Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் World at the Crossroads participants:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் World at the Crossroads participants:

இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்பதோடு தமக்கான சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெற்ற World at the Crossroads participants: அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுவும் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக இனஒதுக்கல் அரசியல் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதனையும் அம்மாநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி 2008இல் சமாதான உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக விலகியதைத் தொடர்ந்து இலங்கையின் வடபகுதியில் தமிழ் மக்கள் மீது இனஒழிப்பு நோக்கிய ஒரு கொடுரமான யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் 3500க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். படுகொலையிலிருந்து தப்பி வரும் மக்கள் இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி கொழும்பில் வசிக்கும் எல்லாத் தமிழர்களையும்; பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இது 1930களில் நாசிகள் செய்தது போன்ற வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது. இது எல்லாத் தமிழர்களையும் சாராம்சத்தில் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி விடுகிறது.

இப்போது அங்கே இரண்டு இலட்சம் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த இனப்படுகொலைக்கெதிராகக் குரல் கொடுப்தோடு, இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஏனைய அரசாங்கங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு உயர்ரக தொழிநுட்பம் கொண்ட ஆயதங்களை வழங்கியுள்ளதோடு சட்டபூர்வமற்ற இரசாயன ஆயதங்களையும் கிளஸ்டர் குண்டுகளையும் வழங்கியுள்ளன.

எனவே உடனடியாகத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படல் வேண்டும் என்பதோடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் கோரிக்கைகள் கவனத்த்ல் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை அறிவிக்கும் வரை அதற்கெதிராக ராஜதந்திர, பொருளாதார, கலாசார தடையை அமுல்படுத்த வேண்டும்.

ஏனைய நாட்டு அரசாங்கங்களால் வழங்கப்படும் எல்லாவகையான இராணுவ உதவிகளும் அனுசரணைகளும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். ஏனெனில் இந்த உதவிகள் அங்கு ஒரு படுகொலையை நிகழ்த்தவே உதவும்.

சர்வதேச நாணய நிதியம் 1.7 பில்லியன் டொலர் பணவுதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது. ஏனெனில் அந்தப் பணம் தமிழர்ளைக் கொலை செய்வதற்கான இராணுவ உபகரணங்களைக் கொள்வனவு செய்யவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படும்.

உலக நாட்டு அரசாங்கங்கள் அந்தப் படுகொலையிலிருந்து தப்பி வரும் தமிழ் அகதிகளுக்கு ஏற்று அங்கீகரித்து முழு பிரஜாஉரிமை அந்தஸ்து வழங்க வேண்டும்.

தமக்கான சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.

பயங்கரவாதிகள் எனத் தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து வீடுதலைப் புலிகள் நீக்கப்பட வேண்டும் என அந்த அறி;க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளவர்களில் சிலரது பெயர் விபரம்.

சலீம் வலி: பேச்சாளர், பலஸ்தீனிய ஒருமைப்hட்டுக்குழு, ஆய்வாளர், விரிவுரையாளர் விற்ஸ் பல்கலைக்கழகம்

மைக்கேல் லிபோவிற்ஸ்: பணிப்பாளர், மனிதவள அபிவிருத்தி மற்றும் நிலைமாற்றம்எனும் அமைப்பு, தகைசார் ஓய்வுபெற்ற பேராசிரியர் சைமன் பிரேசர் பல்கலைக்கழகம்.

லூயிஸ் பில்பாவோ: சோசலிஸ இராணுவச்சங்கம் (ஆஜென்ரீனா, வெனிசுவெலா அரசாங்கத்தின் ஆலோசகர், ஓஓஐ என்ற சஞ்சிகையின் ஆசிரியர்.

றெஹினா மொஹ்டீன்: உபதலைவர், மக்கள் சக்திகட்சியின் சர்வதேசப்பிரிவின்உபதலைவர் (பிலிப்பைன்) சோசலிஸ்ட் டயலொக் சஞ்சிகையின் ஆசிரியர்.

மேர்சியோ ஜுவினல் டொ}; றெய்ஸ்: பணிப்பாளர், லூரா ஹமாதுக் இன்ஸ்ரிரியூட், கிழக்கு திமோர்.

அயன் அங்குஸ்: சோசலிஸ்ற் வொய்ஸ், கனடா, இணை நிறுவனர் சூழலிய சோசலிஸ்ட் சர்வதேச தொடர்பு.

அயன் பீச்சிங்: வன்கூவர் சோசலிஸ்ட் போறம்.

டபீன் லாவெல்ஸ்: சோசலிஸ தொழிலாளி, நியூசிலாந்து

பிப் ஹின்மன்: போரை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு, சோசலிஸ்ட் அலையன்ஸ்.

ஸ்ரற் மன்க்ரன்: இணையாசிரியர் கிறீன் லீப்

எம்மா முரபி: இணை ஆசிரியர் புடுறு

பெட்றிகோ பியூன்ரஸ்: ஆசிரியர், பொலீவிய எழுச்சி,

ஜமீ டவுக்னி: ஆய்வாளர், விக்ரோரிய பல்கலைக்கழகம்

21ஆம் நூற்றாண்டில் சோசலிஸத்திற்காகப் போராடும் வேர்ல்ட் அற் குறொஸ்றோட் என்கிற இவ்வமைப்பு நூற்றுக்கணக்கான சோசலிஸ்ட்டுக்கள், முற்போக்குச் செயற்பாட்டாளர்கள், மார்க்ஸியச் சிந்தனையாளர் சூழலியலாளர், பால் சமத்துவப் போராளிகள் என்போரை உள்ளடக்கியது.

http://www.globaltamilnews.net/tamil_news....=8912&cat=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
greenleft1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.