Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலையே இலங்கையிலும் தொடரும் Stratfor :

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மரபு ரீதியான யுத்தம் நிறைவடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை இலங்கையிலும் தொடரும் என பிரபல அமெரிக்க ஆய்வு மையமான ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவுவதனைப் போன்றே நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டப் பின்னரும் இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்குதல் அச்சம் தொடரும் என குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கப் படையினர் நிலப்பரப்புக்களை கைப்பற்றியதன் பின்னர் மக்களுடன் கலந்து கெரில்லா முறையிலான போராட்டத்தினை புலிகள் தொடரக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனை தவிர்க்க முடியாது என ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் வலுவான ஓர் புலனாய்வுப் பிரிவினை விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக பெண் போராளிகளின் மூலம் பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் போராடக் கூடிய போராளிகள் இருக்கும் வரையில் தமிழீழ போராட்டம் ஓயாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் கய்தா தீவிரவாதிகள் எவ்வாறு பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் நிலைகொண்டு போராட்டத்தை தொடர்வார்கள் என ஸ்ட்ராட்பொர் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ட்ராட்பொர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல பாதுகாப்பு ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இருக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதென்பது நடைமுறைச் சாத்தியப்படாற்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டதன் ஊடாக அந்த அமைப்பின் போராட்ட இயலுமை முழுமையாக மழுங்கடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=9337&cat=1

சகல ஈழத்தவனும் அறிந்த உண்மை .

நிலங்களை வல்வளிப்புச்செய்தல் வெற்றியாகாதென்று கிழக்கை இழந்தபோதும் மடுவை இழந்தபோதும் இளந்திரையன்முதல் நடேசன் வரை சொன்னவைகள்தான்.

ஆனாலும் தமிழினத்தை அடிமைகளாக்கி அவர்களின் போராட்ட வலுவை மழுங்கடித்து இறுதியில் தமிழ் இனத்தை இலன்கையில் இருந்து அகற்றுவதே சிங்களத்தின் திட்டம். முன்னர் யாழ், பின்னர் கிழக்கு, இனி வன்னி. ஆச்சிகள் கட்சிகள் மாற்றமடையலாம் ஆனால் சிங்களவங்கள் இதை பல தசாப்தகாலங்களாக கனகச்சிதமாக செய்துவருகிறார்கள்.

புலிகள் நிரந்தரமான தளத்தை இளக்கலாம், போராளிகளை தக்கவைக்கலாம் இருந்தாலும் நீண்டகாலத்துக்கு இவைகளை செய்வது புலிகளுக்கும் இது கடினாமாக இருக்கலாம். போராட்டத்தின் இலக்கு தமிழ் மக்களுக்கான விடுதலைதானே தவிர சிங்களத்துடன் தொடர்ந்து போராடுவதில்லை. அப்படிபோராடுவது தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குறியாய்விடும். எதிர்காலம் எமக்கு என்னவித்திருக்கிறதோ தெரியாது ஆனாலும் நம்பிக்கையைத்தவிர எங்களிடம் இப்போது எதுவும் இல்லை.

இலக்கை எவ்வாறு எளிதில் அடைவதற்கு இனி என்ன செயப்போகிறோம், இந்தியத்தேர்தல் முடிந்தால் என்ன? ரஜபக்ஸ போனாலென்ன வேறுமொருவர் வந்தாலென்ன எதுவும் மாறப்போறதில்லை. தமிழர்களின் பலத்திலேயே விடுதலை தங்கியுள்ளது.

கிட்லர் யூதர்களை சீண்டி இஸ்ரேலை அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது போல , இராசபக்ஸேவும் காங்ரசும் தமது கொலை வெறியால் தமிழ் மக்கள் ஈழம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளனர்..

கிட்லர் யூதர்களை சீண்டி இஸ்ரேலை அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது போல , இராசபக்ஸேவும் காங்ரசும் தமது கொலை வெறியால் தமிழ் மக்கள் ஈழம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளனர்..

அதற்காகத் தான் தலைவர் 3 வருடஙளாக சும்மா இருக்கிரார். நாம் 1998 - 2000 காலப் பகுதியில் நிலங்கலை வென்ற போதும் இறுதி வெற்றி 2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் என்ற போர்வையில் சிங்களவன் சொறி லங்காவின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்ட அவனுக்குத் தான் சொந்தம். ஆனால் இப்போது நாம் வெறும் கடற்கரையில் நிற்கும் போது எமது தனி நாட்டுக் கோரிக்கை நியாயமானது என்பது உணர்த்தப் பட்டுள்ளது. 37 வருட போராட்ட்த்தில் மேலை நாட்டு ஊடகங்கள் எம்மை நேர்மையுடன் பார்க்கத் தொடங்கி உள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.