Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வா ? பறிப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வா ? பறிப்பா?

விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு தலைமை வகித்த சரத் பொன்சேக்காவை, ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது சொல்லாமல் வீடு செல், என்ற தொனியில் உபசரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளமையால் சரத் பொன்சேக்காவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது கொள்கை ரீதியாக பலம்சேர்த்த ஜாதிக ஹெல உறுமய, போர் வெற்றியின் பின்னர் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டதைப் போன்றே சரத் பொன்சேக்காவும் தற்போது உபசரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் பின்னர், நாட்டின் எதிர்கால பாதுகாப்புடன் தொடர்புடைய பல செயற்திட்டங்களை முன்வைத்த சரத் பொன்சேக்கா, இந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தம்மை மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பதவி நீடித்து அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேக்காவை பாதுகாப்புச் சபையின் தலைவராக நியமித்து, புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமனம் செய்துள்ளார். சரத் பொன்சேக்காவின் பதவிக்காலத்துக்குப் பின்னர், அடுத்த இராணுவத் தளபதியாக்கும் எதிர்பார்ப்புடன் சரத் பொன்சேக்காவினால் ஆதரவு வழங்கப்பட்டு வந்த, மேஜர் ஜெனரல் எல்.பீ.சந்திரசிறியை ஓய்வில் அனுப்புவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர் தற்போது வடமாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவையும் ஓய்வுபெறச் செய்துள்ள மகிந்த, அவரை ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளார். புதிய கடற்படைத் தளபதியாக திசர சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அனைத்து நியமனங்களும் எதிர்வரும் 15ம் திகதி உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.

இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, பாதுகாப்புச் சபையின் தலைவராக பதவியமர்த்தப்பட்டுள்ளமை அவருக்கு அரசாங்கத்தினால் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டாலும், இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தகவல் தருகையில், சரத் பொன்சேக்காவிற்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்பது எவ்விதமான செயற்திறனுமற்ற ஒன்றாகும் எனக் கூறினார். இந்தப் பதவியைப் பொறுப்பேற்காது, இராணுவத் தளபதியாகவே பதவி நீடிக்க சரத் பொன்சேக்கா எதிர்பார்த்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.meenagam.org/?p=5598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.