Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், மேற்பட்டோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30/06/2009, 22:53 ]

வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், மேற்பட்டோர் காயம்

செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இரண்டுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் கட்டப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைப்பதற்கு முகாமில் உள்ளவர்கள் முயற்சித்ததாகவும், அதனைத் தடுப்பதற்காக படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலிலேயே முகாமில் இருந்த அப்பாவிப் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து முகாமில் உள்ள பொதுமக்களுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று உருவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இருவரது உடலங்களும் படையினரால் அப்பகுதியில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டுவிட்டன.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வெளித்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான தகவல்களை இப்போதுதான் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

இராமநாதன் முகாமையும், ஆனந்தக்குமாரசாமி முகாமையும் பிரிக்கும் வகையில் முட்கம்பி வேலி ஒன்று படையினரால் அமைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைக் கண்டுபிடிக்கும் படையினர் முகாமில் உள்ளவர்களை எச்சரிப்பதுடன், அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாதவாறு உடனடியாகவே அடைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்ந்தமையால் குறிப்பிட்ட பகுதியில் சீமெந்து தூண்களை அமைத்த படையினர் முட்கம்பி வேலிகளைக் இறுக்கமாகக் கட்டியுள்ளனர்.

இருந்தபோதிலும் தடுப்பு முகாமில் உள்ளவர்கள் இதனையும் வெட்டி அதற்கு ஊடாக பாதை ஒன்றை அமைத்து மற்றைய முகாமுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியுள்ளர். இதனை அவதானித்த படையினர் முட்கம்பிகளைப் பெருமளவுக்குப் பயன்படுத்தி அவற்றுக்கு இடையால் செல்ல முடியாதவாறு செங்குத்தாகவும் முட்கம்பிகளைக் கட்டியுள்ளனர்.

இதனால் தமது உறவினர்களைச் சந்திக்க முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையாகவும் பாதை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே படையினர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தி இருவரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்திலேயே இருவரும் கொல்லப்பட்டதாகவும், அவர்களுடைய உடலங்கள் படையினரால் அங்கிருந்து உடனடியாகவே அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட இரண்டு முகாம்களிலும் பெரும் அச்ச நிலை காணப்படுகின்றது.

புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 1, ஜூலை 2009 (12:27 IST)

இலங்கை: முகாமில் உள்ள உறவினர்களை பார்க்க முயன்ற 2 தமிழர்கள் சுட்டு கொலை

உறவினர்களைப் பார்க்க இலங்கை ராணுவம் அனுமதிக்காததால் முள் வேலியைத் தாண்டிச் சென்று பார்ப்பதற்காக பாதை அமைக்க முயன்ற இரு தமிழர்களை ராணுவத்தினர் மிருகத்தனமாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இதனால் போர் முடிந்த பிறகும் கூட ஊர்களுக்குத் திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை போலவே உள்ளது இந்த முகாம்கள். முள் வேலிகளால் இந்த முகாம்கள் சூழப்பட்டுள்ளன. ராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் அடிமைகளைப் போல கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.

குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்படாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

இந்த நிலையில் உறவினர்களைப் பார்க்க முடியாததால், முள் வேலியைத் தாண்டிச் செல்ல பாதை அமைத்ததற்காக 2 தமிழர்களை குருவி சுடுவது போல கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது ராணுவம்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் முள் வேலி வைத்து பிரித்துள்ளனர்,.

இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதைப் பார்த்த ராணுவம் முகாம்களில் உள்ளவர்களை எச்சரித்து பாதையையும் மூடி விட்டனர். ஆனால் அப்படியும் தமிழ் மக்கள் பாதையை திறந்து போய் வந்ததால், சிமென்ட் தூண்களை வைத்து இறுக்கமாக அதை அடைத்து விட்டனர்.

ஆனால் அதையும் தகர்த்து பாதை அமைத்து தமிழ் மக்கள் சென்று வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அநியாயமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை ராணுவம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டது.

உறவினர்களைப் பார்ப்பதற்காக பாதையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு அப்பாவிகளை ராணுவம் இப்படி மிருகத்தனமாக கொன்று விட்டதால் இரு முகாம்களிலும் தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.

நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.