Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை தோற்றது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது, தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தவண்ணமுள்ளன.

அமெரிக்கா, கலந்து கொள்ளவில்ல?! - 'The Financial Times' நாளேடு -

30 வருட கால போர் கடந்த வாரம் பாரிய அழிவுடன் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த போரில் 80,000 - 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட தாக்குதல்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

உதவி நிறுவனங்களின் பணிகளும், தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் தடுக்கபப்டுவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

மக்கள் காணாமல் போவது, துன்புறுத்தப்படுவது, படுகொலை செய்யபப்டுவது போன்ற தகவல்களும் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக ஐ.நாவின் மனித உரிமை விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோதல்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஐ.நாவின் மனித உரிமை பேரவையில், சிறிலங்காவுக்கு கொண்டு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, கனடா, சிலி, மெக்சிக்கோ போன்ற நாடுகளின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கபப்ட்டுள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட 26 நாடுகள் சிறிலங்கா அரசின் பிரேரணையை ஆதரித்திருந்தன.

அமெரிக்கா உட்பட புதிதாத தெரிவு செய்யப்பட்ட நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை, என்பதும் சிறிலங்காவுக்கு சார்பாகிவிட்டது.

அவர்கள் ஜூன் மாதத்தில் நடுப்பகுதியிலேயே சபையின் கூட்டட்தொடர்களில் கலந்துகொள்ள உள்ளனர். மனித உரிமை பேரவையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துள்ளது. சிறீலங்காவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் செய்யமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது, இந்நிகழ்வு.

இது எமக்கு பின்னடைவு! - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டவியல் பணிப்பாளர் 'ஜூலிற்றா டி றைவிர'

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படாதது, மனித உரிமை சபைக்கு ஒரு பின்னடைவாகும்.

மனித உரிமை பேரவை மீதே சந்தேகம் ஏற்படுகிறது! - 'ஐரோப்பிய ஒன்றியம்'

யுத்த குற்ற செயல்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனை திட்டத்திற்கு எதிராக

வாக்களிப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இந்த தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானது என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு. இவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்து வகையில் அமையும் என்பது எமது நிலைப்பாடு. பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பதற்கான சகல முயற்சிகளையும், தமது அமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும்.

போர்க்குற்ற விசாரணை நடத்த இது தடையல்ல. மீண்டும் விவாதிப்போம் - ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் 'ஒக்காபே'

இலங்கையில் யுத்த குற்ற செயல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் முழுமையாக மூடப்படவில்லை.

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான வாக்களிக்கப்பட்ட போதிலும், யுத்த குற்ற செயல்கள் குறித்து விசாரணை நடத்த இது தடையாக அமையாது. அதிகளவான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் மனித உரிமை பேரவையில் சிறிலங்கா குறித்து மீண்டும் விவாதிக்கப்படலாம். கால தாமதம் ஏற்பட்ட போதிலும் மனித உரிமைகள் குறித்து ஐ.நா சரியான தீர்வையே வழங்கும்

போர்க்குற்றங்களிற்கு அங்கீகாரம் - அமெரிகாவின் சர்வதேச சட்டவியல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் 'பிரான்ஸில் பொய்லே' -

சிறீலங்கா முன்வைத்த பிரேரணை,வெற்றி பெற்றுள்ளமை, மனித உரிமைகள் சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரையில் மேற்கொள்ளபப்ட்ட மிக வெட்ககேடான, நோக்கமற்ற செயற்பாடு. இச்செயற்பாடு சிறிலங்காவின் இனப்படுகொலையை மறைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன், மனிதாபிமானத்து எதிராக தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றங்களை அங்கீகரித்துள்ளது.இதற்கு மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் சிலவும் கூட்டிணைந்துள்ளன. வரலாறு அவர்களுக்கான தீர்ப்பினை வழங்கும்.

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது ஏன்?

ஐரோப்பிய ஒன்றியத்தினால், சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென கொண்டுவரப்பட்ட பிரேரணை உடனடியாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டமைக்கு கியூபாவே காரணம். இவ் யோசனையை வாக்கெடுப்பின் பின்னர் விவாதிக்கலாம்,எனவும் அணி சேரா நாடுகள், இவ்வாக்கெடுப்பில் சிறிலங்காவிற்கு ஆதரவாகவே செயற்படவேண்டுமெனவும் கியூபா தெரிவித்துவிட்டது. மனித உரிமை பேரவையின் அணி சேரா நாடுகளில், முதன்மை செலுத்துவதும், ஆதிக்கம் செலுத்துவதும் கியூபா ஆகும். மேலும்,

மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளில், ஆசிய நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால், அபிவிருத்தி அடைந்து வரும் இந்நாடுகள், தமது ஒற்றுமையை நிரூபிக்கும் வகையிலும், அபிவிருத்தி அடைந்த, ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் பிரேரணைகள் தம்மை மேலும் ஒடுக்குவதாகவும் கருதி, சிறீலங்காவிற்கு தமது வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தன. என சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.