உடுக்கடித்துக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு வேட்டு மாங்கனிக்கும் குறிவைத்துள்ளாராம் முருகன்.அதன் பொருட்டே இந்த திருவிளையாடல் என்று பேசிக் கொள்கின்றனர் பக்த கோடிகள்.

நவகால முருகனுக்கு அரோகரா. ஈழத்தமிழனுக்கு கண்ணீரஞ்சலி.

murugan.jpg

பாவம் இந்த முருகன்.. ஏலவே சிலையானவர்.. இதைக் கேட்டு வள்ளி தெய்வானை சகிதம் விறைச்சு.. கல்லாகிப் போயிட்டார்..!

மூலப் பதிவு: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கடவுளுடன் ஒப்பிட்டு ஏன் ........கடவுளை தரம் இறக்குகிறீர்கள்.

அபச்சாரம்....ஆகி விடாதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை கடவுளுடன் ஒப்பிட்டு ஏன் ........கடவுளை தரம் இறக்குகிறீர்கள்.

அபச்சாரம்....ஆகி விடாதா ?

திருவிளையாடலில் இவர் நிஜ முருகனை வென்றுவிட்டதால்.

கடவுள் முருகனை.. தரக்குறைவாக்க என்ன இருக்குது. தரம் நிறைவாவா அவர் இருக்கிறார். வன்னில ஒரு கோவிலுக்கும் பூசாரியில்ல.. பூசையில்ல.. முருகன் என்ன செய்து போட்டார். தினமும் பாலும் பழமும் வைத்த மக்களை முருகண்டிப் பிள்ளையாரும் கைவிட்டுட்டார்.. கிளிநொச்சி முருகனும் கைவிட்டிட்டுட்டார். இதுக்க... ம்ம்ம்..! :(:o:(

அபச்சாரம் என்றா என்ன? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.