Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த பிரித்தானியா அழுத்தம் தரவேண்டும்: வலியுறுத்துகிறது அந்நாட்டு நாடாளுமன்ற வெளிவிவகார குழு

Featured Replies

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

அடுத்த ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் 'கவலைக்குரிய நாடுகளின்' பட்டியலில் இலங்கையையும் சேர்த்துக்கொள்வது என்ற வெளிவிவகார அலுவலகத்தின் முடிவு, அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற சம்பவங்களின் மூலம் பரவலாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். அத்துடன், அந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியதும்கூட.

மே மாதம் 27 ஆம் நாள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற வருத்தமளிக்கக்கூடிய வாக்களிப்புக்கு ஆதரவாக இருக்காமல், இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுபவை தொடர்பில் விசாரிப்பதற்கு அனைத்துலக குற்ற விசாரணைப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், இலங்கையில் பரவியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாத கலாசாரத்தை சரியான முறையில் கையாள்வதற்கு அந்நாட்டு அரசை ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானியா தனது உதவி வழங்கும் வல்லமையை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாம் பரிந்துரை செய்கிறோம்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மே மாதம் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிராகரிக்கப்பட்டது பெரிதும் வருத்தமளிக்கக்கூடியதுடன் சபையின் நம்பகத்தன்மையையும் சிதைத்துள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

உள்ளக அரசியல் முரண்பாடுகள் காரணமாக குறித்த தரப்புகளால் மனித உரிமைகள் மீறப்படும் போது, அது அந்த நாட்டு அரசின் கவனத்திற்குரிய உள்நாட்டுப் பிரச்சினை மட்டுமே என்ற வகையில் பார்க்கப்படக்கூடாது என்ற பிரித்தானிய அரசின் அணுகுமுறையை அது தொடரவேண்டும் என நாம் பரிந்துரை செய்கிறோம்.

சிறிலங்கா விவகாரம் குறித்து தனது கவனத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் உரிமையும் அனைத்துலக சமூகத்திற்கு உண்டு என்பதுடன் பிரதானமான முறைகேடு இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் சூழல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்திற்கும் நாம் வந்துள்ளோம்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மீதான பகைமை உணர்வு ஆபிரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் அதிகரித்து வருகின்றது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். குறிப்பாக நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது என சூடான் மறுத்துள்ளது.

இது மேற்குலக நாடுகளுக்கும் ஏனைய சில நாடுகளுக்கும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையில் நாடுகளின் இறைமை மற்றும் மனித உரிமை விடயங்களில் காணப்படும் தெளிவான பிளவைக் காட்டுகின்றது.

உதாரணமாக, இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த விசாரணைகளில் அனைத்துலக தலையீட்டை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அண்மையில் நிராகரித்திருந்தது.

இத்தகைய போக்கு தொடர்ந்து பரவினால், உலகம் முழுவதற்குமான மனித உரிமைகளை அனைத்துலக நாடுகள் மத்தியில் பரப்புவதற்கான நடவடிக்கைகளை மோசமாகப் பாதிக்கும் என்கிற முடிவுக்கும் நாம் வந்துள்ளோம்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் அல்லது போர்க் குற்றங்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அடிப்படைகளுக்கும் அனைத்துலக நாடுகளின் ஆதரவை அதிகரிப்பதற்கான செயல்களில் பிரித்தானியா ஈடுபடவேண்டும் என்றும் நாம் பரிந்துரை செய்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.