Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபாய் நோட்டுக்கள் மூலம் தமிழக வாக்குகளை வாங்க தி.மு.க முயற்சி?

Featured Replies

தி.மு.க தமிழக வாக்காளர்களின் வாக்குகளை ரூபாய் நோட்டுக்கள் மூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியில் கூறப்பட்டது. இதுசம்மந்தமாக வலைத்தளத்தில் வந்த செய்திகள்:

வங்கியில்சில்லறை மாற்றம் வைகோ சந்தேகம்:

சென்னை:தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆறு கோடி ரூபாய்க்கு 100 ரூபாய் தாளாக மாற்றப்பட்டதாகவும், வங்கிப் பணி நேரத்துக்கு மேலும் இந்தப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும், வங்கியின் கண்காணிப்புக் கேமராவிலும், பதிவு ஏடுகளிலும் இந்தத் தகவல்களைச் சரிபார்க்கலாம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜன், குற்றச்சாட்டுகளைக் கூறி விசாரணை நடத்தக் கோரியுள்ளார்.

விருதுநகர் தொகுதியில் தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர், இந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்காக, மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருப்பதாக அறிகிறேன்.ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஆணைப்படி மாவட்ட வருவாய் அலுவலர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுகுறித்து தொகுதி மக்களும் நன்கு அறிவர். இந்நிலையில், அவர் நியாயமாகச் செயல்படுவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, மிக முக்கியமான இக்குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு தமிழகத் தேர்தல் கமிஷன் சார்பில் தேர்தல் பார்வையாளர் தலைமையில், தாங்களே ஒரு குழுவை அமைக்க வேண்டும் அல்லது சி.பி.ஐ., விசாரிக்க ஆவன செய்ய வேண்டும்.தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

மூலம்: http://www.dinamalar.com/Arasiyalnewsdetai...ls=&ncat=TN

பண பரிமாற்றம் : தேர்தல் ஆணையத்துக்கு வைகோ கடிதம்:

விருதுநகர் வங்கியில் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தாவுக்கு வைகோ இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராசன், விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த மே 5, 6 மற்றும் 7 ம் தேதிகளில் சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு நூறு ரூபாய் தாளாக மாற்றப்பட்டதாகவும், வங்கி பணி நேரத்துக்கு மேலும் இந்தப் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும், வங்கியின் கண்காணிப்புக் கேமராவிலும், பதிவு ஏடுகளிலும் இந்த தகவல்களைச் சரி பார்க்கலாம் எனவும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளுக்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி விசாரணை நடத்த கோரியுள்ளார்.

விருதுநகர் தொகுதியின் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக, மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருப்பதாக நான் அறிகிறேன். மாவட்ட வருவாய் அலுவலர், ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஆணைப்படி செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. தொகுதி மக்களும் இதுகுறித்து நன்கு அறிவர். இந்நிலையில், அவர் நியாயமாகச் செயல்படுவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எனவே மிக முக்கியமான இந்தக் குற்றசாட்டை விசாரிப்பதற்கு, தமிழகத்தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் தாங்களே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அல்லது சி.பி.ஐ. விசாரிக்க ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு, வாக்குகளை பெறுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்: http://in.tamil.yahoo.com/News/Regional/09...090512039_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மை. எனக்கு தெரிந்த நிலவரம், ஓட்டு ஒன்றுக்கு

தேனி தொகுதி; குறைந்தது 30 ரூபாய்

தூத்துக்குடி; 200 ரூபாய்

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை. எனக்கு தெரிந்த நிலவரம், ஓட்டு ஒன்றுக்கு

தேனி தொகுதி; குறைந்தது 30 ரூபாய்

தூத்துக்குடி; 200 ரூபாய்

தேனியிலை ஒரு ஓட்டுக்கு 30 ரூபாயா ? ரொம்ப கம்மியாருக்கே ......

ஆரப்பா அந்த வேட்பாளர் . ஆளை மாத்துங்கப்பா ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.