Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம் !?

Featured Replies

சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம்: இஸ்லாமியர்களுக்கு ஒபாமா அழைப்பு

திகதி: 04.06.2009 // தமிழீழம்

அமெரிக்காவுடனான பகையை கைவிட்டு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வருமாறு இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் மற்றும் ஈராக் போர் போன்றவற்றிற்கு பின்னர் உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் அமெரிக்கா மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை போக்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமாம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று எகிப்து த்லைநகர் கெய்ரோ சென்றார்.

அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாராக்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதனையடுத்து கெய்ரோ பல்கலைக் கழக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா, ‘'அமெரிக்காவுடனான பகையை கைவிட்டு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வருமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உலகம் முழுவதும் காணப்படும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து இரு தரப்பும் போராட முடியும்.

அமெரிக்கர்களும், இஸ்லாமியர்களும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சந்தேகம் கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதும் முற்றுப்பெற வேண்டும். இஸ்லாமியர்களுடன் நல்லுறவை விரும்புவதை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்லாமியர்களிடையே பதற்ற நெருப்பை காலனி நாடுகள்தான் ஊதி பெரிதாக்கியது.

இஸ்லாமியர்களுக்குண்டானா உரிமைகளும், வாய்ப்புகளும் காலனி நாடுகளால் மறுக்கப்பட்டதாலேயே இருதரப்பிற்குமிடையே பனிப்போர் ஏற்பட்டது. இஸ்லாமுக்கு எதிராக ஒரேவிதமான எதிர்மறையான எண்ணம் எங்கெல்லாம் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதனை எதிர்த்து போராட, அமெரிக்க அதிபர் என்ற முறையில் நான் பொறுப்பேற்கிறேன்.

அதே சமயம் இதேவிதமான கொள்கை எதிர்தரப்பிலும் பின்பற்றப்பட்டு, அமெரிக்கா என்பது சுயலாபத்திற்காக செயல்படுகிற நாடு என்ற எண்ணம் களையப்பட வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறை குரானுக்கு எதிரானது'' என்று தெரிவித்தார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

இலங்கையும்.... இலங்கைக்கு உதவும் நாடுகளும் .....துரோகிகளும் .... எதிரிகளும்... இதன் யதார்த்தத்தை உணரவேண்டும் :( இல்லையேல் இயற்கை உங்களுக்கு யதார்த்தத்கை உணர்த்தும் :(:icon_idea: :icon_idea: :)

புஷ் அள்ளி அடிச்ச சாணியை கழுவ இந்த வெள்ளாடுதான் (கறுத்தாடு) கிடைத்தது அமெரிக்காவுக்கு, பாவம் மனுஷன் விட்டிருங்கோ.

  • தொடங்கியவர்

புஷ் அள்ளி அடிச்ச சாணியை கழுவ இந்த வெள்ளாடுதான் (கறுத்தாடு) கிடைத்தது அமெரிக்காவுக்கு, பாவம் மனுஷன் விட்டிருங்கோ.
:( :(

பொருளாதார சீர்குலைவு... தேர்தல் உறுதி.... நீர் சொன்ன காரணம் "sitpi" மேலும் எம்போலில்லாமல்... உலக முஸ்லீம்... முஸ்லலீம் நாடுகளின் அழுத்தம்... பயம்... அணுகுண்டு பயம்... காரணமாக உலக மனித உரிமைகளைபற்றி கதைத்து.... பாலஸ்தீனம் பற்றி கதைத்து..... தப்ப பார்கிறார் இப்ப... நாம் இதில் சிலவிடயங்களை தெரிந்தெடுக்க வேண்டும்.. ஓபாமா 4 நிமிடம் எமக்காக ஒதுக்கி பேசியது கூட இந்த கருத்தை சொல்வதற்காக கூட இருக்கலாம்... :icon_idea:

ஒபாமா அவர்கள் உண்மையிலேயே மனிதாபிமானமிக்கவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவரைப் போல ஒரு தலைவர் இந்த உலகத்துக்கு கட்டாயம் வேண்டும். வரவேற்போம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவையும் கொன்று, அப்பாவையும் கொன்று, சகோதரன், சகோதரியையும் கொன்று பின் இனிமேல் நாட்டாமை விடுவதில் பிரயோசனம் இல்லை என்று மனம் தெளிவு பட்டவுடன் பழையதை மறந்து உறவு கொள்வோம் என்றால், தந்தையையும், தாயையும், மற்றவர்களையும் இழந்தவன் ஒத்துக்கொள்வானா? பதிலாக முன்னாள் அதிபருக்குத் தண்டனை கொடுக்கத் தயாரா? அணு ஆயுதங்களை மற்றவர்களுக்கு முன்னோடியாக அழித்துக்காட்டத்தயாரா? இது கத்தியை முதுகுப்புறத்தில் வைத்துக்கொண்டு சண்டையை விட்டுச் சமாதானம் செய்வோம் என்று பாசாங்கு செய்வதுபோல் உள்ளது. சமாதாக நல்லெண்ணமாக சிலவற்றை முன்னோடியாகச் செய்து காட்டினால் மற்றவர்களும் மனம் திருந்தி போக வாய்ப்புள்ளது.

யாரை யார் நம்பலாம்? எவனையும் நம்பமுடியாது. உதாரணமாக புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுங்கள் என்றார்கள். ஆம் அமெரிக்காவின் வேண்டுகோளின்படி செயற்பட நாம் தயாராக உள்ளோம் என்று அவர்கள் அறிவித்தபோதும் இவர்கள் மௌனம் காத்ததெப்படி? சொன்ன சொல்லுக்கும் பின் செயற்பாட்டிற்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டதே. நாங்கள் கேட்டபடி அவர்கள் வருகிறார்கள் காப்பது எங்கள் கடமை என்று புறப்பட்டார்களா? இல்லையே.

மனித உரிமைச் சட்டத்தையே உருவாக்கியவர்கள், அப்பாவித்தமிழ் மக்கள் நாயிலும் கேவலமாக கொன்றொழிக்கப்பட்டபோது சட்டத்திற்கு முரணான ஆயுதமும் கொடுத்து காப்பாற்று காப்பாற்று என்று கதறிய போதும் சட்டம் என்ன செய்ததது அல்லது சட்டத்தை உருவாக்கியவர்கள் என்ன செய்தார்கள்? கண், காது, செவி அற்று நடைப்பிணமாக இருந்தார்கள். எதுவும் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை போல ஆகிவிடக்கூடாது. சட்டத்தில் உள்ளதைக்கூட நடைமுறைப்படுத்தாதவர்கள்.

ஓசாமாவைத் தேடி அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அழித்தபோதும், சரணடைந்தவரை எங்கள் உயிர் போனாலும் காப்பது எங்கள் கடமை என்று ஆப்கானிஸ்தான் அழிந்தபோதும் அவர்கள் ஒசாமாவை விடவில்லையே. அங்கே சொல்லுக்கும் செயலுக்கும் முடிச்சு அவிழவில்லை. அழவேண்டிய இடத்தில் அழுது, அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து தங்கள் மேல்நிலைமையைக் காப்பாற்றுவதே இவர்களின் இலட்சியம். மோதகம் கொழுக்கடடையானாலும், கொழுக்கட்டை மோதகம் ஆனாலும் உள்ளுடலும், வெளியே உள்ள மாவும் ருசியும் ஒன்றுதான் வடிவம் மாத்திரம் வித்தியாசம் அவ்வளவு தான்

ஒபாமா மனிதாபிமானம் மிக்கவர் தான், ஆனால் இந்த அரசியல் அப்படி இல்லை. அமெரிக்கர்கள் இப்பொழுது வேலை இழந்துக்கொண்டு இருக்கீறார்கள் எனவே ஒபாமாவால் ராணுவத்திற்கு இன்னும் நிறைய செலவு செய்ய முடியாது. அதற்கு தான், அவர்களை அழிக்க பாகிஸ்தான்க்கு அவ்வளவு பணம் குடுத்தார். ஆனால் பாகிஸ்தானோ அதை இந்தியவிற்கு எதிராக அணுஆயுதம் சேகரிப்பில் இறங்கி விட்டது (பாகிஸ்தானே தீவிரவாதம் பரப்பும் நாடு தானே!!!).

இவர் குரான் சொல்லுவதை அவர்களிடம் சொல்கிறாரே, அவர்களே அதை மதிக்க வில்லை!!!

தனக்குனு வந்த தான் தெரியும்னு சொல்லுவார்கள். அதன் இது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.