Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல்

Featured Replies

உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல்

[வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:23 பி.ப ஈழம்] [க.நித்தியா]

உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பிரான்சில்...

பாரிஸ் நகரில் உள்ள பலஸ் டீ லா பஸ்திலே (Place de la Bastille) என்ற இடத்தில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

அடிமை வாழ்வையும் இன அடக்குமுறையையும் தாங்க முடியாமல் சொந்த நாட்டிலேயே பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதி வாழ்விலும் சிறிலங்கா அரசின் இன அழிப்புத் தாண்டவத்திலிருந்தும் விடுபட்டு அனைத்துலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி தமிழ்க்குடி. ஆனால் இன்று தமிழ்க்குடி அகதியாகி நூற்றுக்கும் அதிகமான உலக நாடுகளில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றது.

எந்த நாட்டில் நாம் வாழ்ந்தாலும் தாய்நாட்டை நாம் மறக்கலாகாது.

அன்பான பிரான்ஸ் வாழ் தமிழீழ உறவுகளே!

சோர்வு வேண்டாம். அகதி வாழ்வும் வேண்டாம். ஒன்று கூடுவோம். ஒரு குரலாய் ஒலித்திடுவோம்.

நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அகதிகள் தான். நாம் அந்த நாட்டினராக ஆகிவிட முடியாது. எம் தேசம் சென்ற பின்பு தான் நாம் உரிமையுள்ள மக்களாக வாழமுடியும்.

இன்று ஈழத் தமிழர்கள் உலகு எங்கும் அகதிகள். ஒன்று திரண்டு விடுதலைக்காக குரல் கொடுப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் பிரான்சில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28.06.09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள "தமிழீழத் தாகம் தணியாது" என்ற இந்தப் பேரணியானது Place Vauban எனும் இடத்தில் தொடங்கி Trocadéro எனும் இடத்தில் நிறைவடையவிருக்கிறது.

சிறிலங்கா அரசின் வதை முகாம்களுக்குள் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் உறவுகளுக்கு அனைத்துலக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கக் கோரியும் -

சொந்த நிலங்களில் தமிழ் மக்களை விரைவாக குடியமர்த்தக் கோரியும் -

தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கக்கோரியும் -

பிரான்ஸ் அரசு அதற்கான காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரியும் -

நடைபெறவுள்ள பெரும் இந்த ஒன்றுகூடலில் பிரான்ஸ் மக்கள் ஒன்றாய் அணிசேருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

கனடாவில்...

உலக அகதிகள் நாளை முன்னிட்டு கனடாவிலும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனடியத் தமிழர் சமூகம் தெரிவித்துள்ளதாவது:

உலக அகதிகள் நாளில் தமிழீழ மண்ணில் இனவெறி அரசால் அகதிகளாக்கப்பட்டு, பேரவலத்தை சந்தித்துள்ள எமது மக்களின் அவலத்தை வெளிக்கொணர்வோம்.

ஒன்ராறியோ நாடாளுமன்றம் முன்பாக உள்ள குயின்ஸ் பார்க்கில் எதிர்வரும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

காலத்தின் கடமை கருதி நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.