Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதண்டனையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை

வீரகேசரி நாளேடு 7/16/2009 8:43:24 AM -

மரணதண்டனை தீர்ப்பை அமுல்படுத்துவது சர்வதேச மற்றும் சட்ட ரீதியில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். என்றாலும் மரணதண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்று நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடுதிரும்பியதும் மரணதண்டனையை இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பில் நீதியமைச்சர், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டுவார் என்றும் அவர் சொன்னார்.

நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:

பொலிஸாருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 200 கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றிக்கொள்வதில் சமூக மற்றும் சட்டப்பிரச்சினை இருக்கின்றது. இவை சர்வதேச மற்றும் சட்ட ரீதியில் விவாதிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தலாம் என்றும் கட்டுப்படுத்த முடியாது என்ற விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பதில் நீதியமைச்சு கூடுதலான அக்கறை செலுத்திவருக்கின்றது. ஜனாதிபதி எகிப்திலிருந்து நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எட்டப்படும். நீதிமன்ற நடவடிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதனால் நாடளாவிய ரீதியில் மாவட்ட,மாகாண மற்றும் மேல் நீதிமன்றங்கள் அடங்கலாக 60 நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அமைச்சரவையிலும் ஆராயப்பட்டுள்ளது. வழக்கொன்றை விசாரணை செய்யும் போது அதற்கு கால வரையறையொன்றை வகுக்கவேண்டும் அந்த. முறைமை இலங்கையில் இல்லை என்பதனாலும் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு உட்படுத்தும் போது காலநிர்வாகத்தை ஏற்படுத்தவேண்டும்.

நாடளாவிய ரீதியிலுள்ள சமாதான சபைகளில் 6000 பேர் இருக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளிவருவதில்லை. சமாதான சபையினால் தீர்த்து வைக்கப்படும் பிணக்குகள் தொடர்பிலான விபரங்கள் வெளிக்கொணரப்படுமாயின் நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தலாம்.

இருக்கின்ற சட்ட இடையூறுகளை நீக்கி சட்ட ஒழுங்குகளை ஏற்படுத்தி அதனை விஸ்தரிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் அடுத்தவாரமளவில் விரிவாக ஆராயப்பட்டு குறுகிய காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு மீண்டும் கொண்டுவரப்படும். பிரித்தானிய காலத்தில் மக்களை பயமுறுத்தும் வகையில் பிரதான நகரங்களின் நுழைவாயில்களிலேயே சிறைச்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 41 ஏக்கர் விஸ்திரமான வெலிக்கடை சிறைச்சாலையை அவிசாவளைக்கு இடமாற்றுவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி போகம்பறை சிறைச்சாலையை பல்லேகலைக்கு மாற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் இடமாற்றப்பட்டதும் இவ்விரு கட்டிடங்களும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். யாழ். சிறைச்சாலையை பொறுத்தமட்டில் அந்த சிறைச்சாலை உடைக்கப்பட்டமையினால் அங்குள்ள கைதிகள் நரக வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை நியமனங்களின் பிரகாரம் சிறைக்கைதியொருவரை பராமரிப்பதற்கு நாளொன்றுக்கு 260 ரூபா செலவிடப்படுகின்றது. இதன் மூலமாக இலங்கையில் நாளொன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. சிறைச்சாலைகளில் கைதிகளுடன் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 2000 இராணுவத்தினரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.ர் இது ஆபத்தானதாகும்.

அது மட்டுமன்றி இராணுவத்திலிருந்து தப்பியோடிய சுமார் 65 ஆயிரம் பேர் இன்னும் தலைமறைவாகவே இருக்கின்றனர். அவர்களும் கைதுசெய்யப்படுவார்களாயின் சிறைச்சாலையின் நிலைமை மோசமானதாகவே அமையும் என்பதனால் அவ்வாறானவர்களை நீண்ட நாட்களுக்கு தடுத்து வைத்திருக்காமல் குறைந்தளவான தண்டனையை வழங்குவது தொடர்பிலும் நீதியமைச்சு ஆராய்ந்து வருக்கின்றது. இதேவேளை சிறைச்சாலைக்குள் செல்கின்ற அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களை சோதனை செய்வதற்கு படையினர் மற்றும் பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் சிறையதிகாரிகள் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனை சட்டம்…?

மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்காவின் நீதிமன்ற மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈஜிப்திலிருந்து நாடு திரும்பியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் மிலிந்த மொரகொட வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை உயர்வடைந்துள்ளதாகவும், சிறைச்சாலைகளுக்குள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

http://www.meenagam.org/?p=5801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.