Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் - ஆளுநர் மோதல் முற்றுகிறது: களவாக காணி விற்றதாக மாகாண சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

Featured Replies

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி கடற்கரையோரத்தில் உள்ள அரச காணியை கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் பொய்யான ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் என்று புதிய குற்றச்சாட்டு கிளப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் கடற்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோரமாக நிலப்பகுதி 15 பேர்ச் கொண்ட 25 துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது எனவும் இதில் கிழக்கு மாகாண சபை மற்றும் திருகோணமலை நகர சபைகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கின்றது என்றும் 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம அளவுக்கு மீறி மாகாண சபை விவகாரங்களில் தலையிடுவதால் அவரை பதவி நீக்கம் செய்யும்படி கிழக்கு மாகாண சபை தமிழ் உறுப்பினர்கள் அரச தலைவருக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவர்களை இலக்கு வைத்து இந்தப் புதிய குற்றச்சாட்டுக் கிளப்பப்பட்டுள்ளது.

"இந்த விடயத்தைக் கேள்விப்பட்டதும் நான் அதில் தலையிட்டேன். சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் இது பற்றி அறிவித்தேன்" என்றார் கிழக்கு மாகாண ஆளுநர்.

அந்த நிலப் பகுதியில், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் தங்கியிருந்தார்கள் என்றும் அண்மையிலேயே அவர்கள் வெளியேறினார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கள்ளத்தனமாக அந்த நிலப்பகுதி எவ்வாறு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், "இது கிழக்கு மாகாண சபை மற்றும் திருகோணமலை நகர சபையில் உள்ளவர்களின் கூட்டுச் சதி" என உயர் அதிகார வட்டாரங்களில் ஒன்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டுக்கு தெரிவித்துள்ளது.

ஆனால், கிழக்கு மாகாண சபையின் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.பத்மநாதன் இந்தக் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுத்துள்ளார்.

குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினர் தமது விசாரணைகளை நடத்தும்போது இது பற்றிய முழு விபரங்களும் வெளியே வரும் என்று கொழும்பில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

உப்புவெளி கரையோர நிலப்பகுதி அரசுக்குச் சொந்தமானது. அங்குள்ள நட்சத்திர விடுதியுடன் சேர்ந்து அமைந்த இந்தப் பகுதி சுற்றுலா நோக்கங்களுக்காகக் குறித்து ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சின் செயலர் ஜோர்ஜ் மிச்சேல், தான் இது பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.

"அரசியல்வாதிகளாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன எவருக்குமே இந்த நிலப் பகுதிக்கு மக்களைக் கொண்டுவருவதற்கு உரிமை கிடையாது. அது அரசுக்குச் சொந்தமான இடம்" என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்து அரசின் உயர்மட்டத்துக்கு நாம் அறிவித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் உச்சநிலையை அடைந்துள்ளதையே இது காட்டுகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியது குறித்துக் கருத்துக் கூறிய ஆளுநர், மாகாண சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தனக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டாலேயே பதவி நீக்கம் சாத்தியம் என்றார்.

இதுவரைக்கும் அத்தகைய தீர்மானம் எதுவும் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்படியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்கூட, அதன் பின்னர் தனது நடவடிக்கைகள் பற்றி விசாரணைகள் நடத்தியே அரச தலைவர் தன்னை பதவி நீக்கம் செய்வார் என்றும் கூறினார்.

"எந்தப் பக்கச் சார்பும் இன்றி எனது கடமைகளைச் செய்து வருகின்றேன். மாகாண சபை நிர்வாகத்தில் ஊழல்களோ அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தல்களோ இடம்பெறுவதற்கு அனுமதிப்பதில்லை" என்றார் ஆளுநர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.