Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிடம் போதிய நிதி இல்லையாம்: வவுனியா தடுப்பு முகாம்களுக்கான உணவுப் பொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி

Featured Replies

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட உணவுக்கான தொகையைச் செலுத்த முடியாத நிலைமையில் சிறிலங்கா அரசு இருப்பதால், முகாமில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்குமான உணவுப் பொருட்களை தொடர்ந்தும் வழங்குவதில் அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களுக்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசு தவறிவிட்டதால், அதற்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்திய உணவு விநியோகஸ்த்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அகதிகளுக்கான உணவுப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்திவிட்டனர்.

முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியமைக்காக இந்த உணவு விநியோகஸ்தர்களுக்கு அரசு 30 கோடி ரூபாவை வழங்க வேண்டியுள்ள போதிலும், நிதி நிலைமை காரணமாக அதனை வழங்குவதற்கு அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில் இந்தத் தொகையை குறைத்து வழங்குவதறகும் அரசு முயற்சிப்பதாகக் கூறப்படுகின்றது.

போரின் காரணமாக இடம்பெயர்நது பெருந்தொகையான மக்கள் வந்தபோது அவர்களைப் பராமரிப்பதற்காகவும், அவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவதற்காகவும் அரசு சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டது. அதன்படி ஒரு நாளுக்கான மூன்று நேர உணவுக்குமாகச் சேர்த்து ஒருவருக்கு 130 ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

தொடக்கத்தில் இந்த முகாமில் சுமார் 50 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்களே இருந்தபோதிலும் இறுதிக்கட்டப் போரின் முடிவில் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது.

இருந்தபோதிலும் பெப்ரவரி மாதம் 6 ஆம் நாளுக்குப்பின்னர் எந்தவிதமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என உணவுப் பொருட்களை வழங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே தமது கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய உணவு விநியோகஸ்த்தர்கள், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் உணவு விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனால், முகாமில் உள்ள மூன்று லட்சம் மக்களும் உணவுப் பொருட்களுக்காகப் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது இதற்காக வவுனியா கச்சேரிக்கு 15 கோடி ரூபா அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இதுவரையில் அந்தக் கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கோ, உணவுப் பொருட்களின் விநியோகத்தை சீரமைப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

புதினம்

இருந்தபோதிலும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கோ, உணவுப் பொருட்களின் விநியோகத்தை சீரமைப்பதற்கோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இப்படியான சூழ்நிலையில் புறநிலை கட்டமைப்பு(அதாவது புறநிலைஅரசு) முன் வந்து உதவிகள் செய்தால் எம்மவர்களின் துயர் துடைக்கலாம்

ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தை அணுப்பி ,தொடர்ந்து உணவுகளை வழங்கும்படியும் அதற்கான பணத்தை நாடுகடந்த அரசு வழங்கும் என்று சொன்னால் நல்லம்தானே

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.