Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் தொடர்கின்றது--தமிழக மீனவர்கள் ஸ்ரைக்

Featured Replies

ஐந்து கடலோர மாவட்டங்களில், ஐந்தாயிரம் விசைப்படகுகள் வைத்திருக்கும் ஐந்து லட்சம் மீனவர்கள் திடுதிப் என்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டு, மத்திய-மாநில அரசுகளை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டணத்தில் கூடிய நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர்களும், பிரதிநிதிகளும் ஒருமனதாக முடிவெடுத்து, காலவரையற்ற இந்த மாபெரும் மீன்பிடித் தொழில் நிறுத்தத்தை அறிவித்து, கடந்த சனிக்கிழமை முதல் அதனைச் செயல்படுத்தியும் விட்டார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள இந்த ஐந்து மாவட்ட மீனவர்களுமே மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அதாவது, இந்திய-இலங்கைக் கடல் பகுதியை மட்டுமே நம்பி, மீன்பிடித் தொழில் செய்பவர்கள். இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தொல்லைகளுக்கும், துய ரங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருப்பவர்கள்.

இதன் காரணமாகவே, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், அதனைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நிரந்தர முடிவை எடுக்க வலியுறுத்தியும் இந்த மாபெரும் வேலை நிறுத்தத்தை ஐந்து மாவட்ட மீனவர்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கைகளுக்காக ஐந்து மாவட்ட மீனவர் சங்கங்களும், அதன் தலைவர்களும், ஐந்து லட்சம் மீனவர்களும் ஒன்றுசேர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால், கடலோர மாவட்ட மீனவக் கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தவிர, மீன்பிடித் துறைமுகங்களும் செயலற்றுக் கிடக்கின்றன.

இலங்கைக் கடற்படையினரால் அதிகம் பாதிக்கப்படுவது ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் என்பதால், ஸ்டிரைக்கின் தீவிரம் இங்கு அதிக அளவிலேயே காணப்படுகின்றது.

ராமேஸ்வரத்தில் மட்டுமே 1,200 விசைப்படகுகள் கடந்த சனிக்கிழமை முதல் கடலுக்குச் செல்லாமல், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தையும், மீனவக் கிராமங்களையும் ஒரு ரவுண்ட் வந்தோம். வேர்க்கோடு, ஓலைக்குடா, தங்கச்சிமடம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மீனவர்களிடம் பேசினோம். அவர்கள் அனைவருமே அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை நம்மிடம் கூறினார்கள். அதனை மறைமுகமாக முன்னிலைப்படுத்தியே இந்த ஸ்டிரைக் நடக்கிறது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

``சமீப காலமாகவே இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடுகிறார்கள். சில நாட்கள் கழித்து பிணமாக, அழுகிய நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியிலோ, அல்லது இலங்கைக் கடற்பகுதியிலோ கரை ஒதுங்குகிறார்கள். கடந்த ஜூலை மாதம் நாட்டுப் படகில் சென்ற மூன்று மீனவர்கள், விசைப் படகில் சென்ற ஐந்து மீனவர்கள் ஆக மொத்தம் எட்டு மீனவர்கள் காணாமல் போய், கடைசியில் பிணமாகக் கரை ஒதுங்கினார்கள். லேட்டஸ்ட்டாக, கடந்த சனிக்கிழமை, அதாவது, 22-ம் தேதி வேதாரண்யத்திலிருந்து சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை. இப்படி தமிழக மீனவர்கள் தொடர்ந்து காணாமல் போவது என்பது இந்தப் பகுதியில் புதிதாக நடக்கிற விஷயம்.

பத்து வயதிலிருந்தே கடலோடு மல்லுக்கட்டி, அதன் ஆழ அகலங்களோடு பழகி வரும் எங்களுக்கு கடல் பற்றிய அறிவும், அனுபவமும் அத்துப்படி. எங்களை வாழ வைக்கும் கடல் தாய் எப்போது ஆக்ரோஷமாக இருக்கிறாள்? எப்போது சாந்தமாக இருக்கிறாள்? என்பதை எல்லாம் மிகத் தெளிவாக நாங்கள் அறிவோம். அப்படிப்பட்ட எங்கள் மீனவர்கள், கடலுக்குள் காணாமல் போவதும், அவர்கள் சென்ற படகு மூழ்கிக் கிடப்பதும், நான்கைந்து நாட்கள் கழித்து காணாமல் போன மீனவர்கள் பிணமாகக் கரை ஒதுங்குவதும் எங்களுக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது நமது இந்தியக் கடல் எல்லையில் கிடையாது. இலங்கைக் கடல் எல்லைக்குள்தான். விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தபோது, தமிழக மீனவர்களை சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்ற இலங்கைக் கடற்படையினர், இப்போது, நமது மீனவர்களைச் சுற்றி வளைத்து படகுகளை மூழ்கடித்து, அதில் சென்ற மீனவர்களையும் மூழ்கடித்து சாகடிக்கிறார்களோ? என்ற ஐயப்பாடு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் இருக்கிறது. அந்த ஐயத்தை மத்திய-மாநில அரசுகள்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்'' என்றார்கள் ஒரே குரலில்.

வேர்க்கோடு மீனவர் சங்கத்தின் தலைவரான அந்தோணியிடம் பேசினோம். மனிதர் ரொம்பவே காரசாரமாக வெடித்துத் தள்ளினார்.

``இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏகப்பட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தத் தொடர் இன்னல்களிலிருந்து நமது மத்திய-மாநில அரசுகள் எங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் இந்த ஸ்டிரைக்கே நடக்கிறது. இதனைப் பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் அந்தோணி.

யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் செயலாளரான சேசு என்ற இளைஞர் நம்மிடம் பேசும்போது, ``ஒரு விசைப்படகை நம்பி பதினேழு குடும்பங்கள் பிழைப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுது . படகின் உரிமையாளர், மீன் பிடிக்க ஒரு விசைப்படகில் செல்லும் ஐந்து மீனவர்களின் குடும்பங்கள், படகினை ரிப்பேர் செய்பவர், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விற்பவர், மீன்களைக் கொள்முதல் செய்யும் சிறிய-பெரிய வியாபாரிகள், அதனை வேனில் கொண்டு செல்லும் டிரைவர்கள், மீன்களை மக்களிடம் நேரடியாக விற்கும் வியாபாரிகள்னு மொத்தம் 17 குடும்பங்கள் ஒரு விசைப்படகை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் வயிற்றைக் கழுவுறாங்க. இவ்வளவு முக்கியத்துவமும் அவசியமும் கொண்ட மீன்பிடித் தொழிலை இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் பார்ப்பதென்பது மிகப் பெரிய சவாலாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத விஷயமாகவும் இப்போது இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். நாங்கள் பயம் இல்லாமல், எங்களது படகுகளுக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதம் வராமல் தொழில் பார்க்க மத்திய-மாநில அரசுகள்தான் உதவ வேண்டும்!'' என்றார்.

இறுதியாக, தமிழ்நாடு - பாண்டிச்சேரி அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் என்பவரிடம் பேசினோம். ``மீனவர்கள் நலன்களைச் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் இந்த வேலை நிறுத்தத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் மிக முக்கியமானது, கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது இன்னமும் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கைக் கடற்படையினரின் கொடுஞ்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். இந்த வேலை நிறுத்தத்தின் தொடர் நிகழ்வாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 26-ம் தேதி ராமேஸ்வரத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் அவசியத்தையும் புரிந்துகொண்டு மத்திய-மாநில அரசுகள் எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும்!'' என்றதோடு முடித்துக் கொண்டார்.

http://appaa.com/index.php?option=com_cont...6&Itemid=59

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தெரியாமல்தான் கேட்கிறேன் இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது எமது கடலில் வந்து மீன்பிடிப்பில் ஈடுபட. போய் சோணியாவின் க.......க்குள் மீனைப் பிடிக்கவும். (தயவு செய்து யாழ்கள உறவுகள் என்னை மன்னிக்கவும், முடியல....)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.