Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்கு எதிரான நடவடிக்கை மக்களுக்கு எதிரானது என்ற வாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாடொன்றின் மீது விதிக்கப்படும் தடை அந்த நாட்டு மக்களையே பாதிக்கின்றது. நாட்டு மக்களைத் தண்டிப்பதை சர்வதேச சமூகம் அனுமதிக்கக் கூடாது." என்று எகிப் தின் சாம் எல் ஷெய்க் நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடு களின் பதினைந்தாவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

அதாவது நாடு ஒன்று அதன் தலைமை ஒன்று இழைத் ததாகக் கூறப்படும் தவறுக்காக அந்த நாட்டையோ அல் லது அதன் மூலம் அந்த மக்களையோ தண்டிக்கக்கூடாது என்று சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச்சொல்ல விழைந் திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி.

இதே போன்ற கருத்தை சில நாள்களுக்கு முன்னர் அமெ ரிக்காவின் "ரைம்" சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலும் ஜனா திபதி தெரிவித்திருக்கிறார்.

"ஓர் அரசு தவறாக நடந்து கொண்டது என்பதற்காக அந்த நாட்டின் அனைத்து மக்களையும் தண்டிக்கப் போகின் றீர்களா? இல்லை, அதற்குப் பொறுப்பானவர்களையா? இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நானே இந்த மனித உரிமைகளை மீறி மக்களைக் கொன்றேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், சரியா? நீங்கள் என்னை மஹிந்த ராஜபக்ஷவை தண்டிப்பீர்களா? அல்லது தடைகள், முட்டுக்கட்டைகள், தட்டுப்பாடுகள், பயணக் கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் போட்டு அப்பாவி மக் களை முடக்குவீர்களா? என்னைத் தண்டிப்பதாயின் கூட அதற்கு வழி உண்டே!" என்று ஜனாதிபதி அந்தப் பேட் டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேபோன்ற கருத்தை அரசுப் படைகளின் சிரேஷ்ட அதிகாரியாகப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் குறிப்பிட்டிருக்கின்றார். யுத்தக் குற்றங்களுக்கான விசாரணை எவையும் இலங்கைப் படைகள் எதிர் கொள்ள வேண்டி நேராது என்று அவர் அடித்துக் கூறியிருக்கிறாரர்.

இத்தகைய கருத்துக்கள், இலங்கைக்கு எதிரான சில சர்வதேச நடவடிக்கைகளுக்கான முனைப்புகள் காணப் படுவதையும் அது இலங்கை அரசுத் தலைமைக்கு அசெளகரியமான நிலையை உருவாக்கியிருக்கின்றமை யையும் வெளிப்படுத்தி நிற்கின்றன என்பது பிரத்தியட்சம்.

வன்னியில் இறுதிப் போர் தீவிரமடைந்த நிலையில் அரங்கேறிய கொடூரங்கள் தொடர்பாக எழுந்த அதிர்வலை கள் சர்வதேச சமூகத்தை இன்னும் ஆற்றுப்படுத்த வில்லை என்பதும் மறுக்க முடியாததாகும்.

அரசுப் படைகள் தொடுத்த தீவிர யுத்தத்தில் அப் பாவிப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் நேரவில்லை, உயிரி ழப்பு ஏற்படாமலேயே "மக்களை மீட்கும் அந்த மனிதாபி மான நடவடிக்கையை" இலங்கைப்படைகள் வெற்றிகர மாக மேற்கொண்டன என அரசுத் தலைமையும், படைத் தலைமையும் கூறிக் கொண்டாலும் கூட, இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் வெறுமனே சொல்வதைச் செவிமடுக்கும் ஜந்து அல்ல, அதற்கும் விடயங்களை நோக்கி, உய்த்தறிவதற்கான புலன்கள் நுணுக்கமாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

வன்னி யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த சமயம் அந்த மண்ணில் இருந்தபடி, யுத்தப் பேரிழப்புகள் பற்றிய புள்ளி விவரங்களை வெளிப்படுத்திய டாக்டர்கள் இப்போது தடுப்புக்காவலில் உள்ளனர். அவர்களைப் பின்னர், ஊட கவியலாளர் மாநாடு ஒன்றை அழைத்துக் காட்சிப்படுத்திய அரசுத் தலைமை, யுத்த காலத்தில் அவர்கள் கூறிய கருத் துக்கள் மற்றும் தகவல்கள், புள்ளி விவரங்கள் போன்றவை விடுதலைப் புலிகளின் அழுத்தத்தின் பேரில் வெளியிடப் பட்ட தவறான விடயங்கள் என்றும், யுத்த காலத்தில் ஒரு சில நூறு பேர் மட்டுமே உயிரிழக்கவும் ஒரு சில நூறு பேர் மட்டுமே காயமடையவும் நேரிட்டது என்பதே உண்மை என்றும் அவர்களைக் கொண்டே கூற வைத்தது.

ஆனால் இந்த யுத்த காலத்தில் படுகாயமடைந்த நிலையில் வன்னியில் பெரு நிலப்பரப்பில் இருந்து கப் பல் மூலமும் வேறு வழிகளிலும் வெளியே கொண்டு வரப் பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கையே பல்லாயிரக் கணக்கில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, தற்போது அர சுப் படைகளின் காவலில் உள்ள சமயம் இந்த டாக்டர்கள் குறிப்பிடும் புள்ளி விவரங்கள் எங்கோ இடிக்கின்றன என்ற நிலையை சில சர்வதேச மனித உரிமைகள் அமைப் புகள் அம்பலப்படுத்தி சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பின்புலத்திலேயே நாட்டு மக்களைப் பாதிப் புக்குள் ஆழ்த்தும் வகையில் தண்டிப்பு நடவடிக்கை களுக்கு சர்வதேச நாடு எத்தனிக்கக்கூடாது என்ற உப தேசம் இலங்கை அரசுத்தலைமையால் முன்வைக்கப் பட்டு வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தேசக் கடன் வசதி முடக்கம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை வகைகள் உட்பட சில ஏற்றுமதிப் பொருள்களுக்காக இலங்கைக்கு விசேட வரி விலக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. சலுகையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக்கொள்ளும் யோசனை, சில பயணத்தடை கள் விதிக்கப்படும் திட்டம் என்பன போன்ற பல்வேறு ஊகங்களுக்கு மத்தியிலேயே இந்தக் கருத்துக்கள் பிரதி பலிக்கப்படுகின்றன என்பதும் கவனிக் கத்தக்கது.

அதுவும், மேற்படி சர்ச்சையை உருவாக்கியுள்ள வன் னித் தீவிர யுத்தம் குறித்தும், அப்போது கட்டவிழ்ந்த பயங் கரங்களின் உண்மை நிலை குறித்தும் விரிவான விசார ணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற மேற்குல கின் குரல், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத் துவ நாடுகளின் வலிமை மூலம் குரல்வளை நசுக்கப் பட்டு ஒடுக்கப்பட்ட பின்னனியிலேயே இத்தகைய தண்டிப்பு நடவடிக்கைகள் குறித்து பிரஸ்தாபிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.

சர்வதேசம் விசாரிக்க முற்படுவது நாட்டின் இறைமை யில் தலையிடும் செயல் என்றும்

உதவித்திட்டங்கள், வசதிகள், சலுகைகள் போன்ற வற்றை முடக்குவது. நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதி ரான நடவடிக்கை என்றும்

விமர்சனப்படுத்தப்படுவதால் இவ்விடயத்துக்கு எப் படித்தான் தீர்வு காண்பதோ....? மேற்குலகுக்குத்தான் வெளிச்சம்.....!

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.