Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

Featured Replies

சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தில் இந்த வருடம் நடந்தேறிய இனப் படுகொலையில் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால், நம்பகரமான தகவல்களின்படி 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்வதற்குத் தடை விதித்துள்ளது.

நலன்புரி கிராமம் என்று அழைக்கப்படும் முகாம்களுக்குள் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது. மேற்குலக ஊடகவியளாளர்கள் அந்த மக்களை நெருங்குவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

பாரிய இன அழிப்பு நடைபெற்றபோது அதனைத் தடுப்பதற்காக புலம்பெயர் சமூகம் தம்மாலான சகல போராட்டங்ளையும் முன்னெடுத்தது. ஆனால், மக்களின் வெளியேற்றத்தையே அனைத்துலகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. மக்கள் வெளியேறினால் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டா? என நாம் கேட்டோம். மக்கள் வெளியேறினால் மீண்டும் திட்டமிட்ட இன அழிப்புத் தொடரும் என எமது அச்சத்தையும் வெளியிட்டோம்.

ஆனால், இன்று அனைத்துலகம் எதிர்பார்த்த மக்களின் வெளியேற்றம் நடந்துவிட்டது. ஒரு இனத்தை முற்றுமுழுதாக அழிக்கப்பட முனைந்ததன் வெளிப்பாடாகத்தான் இந்த மக்களின் வெளியேற்றம் நடைபெற்றது. இரத்தமும் சதையுமாகத்தான் மக்கள் வெளியேறி வந்தார்கள். அப்படி வந்த மக்கள் இன்னமும் அதே நிலையில்தான் வதை முகாம்களில் வாடுகின்றனர்.

மக்களின் வெளியேற்றத்தைக் கோரிய அனைத்துலக சமூகம் இன்று வாய் திறக்காதிருக்கின்றது. மக்கள் அனைத்துலக நியமங்களுக்கமைவாக நடத்தப்பட வேண்டும். அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் தமக்குள்ள பொறுப்பைத் தட்டிக்களிக்க முடியாது.

வெளியேறி வந்த மக்களின் முழுமையான எண்ணிக்கை என்ன? மனித உயிர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 50 ஆயிரம் அல்லது 2 லட்சத்து 80 ஆயிரம் எனக் கூற முடியாது. சரியான எண்ணிக்கை என்ன என நாம் அறியத் தவிக்கின்றோம்.

அப்படிச் செய்யாவிடின் சிறிலங்கா அரசாங்கம் மக்களைக் கொன்று குவித்துவிட்டு இறுதியில் ஓர் எண்ணிக்கையை கூறும். அப்போது இன்னொரு இனப்படுகொலையும் நடந்து முடிந்து விடும். ஆகவே நாம் எல்லாரும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் மக்களின் அவலத்தை தீர்க்க முடியும்.

இரண்டு வயதிற்கும் குறைவான பச்சிளம் பாலகர்கள் முள்வேலியினால் சுற்றிவளைக்கப்பட்ட முகாம்களுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பெரும்பாலான அகதிகள் கிழிந்த கந்தையான உடை அணிந்தவர்களாக காணப்படுகின்றனர்.

சுகாதாரக் கேடான நிலை அந்த மக்களுக்கு பெருமளவிலான தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றது.

இந்த முகாம்களுக்குள் மனிதாபிமான உதவி அமைப்புக்களை அனுமதிக்குமாறு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால், அதனை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகின்றது. அத்தோடு தம்மால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தடயங்களை அழித்து வருகின்றது.

மக்களின் அவலம் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் பிரித்தானிய அரச பிரதிநிதிகளோடு சந்திப்புக்களை மேற்கொண்டு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. அத்தோடு ஐரோப்பியப் நாடாளுமன்றத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை இந்த நாட்டின் தேசிய மற்றும் இதர ஊடகங்களோடு இருக்கும் தொடர்புகள் மூலம் எமது மக்களின் நிலையை உலகறியச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த முயற்சிக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமக்கு ஏற்பட்ட அழிவுகள் அனைத்தும் பதிவுகள் ஆக்கப்பட வேண்டும்.

இந்தப் பதிவினை மேற்கொள்வதன் மூலம் பிரிந்துபோன எமது உறவுகளை இணைக்க முடியும், உயிரோடு இருப்பவர்களை உறுதிப்படுத்த முடியும்.

இது மேலதிக அவலத்தைக் குறைக்க உதவும். அத்தோடு அனைத்துலகத்தின் தலையீட்டைக் கோரி எமது மக்களின் வாழ்வினை உறுதிசெய்ய உதவும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வரலாற்றுப் பதிவுகளாக்கப்பட வேண்டும்.

அத்தோடு பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழரும் தமது தொகுதி நாடாளுமன்றப் பிரதிநிதியோடு தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொண்டு எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறான தொடர் அழுத்தங்கள் எமது மக்களின் அவலத்தைக் குறைக்க வழிவகுக்கும். அதன்மூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபடுவோம் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கின்றது.

முள்வேலியின் பின்னால் நின்று எமது உறவுகள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர். எமது கைகளில் இன்று பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழம், இலங்கை எங்கிலும் ஏதிலிகளாய், கைதிகளாய் வாடும் எமது உறவுகளுக்கு இயல்பு நிலை வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதே உடனடித் தேவையாகும். இந்த இலக்கை அடைவதற்கு பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பாரிய பணியினை முன்னெடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்: www.puthinam.com

உங்கட போராட்டங்களால வேலிக்கு வெளிய இருந்தவங்க செத்துட்டாங்க.

இப்ப வேலிக்குள்ள இருக்கவங்களையும் சாகடிக்கவா இது.

பிளீஸ்.... வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கோ.

பிளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எம் மக்கள் துயர் தீர கரம் இணைந்த ஆதரவை வழங்குவோம்

உங்கட போராட்டங்களால வேலிக்கு வெளிய இருந்தவங்க செத்துட்டாங்க.

இப்ப வேலிக்குள்ள இருக்கவங்களையும் சாகடிக்கவா இது.

பிளீஸ்.... வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கோ.

பிளீஸ்

இப்பிடி உங்களின் கையாலாகாத தனத்துக்கு ஏன், துணை தேடுகின்றீர்கள்? இதுக்குள்ள தலைவன் என்று பெயர் வேறு!, வைக்கோல் பட்டடை நாயாக இருக்காமல், என்ன செய்யலாம் என்று பாருங்கள்! விடுதலைக்காக கொடுத்த விலகளைஎல்லாம் கிடைத்த சந்திலே குப்பையாக்காமல் மக்களின் துன்பத்தை தீர்க்கப் பாடுபடுவோம். அதை விட்டு ஆய்வு, ஆராச்சி அது இது எண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.