Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசியலமைப்பை மாற்றுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவது அதற்கு நல்லதல்ல: ஜே.வி.பி.

Featured Replies

தனது பொருளாதார நலன்களை மனதில் வைத்து சிறிலங்காவின் அரசியலமைப்பைத் திருத்துவதில் அல்லது மாற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இது அந்த நாட்டின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் மோசமாகப் பாதிக்கும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சிலாபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த விவகாரம் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

எமது அரசியலமைப்பை மாற்றுவதில் தானும் ஒரு பங்காளியாக வேண்டும் என இந்தியா நினைக்கிறது. அதற்கு ஊடாகப் பொருளாதார நலன்களையே இந்தியா எதிர்பார்க்கிறது.

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றுவது இந்தியாவின் இறைமைக்கும் நில ஒருமைப்பாட்டுக்கும்கூட ஆபத்தாக முடியும் என்பதை அது கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா இதனைப் புரிந்துகொள்ளத் தவறினால் மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

1978 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது. கடந்த 31 வருடங்களில் அது 17 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்தே நாட்டின் அரசியலமைப்பு எவ்வளவு மோசமான சூழலுக்குள் வீழ்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த அரசியலமைப்பை மீண்டும் ஒருமுறை திருத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கிறார். அதனைச் செய்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

நாட்டின் நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை இரத்துச் செய்வதற்கான ஆதரவை தனது தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை மூலம் மக்களிடம் கோரியிருந்தார் மகிந்த.

அந்தக் கொள்கை விளக்க அறிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். எனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மாற்றும் உரிமை அரச தலைவருக்குக் கிடையாது. ஆகையால் இந்த அரசியலமைப்பை அவர் மாற்ற முடியாது.

நாட்டுப்பற்றுள்ள ஒரு அமைச்சர் கூட இந்த நாட்டில் இல்லை. போரை வெல்வதற்காக மகிந்தவின் கரத்தைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் சிலர் அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைக் பெற்றுக்கொண்டார்கள். அதே நபர்கள் போர் முடிந்த பின்னரும் கடும் பாதுகாப்புகளுடன் ஏன் வளைய வந்துகொண்டிருக்கிறார்கள்? தொடர்ந்தும் அவர்கள் ஏன் அமைச்சர்களாக இருக்கின்றார்கள்? உண்மையில் அவர்கள் நாட்டுப்பற்றாளர்களாக இருந்தால் இப்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும்.

இவ்வாறு சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்று அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட விமல் வீரவன்சவைக் குறிவைத்தே, போர் முடிந்த பின்னரும் சிலர் ஏன் அரசில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

விமல் வீரவன்ச தன்னை ஒரு நாட்டுப்பற்றாளராகக் காட்டிக்கொள்பவர் என்பதும் தேசிய நாட்டுப்பற்றாளர் சங்கம் என்ற அமைப்பை பிக்குகளுடன் சேர்ந்து நடத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.