Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் அதிகரிக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவீனம்: படைத்துறையை நவீன மயப்படுத்தத் திட்டம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும், பாதுகாப்புக்கான செலவீனத்தில் குறைப்பு எதனையும் செய்யாமல் அதனை அதிகளவில் வைத்திருப்பதற்கே சிறிலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாக ஏ.எஃப்.பி. செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

படைத்துறையை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாலும், கடனுக்குக் கொள்வனவு செய்த படைத் தளபாடங்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்தவேண்டிய தேவை இருப்பதாலுமே இவ்வாறு பாதுகாப்புச் செலவீனம் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டுக்கான தனது பாதுகாப்புச் செலவீன ஒதுக்கீட்டை சிறிலங்கா அரசு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் 1.6 பில்லியன் டொலராக அதிகரித்தது. தற்போது விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருக்கின்றபோதிலும் அந்தத் தொகையைக் குறைக்கும் திட்டத்துடன் சிறிலங்கா அரசு இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

"அடுத்த வருடத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை குறைக்க வேண்டிய தேவை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என ஏ.எஃப்.பி.க்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

"எமக்குத் தேவையாகவுள்ள வெடிபொருட்களின் கொள்வனவை நாம் குறைத்துக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், எமது படைத்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பங்களை நாம் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது" எனவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து பெரும் தொகையான மோட்டார் குண்டுகளை சிறிலங்கா கொள்வனவு செய்தது. இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 மில்லியன் டாலருக்கான வெடிபொருட்களுக்கான கொள்வனவுக் கட்டளையை சிறிலங்கா இரத்துச் செய்தது.

விடுதலைப் புலிகளுடனான இந்த மூன்று தசாப்த காலப்போரின்போது சுமார் 30 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டும், 10 ஆயிரம் படையினர் அங்கவீனர்களாகியும் உள்ளதாக கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

இதில் 6 ஆயிரம் படையினர் இறுதி மூன்று மாத காலப் போரின்போது கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளையில் முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறுத்துவதற்காக படைத்துறைக்கு புதிதாக ஆட்களைத் திரட்டும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகவும் ஏ.எஃப்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடே சிங்களவா,

அன்றிலிருந்து இன்று வரை நாம்

அகிம்சாவழியில் போரிட்டோம். எதற்காக? சுயநிர்ணய உரிமைக்காக

பின் ஆயுதப்போராட்டம். எதற்காக? சுயநிர்ணய உரிமைக்காக

இவை இரண்டையும் நீ அழித்துவிட்டாய் ( உலக நாடுகளின் துணைகொண்டு )

இன்று 300,000 தமிழர்களுடன் சேர்த்து விடுதலைப்போராட்ட வீரர்களையும் சிறைக்கூட்டில் அடைத்து சின்னாபின்னமாக்குகின்றாய்.

அத்துடன் தமிழரின் அரசியல் போராட்டத்தையும் நசுக்குவதாகக் கூறி கைதுகளை செய்கின்றாய்.

இதற்கெல்லாம் காரணம் தாய்நாடு என்று கூறப்படும் இந்தியா எனும் அரக்கன் தான் என்று பேராசிரியர் பொயில் கூட கூறுகின்றார்.

இவ்வாறாவே எமது இனம் ஒரு சுழற்சி முறையில் அகிம்சைவழி, ஆயுதவழி போராட்டங்கள் மூலமாக வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது. அதாவது சிங்கள இனம் உட்பட அனைத்து இனங்களும் வளர்ச்சியடைந்து செல்லும் வேளையில் எம்மினம் மட்டும் என் இவ்வாறு எதிர்ப்பக்கமாக வளர்ச்சியடைகின்றது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் அழுகின்றது.

ஆனால் நீயோ இன்னும் எம்மை அழிக்க கங்கணம் கட்டி இன்னும் ஆயுதங்களை வாங்கி குவித்து உனது படை வலிமையை கூட்டுகின்றாய்.

ஆனாலும் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்ற கூற்றிற்கிணங்க காலம் ஒரு நாள் கனியும்.

அன்று வருவோம் நீதி கேட்டு. அன்று தான் தமிழன் உன்னை நின்று கொல்வான்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 20, ஆகஸ்ட் 2009 (17:44 IST)

புலிகளின் பலம்வாய்ந்த கோட்டையாக இருந்த வன்னிப்பகுதியை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் சிங்கள ராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசு அறிவித்தாலும்கூட, முன்னர் அவர்களின் பலம் வாய்ந்த கோட்டையாக இருந்த வன்னிப் பகுதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 ஆயிரம் பேர் சிங்கள தரைப்படையில் இணைக்கப்பட உள்ளனர்.

சிங்கள தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்தத் தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தரைப்படைத் தளபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக இன்று ஊடகங்களைக் சந்தித்தார் ஜகத் ஜயசூரிய.

விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான தேவைகள் இருப்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தரைப்படைக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான சண்டையில் பெரும் எண்ணிக்கையான படையினர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் ஓய்வுபெற்றுக் செல்கின்றனர். இதனால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடத்த வேண்டியுள்ளது என ஜகத் ஜயசூரிய கூறினார்.

தற்போது தரைப்படையினரின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தபோதும் அவர்களில் சண்டையிடும் வலுவுள்ள படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதுடன் கள நிலவரமும் சிக்கலானது என்றார் அவர்.

உறங்குநிலையில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் எனத் தெரிவித்த தரைப்படைத் தளபதி, ஆனாலும் அந்த அமைப்பின் இடைநிலைத் தளபதிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்றார்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புச் செய்தியாளர் மயூரன் 20/08/2009, 20:42

25 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையான படையினரை இணைக்கத் திட்டம் - இராணுவத் தளபதி

வன்னிப் பகுதியை பலப்படுத்துவதற்கு மேலும் 25 ஆயிரம் தொடகம் 50 ஆயிரம் வரையிலான படையினர் தேவை என சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகவியலாளரிடம் தெரிவிக்கையில்:

வன்னிப் பகுதியை பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு மேலும் 25 ஆயிரம் தொடகம் 50 ஆயிரம் வரையிலான படையினர் தேவை.

விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் பெருமளவான படையினர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் படையினருக்கு புதியவர்களை இணைக்க வேண்டும்.

இதேநேரம் இரண்டு இலட்சமாக சிறீலங்காப் படையினர் உள்ளபோதும், அவர்களின் போரிடும் வலு குறைவு இந்த நிலையில் கள நிலவத்திற்கு இது பாதகமானது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் இடைநிலைத் தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இன்னும் உறங்கு நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.