Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள்

திகதி: 15.06.2009 // தமிழீழம்

சிறீலங்காவுக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் சிறீலங்காவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடும் போக்கு கொண்ட இராணுவ ஆட்சியாளர்களினால் ஆளப்படும் மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மியன்மார் ஜனநாயக செயற்பட்டாளர்களைச் சிறையில் அடைத்து, ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு தடை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மியன்மாரின் ஜனநாயகத் தலைவியான ஹான் சான் சூசியைப் பல வருடங்களாக அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இவற்றைத் தவிர அண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற விசேட கூட்டத்தில், மியன்மார், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.

தென்கிழக்காசியாவில் உள்ள பௌத்த நாடான மியன்மார் தலைநகர் ரங்கூன் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.

sankathi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து லட்சம் தமிழர்கள் மியான் மாரிலா? முன்னர் கேள்விப்பட்டதேயில்லையே? இதை நிரூபிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே...இவர்களின் சரித்திரம் ஆராயப்பட வேண்டும்..! இவர்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். நன்றி தராக்கி.

கடவுளே...இவர்களின் சரித்திரம் ஆராயப்பட வேண்டும்..! இவர்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். நன்றி தராக்கி.

இவர்கள் வெள்ளையர்களால் ரெயில் ரோட் போடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டோர் இதன் நினைவாக அப்பகுதியில் ஒரு நடுகல்லும் உண்டு அங்கே சென்ற பலர் அங்கே தங்கி விட்டனர் ,

அவர்களின் கலாச்சாரம் தற்போது பர்மியர்களோடு கலக்கிறது உதாரணமக வள்ளியம்மை எனும் பெயர் திரிவடைந்து வெள்ளுமா என பெயர் வைக்கிறார்கள்,

இவர்கள் அரசியல் அதிகாரம் அற்றவர்களாக இருப்பதற்கு காரணம் அங்கே ராணுவ ஆட்சி நடைபெறுகின்றது ,இங்கே ஜனநாயகத்திற்கு இடமில்லை ,ஜனநாயகம் பேசுபவர்கள் கொல்லப்படுவார்கள்.

இவர்கள்

அரசியல் அதிகாரம் அற்றவர்களாக இருப்பதற்கு காரணம் அங்கே ராணுவ ஆட்சி நடைபெறுகின்றது ,இங்கே ஜனநாயகத்திற்கு இடமில்லை ,ஜனநாயகம் பேசுபவர்கள் கொல்லப்படுவார்கள்

இனிமேல் ஜனநாயகம் மலரும் மகிந்தா அங்கு சென்றபடியால்

மியன்மாரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்கின்றார்கள்

திகதி: 15.06.2009 // தமிழீழம்

சிறீலங்காவுக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

....

கடும் போக்கு கொண்ட இராணுவ ஆட்சியாளர்களினால் ஆளப்படும் மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மியன்மார் ஜனநாயக செயற்பட்டாளர்களைச் சிறையில் அடைத்து, ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு தடை ஏற்படுத்தியுள்ளது.

....

sankathi

மகிந்த நாயும் இதைச் செய்யத்தான் ஆலோசனை பெறப் போனதாக்கும்... இப்படியனதுகளை எல்லாம் ஏன் வைச்சு இருகிறாங்கள்? நேரத்திற்கு அனுப்பி விடலாமே...??

... இப்படியனதுகளை எல்லாம் ஏன் வைச்சு இருகிறாங்கள்? நேரத்திற்கு அனுப்பி விடலாமே...??

இப்படியானதுகளைத்தான் இப்ப மேற்குலகு விரும்புதாம் ,இப்படியானதுகள் ஆசியாவில் இருந்தால்தான் அதுகளைகாட்டி மேற்குலகு நிம்மதியாக இருக்கலாமாம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39398

மியன்மாரில் தலைவர்மீது பற்றுள்ள ஒருவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதாக எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இவர்கள் தமிழ் பேசுவார்களா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39398

மியன்மாரில் தலைவர்மீது பற்றுள்ள ஒருவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதாக எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இவர்கள் தமிழ் பேசுவார்களா என்பது சந்தேகமே.

பர்மாவில் இருப்பவர்கள் தமிழகத்தை தாயகமாக் கொண்ட தமிழர்கள்... பலர் பல ஆண்டுகளுக்கு முன் வணிகம் செய்யப் போனவர்கள்... பலர் ஆங்கிலேயர்களால் கொண்டு செல்லப் பட்டவர்கள்... பர்மியத் தலை நகர் ரங்கூனில் முருகன் ஆலயமும்... அம்மன் ஆலயமும் உண்டு...

இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் சென்னையில் வணிகம் செய்த பகுதிதான்.. பர்மா பஜார்.. இன்றளவும் போலி வெளி நாட்டுப் பொருட்களுக்கும்.. இன்ன பிற சட்ட விரோத பொருட்களுக்குமான தலைமையகம்...

இந்திய பர்மிய எல்லையை ஒட்டிய மணிப்புர் மாநிலத்திலும் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.