Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரில் புலிகளை வெற்றிகொள்ள சிறிலங்கா தரைப்படை கையாண்ட பிரதான உபாயங்கள்: சரத் பொன்சேகா விளக்கம்

Featured Replies

ஒரு கெரில்லா அமைப்புப் போல செயற்பட்ட சிறிலங்கா தரைப்படையின் தந்திரோபாயம், தரைப்படையை மீள்கட்டமைப்புச் செய்தமை, ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவந்தமை, சூட்டு வலுவை அதிகரித்தமை மற்றும் சங்கிலித் தொடரான நேரடிக் கட்டளை அமைப்பு என்பனதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதற்கு உதவியது என சிறிலங்காவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாதுகாப்புத் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதல் தடவையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

'வெற்றிபெறும் படைத்துறை தந்திரோபாயங்கள் - முகாமையாளர்களுக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் அவர் தனது உரையை நிகழ்த்தினார்.

தான் தரைப்படையின் தளபதியாகப் பதவியேற்றபோது, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பாரம்பரிய தரைப்படையாகவே செயற்பட்டது எனத் தெரிவித்த சரத் பொன்சேகா, அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என்றே அப்போது கருதப்பட்டது. இரு பாரம்பரிய படையைப் போல தமது நிலப்பகுதி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாகவே அவர்கள் இருந்தார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தப் போரில் தம்மால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்பதை விளக்கி உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

"எமது தரப்பின் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் நாம் மாற்றிக்கொண்டோம். நாம் கெரில்லாக்கள் போலச் செயற்பட்டோம். சிறிய குழுக்களாக அவர்களின் பகுதிகளுக்குள் ஊடுருவி, காட்டுக்குளில் இருந்து புலிகள் எமக்கு சவால் விடுத்தபோது அவர்கள் மீது நாம் தாக்குதலைத் தொடுத்தோம்.

போரை முன்னெடுப்பது என்பது ஒரு அரசியல் சார்ந்த தீர்மானமாகவே இருந்தது. தரைப்படையும் ஏனைய படை அணிகளும் அந்த அரசியல் விருப்பத்துக்கு ஏற்றவகையில் போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

நான் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தரைப்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்டபோது - தரைப்படையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆட்பலத்தை அதிகரித்தல், சிறப்பான பயற்சி, தரமான ஆயுதங்கள் என்பன தேவையாக இருந்தன.

30 வருட காலப் போரினால் மக்கள் விரக்தியடைந்து இருந்தார்கள். அவர்கள் படையினரில் நம்பிக்கையிழந்து இருந்தார்கள். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றே அவர்கள் நம்பினார்கள். யாழ்ப்பாணத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் போர் தொடங்கியது.

தரைப்படையினரைப் போருக்குத் தயார்படுத்துவதுதான் எனது முதலாவது இலக்காக இருந்தது. இதற்காக நான் தரைப்படையை முழுமையாக மறுசீரமைப்புச் செய்தேன்.

போர்க்களத்துக்கு புதியவர்களை, புதிய முகங்களைத் தெரிவு செய்து நான் நியமித்தேன். ஆட்சேர்ப்பு மூலமாக தரைப்படையின் ஆட்பலத்தைப் பெருமளவுக்கு அதிகரித்தேன். ஆயுதங்கள், வெடிபொருட்கள், போர்த் தாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யும்போது சிறப்பானவைகளையே நான் தேர்ந்தெடுத்தேன்.

போர் உபாயத்தை பாரம்பரிய போர் உபாயங்களில் இருந்து கெரில்லா பாணியிலான போர் உபாயமாக நான் மாற்றி அமைத்தேன். இதற்காக எனக்கு சிறப்பான தளபதிகளும் முன்னேற்றகரமாக சூட்டு வலுவும் தேவையாக இருந்தது. நாங்கள் சிறிய குழுக்களாக காடுகளுக்குள் செயற்படத் தொடங்கினோம். முன்னர் விடுதலைப் புலிகளே காடுகளுக்குள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.

நாங்களும் காடுகளுக்குள் செயற்படத் தொடங்கியதையடுத்து அவர்கள் எம்மைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டனர். விடுதலைப் புலிகளின் பலமான நிலைகளை எதிர்கொள்வதுதான் தரைப்படையின் பிரதான தந்திரோபாயமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட 'ஜெயசிக்குறு' நடவடிக்கையின்போது, விடுதலைப் புலிகளின் பலம்வாய்ந்த நிலைகளைத் தாக்கியபோது அவை பலவீனமாதை நாம் அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்திருந்தோம். அதனை மனதில் கொண்டு எமது தாக்குதல் நடவடிக்கைகளை ஏ-9 பாதை, மடு வீதி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு காட்டுப் பகுதிகளில் தொடங்கினோம்.

சில சமயங்களில் ஒன்று இரண்டு கிலோ மீற்றர் பகுதியைக் கைப்பற்றுவதற்கே நான்கு ஐந்து நாட்கள் எமக்குச் சென்றது. ஆனால் அதன் பெறுபேறு எமக்குச் சாதகமாகவே இருந்தது. நாம் எமது தரப்பு இழப்புக்களைக் குறைத்துக்கொண்ட அதேவேளையில் எதிரியின் தரப்புக்கு அதிகளவு இழப்புக்களைக் கொடுத்தோம். 2007 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அனைத்து முனைகளிலும் எமது 35 பற்றாலியன்கள் செயற்பட்டன. எமது இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்ள புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் அவர்களுடன் மோதினோம். கொட்டும் மழை, வெள்ளம், கடும் வெய்யில், வறட்சி என அனைத்துக் காலநிலைகளிலும் எமது நடவடிக்கையை நாம் முன்னெடுத்தோம். இதே நிலையில் நாம் வெற்றியைப் பெறும் வரையில் பேணிச் சென்றோம்."

இவ்வாறு பொன்சேகா தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.