Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல் காலம் தொடர்பான தமது தகவல்களை சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும்: மன்னிப்புச் சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிக்காலப் பகுதியில் நிலவிய சூழ் நிலை மற்றும் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாகத் தம்மிடமுள்ள அனைத்து தகவல்களையும் ஐ.நாவும் உலக நாடு களும், சர்வதேசமனிதாபிமான அமைப்புகளும் பகிரங்கப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டு கோள் விடுத்துள்ளது.

அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்த விடயங்கள் யுத்த குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கான அவசியத்தை மீண்டும் புலப்படுத்தியுள்ளன எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது.

மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிக்காலப் பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பிழையான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின்பேரில் அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகள் இரு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளுக்கான அவசியத்தை மீண்டும் புலப்படுத்தியுள்ளன.

வைத்தியர்கள் தமது சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கான அனுமதி வழங்கப்படாத நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசின் அழுத்தங்கள், சித்திரவதைகள், மோசமாக நடத்தப்படுத்துதல் போன்றவற்றினால் அவர்கள் பாதிக்கப்படலாம்.

வைத்தியர்களின் இப்போதைய அறிக்கைகளுக்கும், சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறி இரண்டு மாதகால பகுதிக்குப் பின்னர் அவர்கள் தாம் முன்னர் கூறியவற்றை மறுத்துள்ளனர்.

இவை குறித்து சர்வதேசமன்னிப்புச் சபை கவலை கொண்டுள்ளது. வைத்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் சர்வதேசமன்னிப்புச் சபை தொடர்ந்தும் சிரத்தை கொண்டுள்ளது. இலங்கையில் வழமையான விடயம்மோதலில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்களுக்கு தனித்துவமான வைத்திய சேவையை வழங்கியமைக்காக இவர்களைப் பாராட்ட வேண்டும்.

இவர்கள் தண்டிக்கப்படக்கூடாது. அரசின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவான பேட்டிகளை ஊடகங்களுக்கு வழங்குமாறு தடுத்து வைக்கப்படுபவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவது இலங்கையில் வழமையான விடயம். இவ்வாறான சூழ்நிலையில் வைத்தியர்களின் அறிக்கையை ஊர்ஜிதம் செய்வது சாத்தியமற்றது.

நெருக்கடியான சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுயாதீன சர்வதேசஅமைப்புகளின் தகவல்கள், வைத்தியர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக உள்ளன. செஞ்சிலுவைக் குழுவும் ஐ.நாவும் நேரில் பார்த்து உறுதி செய்துள்ளனர்.

பெப்ரவரி முதல் மே 9 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்த வைத்தியர்களின் உதவியுடன் 14 ஆயிரம் நோயாளிகள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கியவர்களை வெளியேற்றினர் என செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஏப்பிரல் நடுப்பகுதி வரையான காலப் பகுதியில் 650 பேரே காயமடைந்துள்ளனர் என வைத்தியர் வரதராஜா கடந்த வாரம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஷெல் வீச்சிற்கு இலக்கானது என்பதையும் வைத்தியர்கள் நிராகரித்துள்ளனர்.

எனினும், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவும், ஐ.நாவும் இந்த ஷெல் தாக்குதலை நேரில் பார்த்து உறுதி செய்துள்ளன. வைத்தியசாலைகள் ஷெல் வீச்சிற்கு உள்ளான பின்னர் வைத்தியர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் மன்னிப்புச் சபையிடம் உள்ளன.

வைத்தியர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்காக அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறு மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.