Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் 300 Km நடை பாத போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் 300 Km நடை பாத போராட்டம்

திகதி: 10.08.2009 // தமிழீழம்

இன்று உலகத்தின் எந்த மூலையிலும் எந்த மக்களுக்கும் நிகழ்ந்திடாத மிகப் பெரும் மனித பேரவலம் எமது தமிழர் தாயகத்தில் நடந்திருக்கிறது. கடந்த தை மாதத்திலிருந்து இந்த நிமிடம்வரை 70,000 மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டு 300,000க்கும் அதிகமான தாயக உறவுகள் முட்க் கம்பிகளால் சூழப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில், குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள் வயோதிபர்கள் என, உணவிற்கும் மருந்திற்கும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் சிறீலங்கா அரசிடமும் வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கின்றனர்.

60 வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி படுகொலைகளினாலும், கடந்த 30 வருடங்களாக முனைப்பு பெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பயங்கரவாதம் என்ற பெயரை சூட்டி வெளிநாடுகளுக்கு பரிந்துரைத்து எங்கள் உறவுகளை பட்டனியால் வதைத்து சிறைச் சாலைகளையும்விட மிக மோசமான நிலையில் சித்தரவதை செய்து வரும் சிறீலங்கா அரசின் செயல்களை ஐக்கிய நாடுகள் சபை, உலக மனித உரிமை குழுவினர் மற்றும் வெளிநாட்டு அரசுகள் யாவும் இவ்வளவு காலமாக கண்மூடி மௌனித்து இருந்தனர்.

இன்றைய தமிழ் மக்களின் உண்மை நிலையை விளக்குவதற்கும், இதற்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டும் என்றும், இனியாவது உலகில் எந்த ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் உரிமைகள் போல எங்களது உறவுகளிற்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், மன உறுதியோடு, சுயநலத்தை மறந்து, பாதகமான காலநிலையையும் எதிர்த்து தங்கள் இலற்சியமாக 300,000 மக்களின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு, இரு இளைஞர்கள் நடைபாத போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தின் போது சிறீலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அடிப்படை வசதிகளின்றி 300,000க்கும் மேற்பட்ட எங்களது உறவுகளின் மனித உரிமைக்காக 300,000m (300Km) நடந்து ஒவ்வொருவருக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக இன்று வீதியில் இறங்கி சிட்னியிலிருந்து கன்பரா வரை நடைபாத போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த நடைபாத போராட்டமானது இன்று திங்கட்கிழமை (10.08.09) சிட்னியிலுள்ள மார்ட்டின் பிலேஸ்சில் (Martin Place) 11 மணிக்கு ஆரம்பித்து Liverpool, Campbelltown, Bowral போன்ற நகரங்கள் ஊடாக சென்று இறுதியாக Canberra Parliament Houseல் செவ்வாய்க் கிழமை (18.08.09) மதியம் 12 மணியளவில் முடிவு செய்ய உள்ளார்கள்.

இந்த போராட்டத்தின் போது எங்கள் இளைஞர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் அடிப்படை மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் எமது மக்களுக்கு உடனடியாக உரிமைகள் வழங்கப்பட்டு பட்டினியுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் உடனடியாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப் படவேண்டும் என்றும், உலக நாடுகள் சிறலங்காவிற்கு அழுத்தம் கொடுத்து உடனடியாக இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.

எங்கள் உறவுகளே, நல்லதொரு விடிவிற்காக முயற்சிக்கும் இந்த இரு இளைஞர்களையும் ஒவ்வொருவரும் திரண்டு வந்து உற்சாகமும் ஆதரவும் அளித்து தங்களால் இயன்ற உதவியையும் வழங்கி இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.