Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருந்தொகைப் பணத்தை வாரி இறைத்து மக்களை அடைத்து வைத்திருப்பது கூட்டுத்தண்டனை--வ.திருநாவுக்கரசு

Featured Replies

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஏறத்தாழ 2 மாதங்கள் கழிந்துவிட்டன. ஆயினும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்து வந்துள்ளதே தவிர, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையாகிய அடிப்படைப்

பிரச்சினைக்கு நியாயமானதும் நம்பகத்தன்மையானதுமான அரசியல் தீர்வு காண்பதற்கு எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அது விடயமாக ஏனோதானோ என்ற விதத்தில்

செயற்பட்டு வருகிறது. தன்னிச்சையான முறையிலான தீர்வொன்றினைத் தமிழர் மீது திணிக்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது எனலாம்.

ஜனாதிபதி "இந்து' ராமுக்கு வழங்கிய பேட்டி

சென்றவாரம் கொழும்பில் வைத்து சென்னை "இந்து' பத்திரிகை ஆசிரியர் நரசிம்மன் ராமுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ வழங்கிய செவ்வியிலிருந்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் நன்கு தெளிவாகியுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றியீட்டி புதிதாக ஆணையைப் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் தனக்கு ஏற்கனவே மக்களிடமிருந்து கிடைத்த ஆணையைப் பயன்படுத்தப்போவதாகவும் "என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்பது தனக்குத் தெரியும். அதனை நான் நாளைக்கும் செய்து விடலாம்' எனவும் கூறியுள்ளார். ஆக, இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாகப் பேசப்படுகிறதே தவிர, அரசாங்கத்திடம் உறுதியான நிலைப்பாடோ ஆக்கபூர்வமான அணுகுமுறையோ கிடையாது என்பதையே காணமுடிகிறது. எனவே, அரசியல் தீர்வு விடயமானது தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருவதையே காணமுடிகிறது.

ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகம் உடன்படிக்கை

அரசியல் தீர்வு தொடர்பாகக் கடந்த மே மாதப் பிற்பகுதியில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான விஜயத்தின் போது ஐ.நா.வும் இலங்கை அரசாங்கமும் விடுத்த கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது;

"நீண்டகால சமூகபொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு எல்லா சமூகங்களினதும் அபிலாசைகள் மீது கவனம் செலுத்தி ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி உழைப்பது அடிப்படைத் தேவையாகுமென ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஐ.நா.செயலாளர் நாயகமும் இணக்கம் தெரிவித்தனர்.'

மேலும், மே மாத இறுதியில் ஐ.நா.மனித உரிமைகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் "இராணுவத் தீர்வை ஒரு இறுதித் தீர்வாகக் கருதவில்லையெனவும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இலங்கையில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரப்போவதாகவும் இலங்கை ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததும் நினைவு கூரத்தக்கதாகும்.

ஐ.நா.செயலாளர் நாயகம் சென்ற மாத நடுப்பகுதியில் விடுத்த அறிக்கையில், ஜனாதிபதி ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்தியதோடு, "இலங்கையில் கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் தலைதூக்காமலிருக்க வேண்டுமாயின், இலங்கை அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினரையும் ஏனையோரையும் அரவணைக்க வேண்டும். நல்லிணக்கத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை ஒன்றுக்கு இரண்டு முறை வலியுறுத்துகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இனிமேல் இனவாதத்திற்கு இடமில்லை ஜனாதிபதி

இனிமேல் இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இன்று கூறிவருகிறார். இதில் குழப்பம் என்னவென்றால், அவர் சிங்களபௌத்த மேலாதிக்கத்திற்கு இசைவாயிருப்பதாகும். இதன் பிரதிபலிப்பாகவே ஒற்றையாட்சி முறைமையில் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டினை "சமஷ்டி முறைமைக்கு இந்த நாட்டில் இடமில்லை' என்று "இந்து' ஆசிரியர் ராமுக்கு வழங்கிய செவ்வியில் அடித்துக் கூறியுள்ளார். எனவே, இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை எனும்போது அது உதட்டளவில்தான் என்று கூறினால் அதில் தவறேதும் இருக்கமுடியாது.

13 ஆவது திருத்தத்தைத் தானும் நடைமுறைப்படுத்தினால் குறிப்பாகக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படுமாயின், தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக "ஜாதிக ஹெல உறுமய' (ஜே.எச்.யூ.) எச்சரிக்கை விடுத்திருந்தது. மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அரசியல் தீர்வு என்றொன்று அவசியமில்லையெனத் தேசிய விடுதலை முன்னணி (Nஊஊ) தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு பற்றியெல்லாம் பேசும் அமைச்சர்களின் வாய்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பூட்டுப்போட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். ஆயுதப்படையினருக்கு நடத்தப்பட்ட வெற்றி விழாவின்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உரையாற்றுகையில், அரசியல் தீர்வின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர் விதாரணவைக் கடிந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அடுத்து, ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அதிகாரப்பகிர்வு என்ற பேச்சுக்கு இடமில்லை என்பது அக்கட்சியின் அசைக்க முடியாத நிலைப்பாடாகும். அதிகாரப்பகிர்வு என்பது பிரிவினைவாதமேயொழிய வேறல்ல என்பது அக்கட்சியின் குருட்டுத்தனமான போக்காகும். மேலும், தற்போதைய அரசியலமைப்பில் "சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாகும். அத்தோடு தமிழும் அரச கரும மொழியாயிருக்கும்' எனக் கூறப்பட்டிருப்பதற்குப் பதிலாக "சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாயிருக்கும்' என மாற்றம் செய்யப்பட்டால் போதுமானதாகும் என்பதே ஜே.வி.பி.யின் அணுகுமுறையாகவுள்ளது.

அதே நேரத்தில், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது போல வவுனியா முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 300,000 அகதிகளுக்காக ஜே.வி.பி.பரிந்து பேசுவதானது மிகுந்த வேடிக்கையாயுள்ளது. நாட்டின் பிரச்சினையாயிருந்து வந்தது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதமேயொழிய வேறொன்றல்ல என சிங்களப் பேரினவாத சக்திகள் சிந்திக்கின்றனவே தவிர, 3 தசாப்த காலமாக அடிப்படைப் பிரச்சினைக்கு சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட அரசாங்கங்கள் அர்த்தபுஷ்டியான தீர்வு காணத் தவறியது மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டு பலத்த அழித்தொழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலேயே தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதென்பதைப் புரிந்துகொள்ள வக்கற்ற புல்லறிவு படைத்தவர்கள் தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு குந்தகமானவர்கள் என்பது ஆளும் வர்க்கங்களினால் ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த தலைமைத்துவக் குணாம்சங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டும் ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறியாகக் கொண்டு கழுத்தறுப்புப் போட்டிகளில் ஈடுபட்டு இனவாதத்தையும் விதைத்துவிட்டன.

அகதிகள் (ஐஈககு) பிரச்சினை

"இந்து' ஆசிரியர் ராமுக்கு வழங்கிய மேற்படி செவ்வியில், "எமது முகாம்களிலுள்ள நிலைமைகள் வேறுஎந்தவொரு நாட்டில் காணப்படுவதைக் காட்டிலும் சிறப்பாயுள்ளன' என ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இவ்வாறாக உலகிலேயே சிறந்த முகாம்களென சித்திரிக்கப்பட்டிருக்கும் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் இராணுவத்தினரின் கண்காணிப்பில் வெளியில் நடமாடமுடியாமல், வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளனர் என்பது ஒருபுறம். மறுபுறத்தில் சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பலத்த பற்றாக்குறையாயிருப்பதோடு, படுமோசமான சன நெரிசல் நிலவுவதாகவும் அறியக்கிடக்கிறது.

நிதிப்பற்றாக்குறை காரணமாக அகதிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அம்போ என்ற நிலையிலேயே உள்ளன. ஆனால், ராம் கொழும்பு வந்ததும் வராததுமாக வவுனியாவுக்கு விரைந்து முகாம்களைப் பார்வையிட்ட பின் சமர்ப்பித்த அறிக்கையில், முகாம்களில் நிலைமைகள் திருப்திகரமாயிருப்பதாகவும் அந்த வகையில் இலங்கை உலகிற்கு முன்னுதாரணமாயிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்திய கருத்திற்கு ஒத்ததாகவே ராம் வெளியிட்ட அறிக்கையும் காணப்படுகிறது. தனக்கு மிக நெருக்கமானதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானதுமான அதிகாரிகளை அனுப்பியே அறிக்கை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையில், ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சென்றவாரம் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்தின்படி வவுனியா முகாம்களிலுள்ள அகதிகளை தமது சொந்த வீடுவாசல்களில் மீளக்குடியமர்த்துவதற்கு நீண்டகாலம் செல்லும். அதாவது அவர்கள் 30 வருடங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளதன் காரணமாக அவர்களின் மனோநிலை பலத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோராலும் கதைக்க முடியுதே தவிர நடத்தமுடியவில்லை. தமிழர்களுக்கெதிராக எல்லோரும் நடத்தினார்கள். தமிழர்களுக்கு சார்பாக நடத்தமுடியவில்லை. எல்லாம் ஒரு சாடகம் தான். போரை நிறுத்து என்று சொல்லிக்கொண்டு கப்பல் கப்பலாக ஆயுதமும், பின்பக்கக்கதவால் ஆலோசனைககும் வழங்கி ஏமாற்றியது போல் இன்னும் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களுக்குத்தான் இந்த நாடகத்தைக் காட்டி ஏமாற்ற முடியும். உலகை உருவாக்கியவனுக்கும் கயிறு விட முடியுமா? எல்லாம் தற்காலிகம் தான். காலம் விரைவில் இயற்கையாகப் பதில் சொல்லும்.

ஈராக்கை அநீதியாக அழித்தவர்கள் இன்று அகல பாதாளத்தலிருந்து மேல்கரையை எட்டமுடியாது துடிக்கின்றனர். அங்கே அழிக்கும்போது இறைவன் இங்கே பாதாளத்தில் தள்ளிவிட்டான். ஈராக்கைவிட இங்கே பிரச்சனை அதிகமாகிவிட்டது. இது அவன் கொடுத்த தண்டனை. அனுபவி ராஜா அனுபவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.