Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டுவோம் - கி.வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமை கண்டித்து, அறவழிப் போராட்டமாக, இன்று ரயில் மறியல் போராட்டத்தினை நடத்துகின்றோம். இது ஆரம்ப கட்ட அறநிலைப் போராட்டமே. இதற்குரிய சரியான தீர்வு கிடைக்காவிடின், இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

சென்னையில் பெரியார் திடலில், ரயில் மறியல் போராட்டத்திற்காக திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில், திராவிட கழகத்தைச் சேர்ந்த கருஞ்சட்டை தொண்டர்கள் கூடினார்கள். தலைவர் கி.வீரமணி, தலைமையில், கோசங்களை எழுப்பியவாறே புறப்பட்டனர்.

ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக அவர்கள் செல்லும் போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கி.வீரமணி மற்றும் சுப.வீரபாண்டியன், ஜனார்த்தனம் உட்பட 500 திராவிட கழகத்தினர் காவல்துறை வேனில் ஏற்றப்பட்டு வேப்பேரி பவுல் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பேரணியாகப் புறப்பட முன்னர், கி.வீரமணி பேசுகையில், "மூன்று லட்சம் ஈழத்தமிழர்களை ராஜபக்ச அரசு முள்வேலியில் அடைத்து வைத்துள்ளது. அவர்களை உடனே அங்கிருந்து அகற்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளுக்கு விரோதமாக பல லட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்களர்கள் குடியேறக்கூடாது, ஓரிரு மாதங்களில் இந்தக் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும்.

இலங்கை தமிழர்களை மையமாக வைத்து இங்குள்ள மாநில அரசை குற்றம் சாட்டுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக முதல்வர் கருணாநிதி இருமுறை ஆட்சிப் பொறுப்புகளை இழந்தார். அவர் இதில் காட்டும், ஈடுபாடு தெளிவானவை. அதை பயன்படுத்தி கொள்ளாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுமானால் தமிழக மக்கள் ஒன்றுபட்டு தகுந்த பாடம் கொடுபார்கள். இங்குள்ள அரசியல் போட்டிகளை வைத்துக்கொண்டு இலங்கை தமிழர்களின் உயிரோடு விளையாடாதீர்கள். " எனக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடத்தப்படுபவை அறப்போராட்டம். அடுத்ததாக இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார் எனத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேறு பல செய்திகளுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் வடக்கில் வசந்தம் திட்டத்தில் இருந்து இவரும் இவரது மகனும் விலகுவார்களா என்று பார்ர்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டுவோம் - கி.வீரமணி

முதலில் அதைசெய்யுங்கள்.

உங்கள் நாட்டுக்காரர்கள்தான் ஆசியவல்லரசு நினைப்பில் ஈழத்தமிழனை அழிக்க உதவிக்

கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தூதரகத்தை இழுத்துப் பூட்டுவோம் - கி.வீரமணி

ஏன் இழுக்காமல் பூட்ட முடியாதா??? :(

Edited by pepsi

ஏன் இழுக்காமல் பூட்ட முடியாதா??? :(

கட்டிகாத்த ஈழமே அழிந்து நிலை குலைந்து யாரும் இல்லாமல் அநாதைகளாக 30000 பேர் முள்ளிவாய்காலில் அக்னிஆக்கப்பட்டார்கள். 3 இலட்சம் பேர் வதை முகாமில்.

இவ்வளவும் செய்த ஒரு இனத்தின் தூதுவராலயம் இன்னும் இருக்கு .

இனி இழுத்து பூட்டி என்ன செய்ய போறியள்.

எல்லாம் காலம் கடந்த செயல் .

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் சொன்னால் வீரமணியார் மெளனமாகி விடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.