Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரமாயிரம் ஆண்;டுகளாயினும் செத்து விடாது தாயகக் கனவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரமாயிரம் ஆண்;டுகளாயினும் செத்து விடாது தாயகக் கனவு

- தொல்காப்பியன் -

தமிழ் மக்களின் விடுதலைக்காக இராணுவ ரீதியாக நடத்தப்பட்ட போராட்டம்- ஈழத்தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரழிவுகள்- அவலங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

புலிகளின் மரபு ரீதியான போரிடும் திறனை, சதிச்செயல்கள் மூலம் அரச படைகள் முற்றாகச் சிதைத்திருக்கின்ற நிலையில்- தமக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

வெற்றியைக் கொண்டாடிய புலிகள் இயக்கம், இன்று ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொண்டிருப்பது அதன் யதார்த்தமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தின் வீழ்ச்சி என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொள்கிறது.

ஆனால் அது நடத்தும் வெற்றி விழாக்களில் நாடு தழுவிய போர் வீரர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்ச்சிகளின் போது தமிழீழ தேசிய விடுதலைப் போரின் தோல்வி என்றே முதன்மைப்படுத்தப்படுகிறது.

தமிழ் மக்களின் தனியரசுக்கான- சுயநிர்ணய உரிமைக்கான- போராட்டத்தின் வீழ்ச்சியாகவே இதைக் கருதுகிறது.

தமிழீழத் தேசியத் தலைமையின் வெற்றிடத்தோடு ஈழக் கனவு முற்றாகச் சிதைக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது.

பிரபாகரனின் மரணம் பற்றிய சர்ச்சைகள் ஒரு புறத்தில் இருக்க, அவர் இருந்தாலும்- மறைந்தாலும் ஈழக்கனவு ஒருபோதும் அழிந்து போகாது.

இந்த உண்மையின் புரிதலில் இருந்து இலங்கை அரசு வெகு தொலைவில் விலகியே நிற்கிறது.

தமிழ் மக்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதன் மூலம்- அவர்கள் இனிமேல் உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் நம்பியிருக்கலாம்.

ஆனால் அது நிச்சயமாக சாத்தியமானதாக இருக்கப் போவதில்லை. புலிகளைப் பொறுத்தவரையில் இது அவர்களுக்கு கிடைத்த மிக மோசமான இராணுவத் தோல்வியே. என பலர் சொல்லிக்கொண்டாலும் திட்டமிட்ட சதிச்செயல் ஒரு இனத்தின் அபிலாசைகளை அடியோடு சாய்த்திருக்கிறது.

ஆனால் அரசாங்கம் சொல்வது போன்று புலிகள் இயக்கம் முற்றாக அழிந்து விடவில்லை. புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் சிதைந்து போயிருப்பினும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை- இலட்சியம் என்பன தோற்கடிக்கப்பட முடியாதவை.

இதற்காக கொடுத்த விலைகள் ஏராளம். ஆயுத வழியிலான போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும்- கொள்கை ரீதியான புலிகளின் அரசியல் போர் தொடர்வதற்கான அத்திவாரம் போடப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் வழங்கிய பேட்டியொன்றில்-

'நம்பக் கூடிய அரசியல் வழிகளினூடக தமிழ்த் தேசியக் கேள்விக்கு ஒரு தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

எமது மக்களைக் காப்பாற்றுவதற்கே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

இந்தப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு அரசியல் நடைமுறை இல்லாமையும், மக்களைக் பாதுகாக்க ஒரு இயக்க முறையின் தேவையுமே முதலில் விடுதலைப் புலிகளை ஆயுதம் ஏந்தத் தூண்டியது.

இன்று, இந்தக் கேள்விக்குப் பதில் அருகாமையிலும் இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்த் தேசியக் கேள்வியை முன்னெடுத்துச் செல்ல மக்களால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.

இந்த இடத்தில், புலிகள் அமைப்பு எமது மக்களின் அங்கீகாரத்துடன் நடைமுறைக்குச் சாத்தியமான வேறு வழிகளைப் பின்பற்ற எப்போதும் தயாராகவே உள்ளது.

ஒரே காரணத்துக்காக, தமிழ்த் தேசியக் கேள்வியின் விடைக்காக- முன்பு பல தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களை எடுத்துப் போராடின.

அடிப்படையில் இவர்களும் இதே கொள்கைகளை மதிக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இந்த நேரத்தில், அவர்கள் முன்வந்து எம்மோடு சேர்ந்து செயற்படுவார்கள் என்று நாங்கள் நேர்மையாக நம்புகின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, புலிகள் இயக்கம் ஆயுத வழியில் இருந்து விலகி- அரசியல் வழியில் தமிழ்மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இறங்கப் போவதற்கான தெளிவான முடிவில் இருப்பது உறுதியாகிறது.

அதேவேளை, இலங்கை அரசாங்கம் கூறுவது போன்று புலிகளின் போராட்டத்தை தனியே பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்திவிடக்கூடிய நிலை இப்போது இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையில் இருந்து கொண்டே புலிகள் அரசியல் ரீதியான தலைமைத்துவத்;தை அவர்களுக்கு வழங்கியிருந்தனர்.

2004 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தை ஏற்று- அவர்களை ஏக பிரதிநிதிகள் என்று அறிவித்தே பொதுத்தேர்தலில் நின்று மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

எனவே, புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆதரவுத் தளம்- இராணுவத் தோல்விகளுடன் முடங்கிப் போய்விடும் என்ற அரசாங்கத்தின் கருத்தும் வெறும் பகல் கனவாகவே முடியப் போகிறது.

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிவுகளைச் சந்தித்திருப்பினும் கூட- அவர்களின் முயற்சியும் போராட்டமும் தான் தமிழரின் பிரச்சினையை இன்று சர்வதேச மயப்படுத்தி நிற்கிறது.

உலகின் முக்கிய நாடுகள் அனைத்தும் தமிழ்மக்களுக்கு சமமான உரிமைகளைப் பகிந்தளிக்குமாறு வற்புறுத்தி நிற்பதற்குப் புலிகளின் இந்த ஆயுதப் போராட்டமே காரணம்.

எனவே, புலிகள் ஆயுதப்போராட்டத்தி;ன் மூலம் சாதித்தது என்ன என்ற கேள்விக்கே இங்கு இடமில்லாது போய்விடுகிறது.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் தோல்வி கண்டிருந்தாலும் கூட- அழிவடையும் கட்டத்தில் சர்வதேச ரீதியான- அரசியல் அங்கீகாரத்தை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த வழியில், தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கும் நிலை உருவானால்- அதுவே புலிகளின் மூன்று தாசாப்த போராட்டத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக- வெற்றியாக அமையும்.

தற்போது சர்வதேச ரீதியாக கிடைத்திருக்கின்ற இந்த கவனிப்பை- அங்கீகாரத்தை தமிழ்மக்களுக்குச் சார்பான ஒரு அரசியல் தீர்வை நோக்கிக்கொண்டு செல்வதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

இனிமேல் புலிகளுக்கு எதிரான, ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் என்று குறுகிய வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல்- அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஓரணியில் இணைவது இன்றைய அவசியத் தேவையாகிறது.

அதேவேளை, புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவித்த செய்தியை வெளியிட்ட உலகின் அனைத்து ஊடகங்களுமே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடத் தவறவில்லை.

ஆயுதப் போர் தான் இப்போது முடிந்திருக்கிறது- அரசியல் போர் ஆரம்பித்திருக்கிறது என்பதே அது.

புலிகளின் அழிவில் இருந்து ஆரம்பித்திருக்கின்ற அரசியல் போர், தமிழ்மக்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க வழி செய்யுமா என்ற கேள்வி நிறையவே உள்ளது.

ஏனென்றால் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது தனியே ஒரு தரப்பின் முயற்சியால் மட்டும் சாத்தியப்பட்டு விடாது.

அரசியல் ரீதியாகப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க எவ்வளவோ முயன்றதாகவும்- ஆனால் புலிகளே தம்மைப் போருக்குள் இழுத்துச் சென்றதாகவும் கூறும் மகிந்தவும் அவரது அரசும் தமது அரசியல் நேர்மையை ஒருபோதும் நிரூபிக்க முடியாது.

அதற்கு சிங்களப் பேரினவாதத்தின் இராணுவத் திமிரும் இனவெறி நோக்கும் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டாது.

எனவே தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது இலங்கை அரசின் கைககளில் இருந்து ஒருபோதும் வரப் போவதில்லை.

எனவே, தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் அரசியல் வழிக்கு மாறினாலும் -சாதகமான முறையில் வெற்றியைத் தேடித் தருமா என்பதில் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

அப்படியான நிலை இல்லாது போய்விட்டால் புலிகளின் முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டமும் சரி- அதற்கான உழைப்பு, தியாகங்கள், அதனால் தமிழ்மக்கள் எதிர்கொண்ட அழிவுகள், துன்பங்களும், இழப்புகள் எல்லாமே வீணாகப் போய் விடும்.

அதேவேளை அரசாங்கம் சொல்வது போன்று பிரபாகரன் மரணமடைந்திருந்தாலும் கூட- அவரது கொள்கைகளோ கனவுகளோ மரணித்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால் தமிழீழத் தனியரசுக்கான வேண்டுகை பிரபாகரனின் ஆயுதத்தில் இருந்து எழுந்த ஒன்றல்ல. அது தமிழ்மக்களிடம் இருந்து எழுந்த ஒன்று.

இதை அவர்கள் ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இது மீள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் என்ற கோட்பாடு பிரபாகரனோடு தொடங்கவில்லை. அதங்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது. அந்த பாதையிலே பிரபாகரன் ஆற்றிய மிக பெரியதாக இருந்திருக்கின்றது. இருக்கின்றது. இந்தப்பாதையிலே இந்த இலட்சியம் நோக்கி யாரும் வரலாம். தமிழர்களின் இலக்கு அழியவும் இல்லை. பாதையில் பயணம் தொடரும். தமிழர்களின் பங்கு இன்னும் தேவை இருக்கின்றது. இலட்சியம் நோக்கிப் பயணிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.