Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கம்னியூசியம், இஸ்லாம் மனிதாபிமானம் அற்றவையா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர்.

சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கூட கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் நாடுகளாக அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற கியூபா, தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஏன் ரஷ்சியா போன்ற நாடுகள் வாக்களித்திருக்கின்றமை இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிலும்

பஞ்சசீலம்.. அணிசேராக் கொள்கை.. காந்திய வழி.. சாத்வீகம் என்றெல்லாம் தனக்குத் தானே பல மகுடங்களை சூடிக் கொண்டுள்ள இந்தியா அவற்றைக் கழற்றி வைத்துவிட்டு அதன் கண் முன்னாலேயே 60 ஆண்டுகளாக தமிழர்களைக் கொன்றொழித்து வரும் சிங்களச் சிறீலங்காவின் படு பாதகமான மனித இனப்படுகொலைகளை திட்டமிட்டு மறைக்க முயன்றுள்ளது. அதுமட்டுன்றி சிறீலங்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக ஒரு அணியையே உலகில் திரட்டிக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளால் அதிக மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாகச் சுட்டிக்காட்டப்படும் நாடுகளான சீனா கியூபா ரஷ்சியா இந்தியா போன்ற நாடுகளும் அடிப்படை இஸ்லாமிய வாதத்தில் ஊறிக் கிடந்து மனிதர்களின் அடிப்படை உரிமைகளையே மறுதலித்து வரும் சில அரபு நாடுகளும் சிறீலங்காவின் கொடூர இனப்படுகொலைக்கு முண்டு கொடுத்துள்ளமை இங்கு அவதானிக்கக் கூடிய ஒரு முக்கிய உண்மையாக இருக்கிறது.

ஐநா மன்றத் தீர்மானம் வெல்லப்பட ஐரோப்பியா ஒன்றியத்தையும் அமெரிக்க வல்லாதிக்க சார்பு நாடுகளையும் மட்டும் முழுமையாக ஈழத் தமிழர்கள் சார்ந்திருப்பது நன்றன்று என்பதையே இந்த உண்மை எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை சில தீவிர இடதுசாரி நாடுகள் மற்றும் அரபு நாடுகள் சந்தேகக் கண்ணோடு பார்க்க விளைகின்றன. அதுமட்டுமன்றி தமிழர்கள் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளில் முன்னெடுக்கும் தமது போராட்டம் பற்றிய நியாயத்தை கவன ஈர்ப்பை கியூபா, ரஷ்சியா, சீனா மற்றும் அரபுலகம் நோக்கி தகுந்த முறையில் கொண்டு செல்ல முற்படாமை தமிழர்கள் பக்கத் தவறென்றே கொள்ளத் தோன்றுகிறது.

இங்கு கிளிக் செய்து காணொளியைக் காணவும்.

மேற்குலகமோ அமெரிக்காவோ நினைத்தால் இந்தத் தீர்மானம் ஏதும் இன்றியே உலகில் மனிதப் பேரவலம் ஒன்றை நிகழ்த்தியுள்ள சிறீலங்கா மீது வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதுமட்டுமன்றி தீவிர அமெரிக்க சார்பு இஸ்லாமிய நாடுகள் சிறீலங்காவின் இந்த இனப்படுகொலையை அங்கீகரித்து வாக்களித்துள்ளன. அதனை மேற்குலகம் தடுக்கும் வகையில் காத்திரமாகச் செயற்பட முன்வரவில்லை. இது மேற்குலகம் குறித்த தீர்மானம் தொடர்பில் உண்மையில் நியாயத்தோடுதான் செயற்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகளிடம் சிறீலங்கா மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் ஏன் அவை தமது சார்பு நாடுகளை இந்தத் தீர்மானம் வெல்ல நிற்பந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு காலத்தில் சிறீலங்காவை மனித படுகொலைக்கள் செய்ய வழிநடத்தியவர்களில் இந்த அமெரிக்க இஸ்ரேலிய மற்றும் மேற்குலக இராணுவக் கணவான்களும் அடங்குவர் என்பதை நாம் மறக்கக் கூடாது.

ஈழத் தமிழ் மக்கள் இந்த உலகில் நடுநிலையானவர்கள். ஆனால் அவர்களின் சமீப கால நடவடிக்கைகள் அமெரிக்க சார்பு மேற்குலகை அதிகம் நம்பும்படியாக இருக்கின்றமை ஒன்றும் அவ்வளவு ஆரோக்கியமான செயற்பாடு அன்று. அமெரிக்க சார்பு மேற்குலகின் ஆதரவு மட்டுமன்றி உலகின் நடுநிலை நாடுகளின் மற்றும் இதர நாடுகளின் ஆதரவும் தமிழ் மக்களுக்கு சிங்கள இனவெறியர்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க அவசியம்.

மேற்குலகம் எவ்வாறு தமது நோக்கங்களுக்காக இன்று தமிழர்களின் நிலையை பாவிக்க முனைகிறதோ அதேபோன்று அதன் இன்றைய நிலைப்பாடுகளை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் தமிழர்கள் முற்றும் முழுவதுமாக மேற்குலகம் சார்ந்தவர்கள் என்ற பார்வையை ஏற்படுத்துவது நன்றன்று. அது மேற்குலகை அமெரிக்காவை பரம விரோதிகளாகப் பார்க்கும் நாடுகள் தமிழர்களையும் தவறாகவே கணிப்பிடவே வகை செய்யும். தமிழர்களும் இந்த உண்மையைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்த நாடுகளை தமிழர்களும் மேற்குலக நாடுகள் போன்று பலமற்ற நாடுகளாகவே எண்ணி வாழாதிருந்து விட்டனர். ஆனால் சிறீலங்கா அதை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டது.

உண்மையில் அமெரிக்க சார்பு மேற்குலகம் சந்தர்ப்பத்தை தமக்காக கையாள்கின்றனரே தவிர அவர்கள் தமிழர்கள் மீதான உண்மையான அக்கறையில் செயற்படவில்லை. ஆனால் கியூபா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் சில அரபுலக நாடுகளும் உண்மையில் அடிமைப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரக் கூடியன. தமிழர்கள் தகுந்த முறையில் இந்த நாடுகளின் தூதுவர்களை அணுகி தமது துயரங்களைச் சொல்லி இருப்பின் இவர்களை ஐநா மன்றில் நடுநிலை நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது தமிழர்களுக்கு சார்பாக மாற்றி இருக்கலாம். இதன் மூலம் சிறீலங்காவை சர்வதேச அரங்கில் தோலுரித்தும் அதற்கு வால்பிடிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உண்மை முகத்தையும் வெளிக்கொணர்ந்திருக்கலாம்.

உண்மையில் சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்களாக தமிழர்களும் அவர்களின் அணுகுமுறைகளுமே உள்ளனவே தவிர சிங்களம் இதில் வெற்றி பெற்றதாக பெரிதும் கணிப்பிட முடியாது. தமிழர்கள் 100% அமெரிக்கா, மேற்குலக சார்பு நாடுகளை நம்பி இருப்பது அவர்களுக்கே ஆபத்தானது என்பதை தெளிவாக அவர்கள் புரிந்து கொள்ள இந்த ஐநா மன்ற வாக்கெடுப்பும் அதன் தோல்வியும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. தமிழர்கள் சிந்திப்பார்களா..???! மாற்றங்களை அணுகுமுறைகளை விரைந்து விரிபுபடுத்துவார்களா..??! துரித கதியில் செயற்படுவார்களா..??! உலகின் போக்கை தமக்குச் சாதமாக மாற்ற முனைவார்களா..??! இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரை நடுநிலை என்பதே இன்று அவசியம். அதனை தகுந்த வழிமுறைகளில் வெளிக்காட்டுவதும் அவசியம். தமிழர்களுக்கு அமெரிக்காவும் பகையல்ல.. மேற்கு ஐரோப்பாவும் பகையல்ல.. சீனாவும் பகையல்ல.. கியூபாவும் பகையல்ல.. சவுதிஅரேபியாவும் பகையல்ல.. பாகிஸ்தானும் பகையல்ல..!

மூலம்:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர்.

.............................

மூலம்:

ஒரு உண்மையினை இப்போதாவது நாம் விளங்கிக்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த நூற்றாண்டின் உலக சமன்பாட்டில், நீதி, நேர்மை போன்றவை எல்லாம் வெறும் வறட்டு பேச்சுக்களே.

ஈழ விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, அதன் மேலாதிக்கம் குறைய கூடாது என்பதாக உள்ளது.

சீனாவின் நிலைப்பாடு, இந்தியாவை தெற்கில் இருந்து தாக்க ஒரு வலுவான, வாய்ப்பான இடம் வேண்டியமை சம்பந்தமாக.

ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு, அவர்களின் வணிகம் சார்ந்தமைக்காக.

சிங்களவன், தமிழினத்தை ஒழிக்க, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை மேற்குலக மற்றும் உள்ள ஆதிக்க சக்திகளுக்கு விட்டு கொடுத்தேனும் சாதிக்க துடித்தான். இதைத்தான் பிரபாகரன் எதிர்த்து வருகிறார் . இந்த பிராந்தியத்தில் ஈடுபாடு காட்டிய அனைத்து சக்திகளுக்கும் தமிழின விடுதலை போர் பெரும் தலை வலியாகவே இருந்து வந்தது. நேரம் பார்த்து, நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டார்கள்.

அதனால்தான், இலங்கையின் இன படுகொலைக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தும், இலங்கையை தடவி கொடுக்கிறார்களே தவிர, தட்டி கேட்கவில்லை. இனியும் கேட்கபோவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு வியாபாரம் முக்கியம். அவர்களின் நலன் முக்கியம்.

வலியில்லாமல் வாழ்க்கையில்லை என்பது போன்று, விட்டு கொடுக்காமல் விடுதலையில்லை என்பதை வேலுபிள்ளை பிரபாகரன் கணிக்க தவறி விட்டார். ஏதாவது ஒரு ஆதிக்க சக்திக்கு ஏதாவது ஒரு துறைமுகத்தை நீண்ட கால குத்தகைக்கு தருவதாக சொல்லியிருந்தாலும், இந்நேரம் தமிழ் ஈழத்தில் பல நாடுகளின் தூதரகங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டிருக்கும்.

தமிழன் தவற விட்ட வாய்ப்பை சிங்களவன் கெட்டியாக பிடித்துகொண்டான். புலிகளை போரில் வெல்லும் ஆயுத, பண உதவிகளுக்கு மாற்றாக, அம்பாந்தோட்டை துறைமுகம் சீனர்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.