Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களிடம் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நாம் இணைந்து இருந்தும், எமது குறைகளை வெளிக்கொணர்வதில் நாம் சரிவர தொழிற்படவில்லை என்று தான் நினைக்க வேண்டி இருக்கின்றது.

ஆனால், எதிரி புலம்பெயர் நாடுகளில் மிக குறைவாக இருந்தும் ஒரு அரசாங்கம் என்ற தகுதியை வைத்து கொண்டு பரப்புரை போரில் மிகவும் சாதுரியமாக பல காலமாக காய்களை தொடர்ந்து நகர்த்தி வந்தான். அதன் மூலம் ஒரு மா பெரும் இனப்படுகொலையை நடத்தும் போது கூட உலக நாடுகள் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றான்.

இன்று, சடுதியாக மாபெரும் கடமைக்ள் அலையலையாக எம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. கடமைகளோ நீளமானது. ஒவ்வொரு வினாடியும் எமக்கு முக்கியமானது. எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் தவற விட முடியாது. நாம் விடும் ஒரு தவறு நீண்ட காலத்துக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.

தொடர்ச்சியான எமது போராட்டங்கள் பல கதவுகளை இன்று எம் மக்களுக்காக திறந்து இருக்கின்றது, இந்த சந்தர்ப்பம் தொடர்ச்சியாக எம்மிடம் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. உலகப்பந்தில் பல்வேறு சம்பவங்கள் நடக்கும் போது எமது சந்தர்ப்பம் தவறிவிட வாய்ப்பு உண்டு.

எம் முன்னே பல பணிகள் காத்து இருக்கின்றது. அவை துரிதமாக செயல் படுத்தப்பட வேண்டும். நேர்த்தியாக செயல் படுத்த பட வேண்டும். ஓன்று பட்டு செயல்படுத்த வேண்டும். எனவே, நாம் உடனடியாக காத்திரமான நடைவடிக்கையை எடுக்க வேண்டும். சிறு குழுக்களாக, இணைந்து செயட்பட்டால் விரைவாகவும் சரியாகவும் எம்மால் இயங்க முடியும்.

அதற்காக ஒரு சில கருத்துகளை முன்வைக்கின்றேன்:

ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அந்த அந்த நாட்டு ஏற்ப்பாட்டாளர்கள் மக்கள் கருத்தரங்குகளை நடாத்தி, கருத்துக்களை ஒன்றிணைத்து, ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, அவற்றில் எவை உடனடியாக செயல் படுத்தப்பட வேண்டும்? எவை நீண்ட கால நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கபப பட வேண்டும்? என இனம் பிரித்து, நிகழ்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.

திட்டங்களை அமுல் படுத்த ஒரு கால எல்லை நிர்ணயிக்கப் பட வேண்டும்.

ஒரு குழு, மக்களை குழுக்களாக உள்வாங்கி அவர்களிடம் சில கடமைகளை அந்த நிகழ்ச்சி திட்டங்கள் அடிப்படையில் அந்த குழுக்களின் செயல் திறன் அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும். உதாரணமாக, அரசியல் தொடர்பு உள்ளவர்கள் அரசியல் வாதிகளை உள்வாங்கும் நிகழ்ச்சி திட்டங்களை கையில் எடுக்கலாம். மீடியா துறையில் உள்ளவர்கள் அந்த நாட்டு மீடியாக்களை அணுகி எமது அவலங்களை தொடர்ச்சியாக வெளிக்கொணரலாம். சட்ட துறையில் உள்ளவர்கள் எமக்கு அழிவை தந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாடு படலாம். சமூக சேவையில் உள்ளவர்கள் முகாம்களின் அவல நிலையை வெளிப்படுத்தலாம். மாணவர்கள் எமது நாட்டில் உள்ள மாணவர்கள் அவலங்களை வெளிக்கொணரலாம். பெண்கள் அங்குள்ள பெண்கள் அவலங்களை வெளிக்கொணரலாம். அந்த அந்த துறையில் உள்ளவர்கள் இலகுவாக உள்வாங்கப்படுவர்கள்.

இன்னொரு குழு, நிகழ்ச்சி திட்டங்களையும் கால எல்லையையும் கண்காணித்து அக்குளுக்களை மீண்டும் அழைத்து அவர்களின் செயட்பாட்டின் பெறுபேறுகளை அளவிட வேண்டும். தேவை ஏற்படின் மீளாய்வு செய்ய வேண்டும்.

வேறொரு குழு, ஆவணங்களை சாட்சியங்களை ஒன்றிணைத்து அவற்றை பராமரிக்க வேண்டும். மற்றைய குழுக்கள் தமக்கு தேவையான ஆவணங்களை சாட்சியங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

வேறொரு குழு, விவரண சித்திரங்கள், குறும் திரைப்படங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும். இது வேற்றினத்தவர் மத்தியில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தும். Dafur படு கொலையை படமக்கியதன் பின்னர் தான் பலர் அதிர்ச்சி அடைந்தார்கள். இவ்வாறு எல்லாம் நடந்தது எங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். நமது கதியும் அப்படி தான் பல வருடங்களுக்கு பிறகு உணரப்படும். அதனால் எமக்கு எந்த பலனும் இல்லை. அதனால் தான் இன்றே நாம் அவற்றை வெளிக்கொணர வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக "எமது குறிக்கோள் எமது விடுதலை மட்டும் தான்". இதை மனதில் கொண்டு அனைவரும் தொழிற்பட வேண்டும்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லும் எல்லாவிதமான குழுவும் கனடாவில் உருவாக்கப்ட்டது. அத்துடன் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறன்றேன். கனேடியன் ஹாட் அமைப்பின் ஊடக பல பிரிவுகள் உள்ளடக்கப்பட்டு கடமைகள் பிரிக்கப்பட்டன. இதில் குறைந்தளவு மக்களே ஆர்வம் காட்டினர். பலர் கூட்டத்துக்கு வந்ததை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. இதில் சில முன்னேற்ற கரமான செய்ற்ப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பதிவுக்கு நன்றி. இதை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டதன் காரணம் எம்மில் பலர் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் எமக்கு இதில் அனுபவம் குறைவாக உள்ளது. இதனால் எமது சக்தி, நேரம், பணம் விரயமகிவிட கூடாது என்று கருதுகின்றேன். இவ்வாறன சந்தர்ப்பம் ஒன்றை தவற விட கூடாது. இதற்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். ஒரு கட்டமைப்பை உருவாக்கி, ஒரு நிகழ்ச்சி திட்டம் வகுத்து அதை பின்பற்றும் போது எமது முயற்சி ஒன்றிணைக்கப்படும். பெறுபேறுகளும் பிரயோசனமாக அமையும்.

நான் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலை பார்த்தேன். அதில் கலந்து கொண்டவர்கள் எமது இனத்தின் விடுதலையை நேசிப்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனுபவமின்மையால் கிடைத்த சந்தர்பத்தை முறையாக பயன்படுத்த முடியவில்லை. எமது பக்கம் நிறைய பாதிப்பு இருந்தும் அவற்றை சில சமயங்களில் ஆதார பூர்வமாக முன்வைக்க தவறி விட்டனர். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பு அவர்கள் ஒரு கலந்துரையாடலை எம்மவர் மத்தியில் ந்டாத்தி மக்கள் கருத்துக்களை ஒருங்கிணைத்து, தம்மை தயார் படுத்தி போவார்களேயானால் இது போன்ற சந்தர்பங்களை நாம் எமது பக்க நியாயங்களை எடுத்து சொல்ல பயன்படுத்த்லாம். யார் செய்தார்கள் என்பதை விட எதை எப்படி செய்தோம் அதன் மூலம் எதை சாதித்தோம் என்பது தான் முக்கியம். நாம் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி ஒரு கட்டமைப்பு எமக்கு வேண்டும்.

"இன்று, சடுதியாக மாபெரும் கடமைக்ள் அலையலையாக எம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. கடமைகளோ நீளமானது. ஒவ்வொரு வினாடியும் எமக்கு முக்கியமானது. எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் தவற விட முடியாது. நாம் விடும் ஒரு தவறு நீண்ட காலத்துக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்."

யதார்த்தமான வரிகள்

இதனைச் சரிவரப் புரிந்து செயற்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.