Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏலம் போகும் அபாயத்தில் வணங்காமண் நிவாரணம்

Featured Replies

புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் வரவில்லையாம். இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன்

நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது

இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள், கொலராடோ என்ற சரக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க கடந்த 7ம் தேதி இலங்கைக்கு அனுப்பினர். இந்த கப்பல் 9ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்ற பின்னரும், நிவாரணப் பொருட்களை வாங்க செஞ்சிலுவை சங்கத்தினர் இதுவரை வரவில்லை. இதனால் கொழும்பு துறைமுகத்தில் நிவாரணப் பொருட்கள் கடந்த 19 நாட்களாக கேட்பாரற்று இருக்கின்றன.

இது குறித்து சம்பந்தப்பட்ட கன்டெய்னர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவன கன்டெய்னரில் தான் நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கை சென்றன. நிவாரணப் பொருட்களை எடுக்க அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் யாரும் வராததால் எங்கள் கன்டெய்னர்களும் அங்கேயே உள்ளன.

கொழும்பு துறைமுகம் விதிமுறைகளின்படி 21 நாட்களுக்கு மேலானால், அவர்கள் அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது.

இது தொடர்பாக வணங்காமண் கப்பல் ஏஜென்ட், டெல்லியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மனிதம் மனித உரிமை அமைப்பு, லண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளோம் என்றார்.

பாடுபட்டு ஈழத் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை தமிழ் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

மானம் இல்லாத தமிழ் புத்துஜீவிகளே,வக்கீல்களே,மனி

த் உரிமை பேசுபவர்களே இந்த சந்தர்பத்திலாவது உதவுங்கள்

http://www.appaa.com/index.php?option=com_...5&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைஞ்சால் தான் தமிழருக்கு விடிவு எண்டவையும்.. சிங்களப் பேரினவாத அரசாங்கத்தோடு இணைந்து பணிபுரியாட்டி எமது மக்களின் துயரத்தை தீர்க்க முடியாது என்றவையும்.. இப்ப என்ன செய்து கொண்டிருக்கினம். ஆகக் குறைந்தது.. இந்த நிவாரணத்தையாவது மக்களுக்கு வழங்க முயன்றிருக்கலாமே. ஓஓ.. அவைதான் தேர்தலில் ஜெயிஞ்ச பின்னம்.. செய்வம் என்று சொல்லிட்டினம் போல. மக்களின் பட்டினியில் அரசியல் செய்வது.. தேர்தல் நடத்துவதுதான் உலகில் இப்போ ஜனநாயம். முதலில் ஜனநாயகம் பேசுறவையை அணுகுண்டு போட்டு அழிக்க வேணும். அப்பதான் இவங்கள் எல்லாம் திருந்துவாங்கள்..! :D

  • தொடங்கியவர்

தமிழ் கூட்டமைபு,அல்லது டக்லஷ்,அல்லது கருணா யாராவது அவ் நிவாரண பொருடகளை கொண்டு சேருங்கள் உங்களுக்கு புண்ணியமாகபோகும்.

இதில் அவசரம் தேவை உங்கள் நாடுகளில் உள்ள தூதரகங்களை உடனே தொடர்புகொள்ளுங்கள் உறவுகளே தாமதிக்க வேண்டாம்.

நானும் போகக்கூடிய எல்லை வரை போகின்றேன் நம் உறவுகளுக்காக......

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினி போட்டு மக்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற அரக்கனுக்கு சாமரம் வீசும் அரசியல் பன்னாடைகளை முதலில் சுட்டுப் பொசுக்கனும். இத்தனை உலகநாடுகளிருந்தும் ஏனிந்த தண்டனை? பராமுகம்? மனித நேயமே செயலிழந்து போய்விட்டதே. வன்முறையை திணிப்பவனுக்கு உபசாரம்.. அதை எதிர்ப்பவனுக்கு அபச்சாரம் செய்யும் உலகு, இருந்தென்ன.. செத்தாலென்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.