Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்குத் தெரிவாகிய வலது குறைந்த முல்லைத்தீவு மாணவன் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல இன்னும் அனுமதியில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார்.

பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமாவதற்கு 15 நாட்கள் இருக்கையில் கடந்த 08.08.2008 ஆம் திகதி ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த நிலையில் தெய்வாதீனமாக இவர் உயிர் தப்பியுள்ளார். இதனால் குறித்த திகதியில் பல்கலைக்கழகத்திற்கு இவரால் செல்ல முடியாமல் போனது. இதன்பின்னர் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் இவர் 2009 ஆம் ஆண்டு கல்விநெறியில் இணைந்து கல்விகற்கலாம் என பல்கலைக்கழகத்தினால் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள போதிலும், இவர் முகாமிலிருந்து வெளியில் செல்வதற்கு இராணுவத்தினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள புதிய மாணவர்களுக்கான பாடநெறிகள் கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ள போதிலும், இவர் அங்கு செல்வதற்கான அனுமதி இராணுவத்தினரால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு இவர் சார்பில் செய்த விண்ணப்பங்கள் உரிய சிவில் அதிகாரிகளினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதுடன், இவர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளதை யாழ் பல்கலைக்கழக அதிகாரிகளும் உரிய முறையில் உறுதிப்படுத்தியிருப்பதாகவு

"வலது குறைந்த" என்கின்ற பதம் பாவிக்கப்படுவது நாகரீகம் இல்லை என்று நினைக்கின்றேன். அதுவும் வீரகேசரி இப்படியான பதம் பாவிக்கப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகின்றது. இந்த தலையங்கத்தை வீரகேசரியில் எழுதியவருக்கு வலது குறைந்து இருந்தால் அதன் வலி தெரிந்து இருக்கும்.

எங்கட விதி அவ்வளவு தான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.