Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் முதல் இரண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே

மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும்.

ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல்.

இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல்.

மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல்.

நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல்.

ஐந்து எமது இளைய தலைமுறைக்குத்தகுந்த கல்வியறிவைப்புகட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடல்................

இப்படியே எமது கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் நாளும் நீண்டு செல்கின்றன.

ஆனாலும் தற்போதைய நிலையில் நாம் முதல் இரண்டு நோக்கத்திற்காகவும் கடுமையாக உழைக்கவேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பது அவரவர் வாழும் தேசங்களிற்கேற்ப மாறுபட்டுக்கிடக்கின்றன.

ஆனால் இற்றைவரை போராடிய தமிழினம் தனது வேட்கையை சற்றுக்குறைத்துக்கொண்டதாக உணர்கின்றோம்.

இதற்குக்காரணம் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட வெற்றிடமே என எல்லோரும் கருதுகின்றார்கள்.

ஆனால் எமது இலட்சிய நோக்கத்தை திசை திருப்புமுகமாக ஒரு சில தமிழர் செயற்படுவது கவலைக்குரிய விடயமே.

இருப்பினும் "எறும்பூர கற்குழியும்" என்ற பழமொழிக்கேற்ப நாம் செயற்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என்னுடைய தயவான வேண்டுகோள்.

இதுவரை எனக்குத்தெரிந்தவைகளை உங்களுக்குத் தருகின்றேன்.

1) அவரவர் வாழும் பிரதேசங்களில் இருக்கும் பத்திரிகைகளுக்கு தற்போது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை ஒவ்வொரு கிழமையும் தெரியப்படுத்துங்கள் அதாவது முதன்முறை அனுப்பும் போது

* "UNSPEAKABLE TRUTH" ஏன்ற புத்தகத்துடன் ஒரு

* "ADDENDUM" ஐயும் அதாவது (எமது போராட்டம் பற்றித்தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கக்குறிப்பு)

* கடந்த கிழமை நடைபெற்ற செய்திகளையும் கொண்ட ஒரு கடிதமும்

* செய்திகள் வெளிவந்த இணையப்பக்கங்களையும் (FROM FAMOUS ENGLISH NEWSPAPERS)

சேர்த்து அனுப்புங்கள்.

மீண்டும் அடுத்தமுறை பிரதம ஆசிரியரை ( E- MAIL) மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வார நிகழ்ச்சிகளையும் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தொடர்ந்து செய்யுங்கள் ஒருபோதும் இம்முயற்சி வீணாகாது. அத்தோடு மட்டும் நின்று விடாது பத்திரிகை ஆசிரியர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறே நீங்கள் இருக்கும் ஒவ்வொரு SUBURB இலும் உள்ள COMMUNITY NEWSPAPERS அனைத்தையும் தொடர்பு கொள்ளுங்கள்.

2) நான் மேற்கூறியது போல் ஒவ்வொரு தன்மானத்தமிழனும் அவரவர் இருக்கும் நகரங்களின் MP’s ஐ மேற்கூறிய ஆவணங்களுடன் சந்தித்து இப்போரினால் உங்களிற்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தினையும் உங்களின் உறவுகள் படும் அவலத்தையும் எடுத்துக்கூறி அவர்களை அந்நாட்டு அரசிற்கு தெரியப்படுத்துமாறும் கேளுங்கள்.

இதற்கு நீங்கள் சிறு குழுக்களாகச்செயற்படுவது நலமே அதாவது ஒரு குழு DOCUMENT PREPARATION பண்ணுவதற்கும் மற்றைய குழு MP ஐ பார்த்து பேசுவதற்கு APPOINTMENT ஐ அவ்விடங்களில் வசிக்கும் தமிழர்களிற்கு பெற்றுக்கொடுக்கும் பணிகளிலும் இடையறாது ஈடுபடலாம்.

அதாவது இவற்றின் நோக்கம் வேற்று இன மக்களிடையே எமது பிரச்சினை பற்றி தெரியவைப்பதும் அத்தோடு எதிர் வரும் காலங்களில் எமது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போரிற்கு அவர்கள் எம் பக்கம் திரும்பி பலம் சேர்ப்பார்கள்.

உங்களிற்கு உதாரணம் தேவையெனில் அறியத்தாருங்கள்.

என்றும் நட்புடன்

சாந்தன் தமிழன்

தர்மம் தாழ்வது போல் தெரிந்தாலும் தாழாது ஆனால் அதர்மம் ஓட்டையுள்ள மிதக்கும் பாத்திரம் போன்றது அதுவும் தான், மிதக்கும் சிலகாலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.