Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து வந்த அந்த வீடியோ பொஸ்னிய வீடியோவை எனக்கு ஞாபகப்படுத்தியது ‐ ஜொனாதன் மில்லர்: ‐ தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005ஆம் ஆண்டின் ஜுன் 03ஆம் திகதி நான் சனல் 4இன் செய்தியறையிலிருந்து ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வீடியோவில் ஆறு பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் இழித்துரைக்கப்பட்டு சேர்பிய இராணுவத்தினரால் செரபிரனிக்கா எனும் இடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்னர்.

அந்தத் துணை இராணுவக் குழுவினர் கைது செய்திருந்தவர்களை ஏளனஞ் செய்தனர். சித்திரவதைக்குள்ளாக்கினர். அவர்கள் சிகரெட் புகைத்துக் கொண்டும் கேலிப் பேச்சுப் பேசிக் கொண்டுமிருந்தனர்.

அவற்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பாளன் தனது ஹன்டிகம் கமெராவின் பற்றறி சக்தியிழந்து கொண்டு போகிறது என்றும், அதற்கு முன்னர் படம் பிடித்து முடித்துவிட வேண்டும் என்றும் மற்றவர்களை அவசரப்படுத்தினான்.

ஆண்களும் சிறுவர்களும் பின்புறமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கைகள் பின்னால் கட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு முழந்தாழில் நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இது பற்றி நான் ஒரு அறிக்கை எழுதினேன்.

கடந்த இரவு நான் இன்னொரு வீடியோவைப் பார்த்தேன். இம்முறை அது இலங்கையிலிருந்து வந்திருந்தது. அந்த வீடியோ பொஸ்னிய வீடியோவை எனக்கு ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.

கைது செய்யப்பட்டிருந்தவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அவர்களது கண்கள் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் துப்பாக்கி முனையில் துப்பாக்கிக்கு நெருக்கமாக முழந்தாளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

இராணுவச் சீருடை அணிந்த கொலையாளிகள் அவர்களைப் பரிகாசமும் கேலியும் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்த கணம் அதிர்ச்சி தரும் விதமாக அந்தச் சீருடைதாரிகள் முழந்தாளில் நின்றவர்களின் பின்புறமாக தலையில் சுட்டுக் கொல்கிறார்கள்.

ஒரு பச்சையான காட்சி அது. ஒரு நிமிடமும் எட்டு செக்கன்களும் கொண்டது அது. அது மிகவும் வருத்தம் தருவது.

இலங்கையிலிருந்து உயிரச்சம் காரணமாகப் புலம் பெயர்ந்த சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் சேர்ந்து உருவாக்கிய இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு இதனை அனுப்பியிருந்தது.

கடந்த ஜனவரியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கிளிப்பை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும், இது இலங்கை அரசாங்கப் படையினரின் சட்டத்திற்குப் புறம்பான படுகொலை நடவடிக்கையை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இராணுவத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ புனையப்பட்டிருக்கிறது என்று கூறி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதனை நிராகரித்திருந்தார்.

இது குறித்து ஏ.எப்.பி செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்த அவர் விடுதலைப் புலிகள் கூட அரச படையினரைப் போல சீருடை அணிந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இரண்டாவது திட்டவட்டமான மறுப்பு லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரால் சனல் 4க்கு அனுப்பப்பட்டிருந்தது.

இணக்கப்பாட்டிற்கான முயற்சிகளை தடுக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு முயற்சி இது என்ற முத்திரை குத்தலுடன் அது வந்திருந்தது.

கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சோ இதனை திட்டமிட்டு சோடிக்கப்பட்ட ஒன்றாகவே குற்றம் சாட்டியது. இது அரசாங்கத்துள் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் அரசாங்கத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று அது கூறியது.

இதேவேளை சனல் 4க்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட உள்ளதாகவும், இவ்விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்து வர உள்ளதாகவும் தெரிவித்து இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கை இந்த வீடியோ கிளிப் பொய்யானது எனவும் புனையப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான காட்சி ஒன்றை வடிவமைக்க ஸ்ரீவன் ஸ்பில்பேர்க் கூட கடுமையாகச் சிரமப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

இதன் நம்பகத் தன்மையை முற்றுமுழுதாக எங்களால் உறுதி செய்ய முடியாவிடினும் கூட எங்களால் இயன்ற அளவுக்கு நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். இது குறித்த நம்பிக்கை தரக் கூடிய நிபுணர்களுடைய ஆய்வு எங்களுக்குக் கிடைத்திருக்காவிட்டால் இதனை நாங்கள் ஒளி பரப்பியிருக்க மாட்டோம்.

இதனை ஒளிபரப்புவதற்கு முன்னதாக இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் ஆய்வாளர் ஒருவருடன் ‐ ஒரு சிங்களவரான அவர் மருத்துவஞ்சார்பான சட்ட ஆய்வுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ‐ இணைந்து இதனைப் பார்வையிட்டேன்.

அவர் இலங்கையில் இடம் பெறும் பல துஸ்பிரயோகங்கள் குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவது குறித்தும் பல வருடங்களாக அவதானித்து வருபவர். எனினும் இவ்வாறான ஒன்றை இதுவரை அவர் பார்த்ததில்லை.

இது தொடர்பாக பலரும் தங்களுடைய அபிப்பிராயங்களை சணல் 4க்கும் டெய்லி மிரர் போன்ற இலங்கைப் பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளனர்.

இது உண்மையானதாக இருக்குமானால், தமிழ் கிளர்ச்சியாளர்கள் கூட இலங்கை அரசாங்கப் படையினரைப் போல சீருடை அணிந்து வீடியோவில் உள்ளது போல இயல்பாக வசனங்களைப் பேசியிருக்கக்கூடும் என்கின்றனர்.

அவர்கள் கேலி செய்யும் போதும் யார் யாரை சுடுவது என்று வாதிக்கும் போதும் பிராந்திய சிங்கள உச்சரிப்பை அழுத்திப் பேசுகின்றனர்.

பிரபல்யமாக கிராமத்து விளையாட்டான குரும்பட்டி அடிப்பது போல அவர்கள் இது உனது முறை அடுத்து எனது முறை என்று முறை வைத்துச் சுடுகின்றனர்.

2005 இல் பெல்கிரேட்டில் பொஸ்னிய வீடியோ வெளியான போது ஐநாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குத் தொடுனர் பெல்கிரேட்டில் இருந்ததோடு அது பற்றிய தனது அபிப்பிராயத்தையும் வெளியிட்டார். நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். எவ்வித சந்தேகத்திற்கிடமுமில்லாமல் அது போர்க்குற்றம் தான் என அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், சேர்பிய போர்க்குற்றங்களுக்கான நீதிமன்றம் அக்குற்றச்செயலில் ஈடுபட்ட குழுவிலிருந்த நான்கு உறுப்பினர்களுக்கு சட்டத்திற்குப் புறம்பான கொலையில் ஈடுபட்டதற்காக 58 வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இவ்வாறு இலங்கையில் நடைபெறுமா? இதேபோன்று இந்த வீடியோ கிளிப்பை போர்க்குற்றத்திற்கான ஆதாரமாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

பதில் இல்லை என்றே மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் எவ்வித விசாரணையுமின்றி சுருக்கமாகவே இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

மே 27 அன்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் ஒரு பிரேரணையை அங்கீகரித்தது. அது இலங்கை அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. உண்மையிலேயே புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளையும் அதன் வெற்றியையும் கொண்டாடுமுகமாகவும் பாராட்டு முகமாகவுமே அது அமைந்திருந்தது.

அப்பிரேரணை போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்திருந்தது.

இதற்கு ஆதரவாக வாக்களித்த பெரும்பாலான நாடுகள் தம்மகத்தே உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. அவற்றில் எவரும் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் ஐநாவினால் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றப் பிரேரணையைக் கொண்டு வர முடியவில்லை.

ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரேரணைக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் இந்தப்பிரச்சினை இத்தோடு ஒழிந்தது என்று இருந்தது இந்த வீடியோ வரும்வரை. இப்போது அது உசாரடைந்துள்ளது.

சிங்களவர்களும் தமிழர்களுமாகப் பலர் ( இந்த வீடியோவை வெளியிட்ட புலம் பெயர்ந்த ஊடகவியலாளர்கள் உட்படப் பலர்) இலங்கை அரசாங்கத்தால் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளான பலர் ‐ இப்போது இது தொடர்பான விசாரணையை நடாத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்கள்.

இதேவேளை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் இலங்கையின் பிரபல்யமான கல்வியாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தனக்கு மரண அச்சுறுத்தல் நேர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐநாவின் நடவடிக்கைகள் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் கூடுதலாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நீண்ட பயங்கரமான சிவில் யுத்தத்தை எதிர்நோக்கியிருந்தது. இதில் 80ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலைக் கொலையாளிகளை முதன்முதலில் பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை தம்முடன் இணைத்துக்கொண்ட புலிகள் அவர்களுக்குப் பயற்சியளித்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டிருந்தனர்.

இவ்வாறான துஸ்பிரயோகங்கள் அட்டுழியங்கள் குறித்து வீடியோக்கள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றையும் உறுதிப்படுத்தியபின் ஒளிபரப்ப முடியும்.

http://www.globaltamilnews.net/tamil_news1...13906&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு பல உண்மைகள் வெளி வரும் நிலையில் இந்தியா அதனை தட்டிக்கேட்காமல் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு சாதகமாக ஐ நா வில் வாக்களித்தும்,இலங்கைக்கு தெரியாமல் சாட்சிகள் வெளியேறாமல் இருக்க இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் வெளியேறும் போது இலங்கைக்கு மட்டும் செல்லும் புதிய நடைமுறையை உருவாக்கியிருப்பதன் மூலம் மேற்கொண்டு இலங்கைக்கு பிரச்சினை வராமல் தடுக்க முற்படுகின்றது.

இலங்கை பொஸ்னியாவில் நடந்ததைப்போலவே ஒரு இன சுத்திகரிப்பை மேற்கொண்டு வருகிறது, பொஸ்னியரின் தேசியத்தை சிந்தனையை சிதறடிக்க பொஸ்னிய ஆண்களை சிறையில் அடைத்து கொன்றொழித்த வேளையில் பெண்கள் மீது வன்முறை மேற்கொள்வதுடன் 3 மாதங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்து உறுதிப்படுத்திய பின்னரே விடுதலை செய்தனர் அதன் மூலம் பொஸ்னிய சேர்பிய கலப்பினத்தை உருவாக்க முற்பட்டனர். இன்று வன்னி மக்கள் முகாம்கள் என்பது இதன் மறு வடிவம் உலகத்திற்கு என்ன நடைபெற்கின்றது என்பது தெரியாமல் நிகழ்கிறது,

உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடென்பது அதன் சனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அல்ல ஜன நாயக விழுமியங்களை மதிப்பவர்களே அதற்கு உண்மையில் உரித்தாவார்கள்.

இந்தியாவின் இலங்கை இனவழிப்பிற்கு சாதகமாகவுள்ள நிலை மாறும் வரை உலக நாடுகளால் இந்த இன அழிப்பை தடுக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.