Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சனல் - 4' ஒளிநாடா விவகாரத்தை சிறிலங்கா அமைச்சருடனான பேச்சின்போது கிளப்பிய ஐ.நா. செயலாளர் நாயகம்

Featured Replies

சிசிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது.

ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவைச் சந்தித்த ஐ.நா. செயலாளர் நாயகம் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியதுடன், போரின் பின்னர் உருவாகியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்தாக 'ரொய்ட்டர்' செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

"நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களின் பேச்சில் ஆராயப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் ஆராய்ந்தார்கள்" என இந்தச் சந்திப்பு தொடர்பாக நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிநாடா தொடர்பாகவும் இந்தப் பேச்சுக்களின்போது பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாக ஐ.நா. அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த காணொலிக் காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசு ஏற்கனவே நிராகரித்திருக்கின்ற போதிலும், பான் கீ மூன் இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது அமைச்சர் மகிந்த சமரசிங்க எவ்வாறு பதிலளித்தார் என்பதையிட்டு ஐ.நா. வட்டாரங்கள் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

காலநிலை மாற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறும் மாநாட்டின் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின்போதே அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் இது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்த காணொலி ஒளிநாடா தொடர்பாக தமது கரிசனையை ஐ.நா. சபை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த நிலையிலேயே பான் கீ மூன் அது தொடர்பாக இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இந்த ஒளிநாடா தொடர்பான செய்திகள் தம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பதாக ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ் நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளையில் ஐ.நா. சபையின் சட்டத்துக்குப் புறம்பான, எழுந்தமானமான விசாரணைகளற்ற படுகொலைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அல்ஸ்டனும், இது தொடர்பாக ஐ.நா. விசாரணை ஒன்றை தொடங்க வேண்டும் என கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருந்தார்.

புதினம்

இனி இப்படியான தகவல்கள் வெளியில் தெரியாதவாறு கவனமாக தமிழர்களை படுகொலை செய்யச் சொல்லியிருப்பான் இலங்கையின் கைக்கூலி மங்கிமுண்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.....எல்லோருமே பட்டங்கொடுப்பதில் பாண்டித்தியம் பெற்றிருக்கிறார்கள். :unsure:

Edited by Mathivathanang

''ம்.....எல்லோருமே பட்டங்கொடுப்பதில் பாண்டித்தியம் பெற்றிருக்கிறார்கள்.''

இப்படியே சொல்லிச் சொல்லி தமிழரை குட்டி குனிய வைப்பபதற்கெண்டே பல கைக் கூலிகள் தழிழர்கள் அதிகம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் அங்கத்தவர்களாய் இணைந்துள்ளதுகள்.

மங்கிமுனை பற்றி அடுத்த செய்தி இது.

சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்

திகதி: 04.09.2009 ஃஃ தமிழீழம்

சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல் தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.

அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால் அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும் அத்துடன் சர்வதேச விசாரணைகள் இன்றி போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும் மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும் அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.

இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும் இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள் இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன் ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன் அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.

பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.

இதுஇவ்வாறிருக்க அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன் சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

நன்றி: சங்கதி இணையம்.

இதுக்கெல்லாம் காரணம் இந்திய நாயள் இப்படியான பொது அமைப்புக்களில பொறுப்பான பதவிகளில இருப்பது தான்.

ஈழத்தமிழரின் கோபம் பொது அமைப்புக்களின் மேல் திரும்புவதை விட்டு விட்டு இந்திய வல்லாதிக்கத்தை சிதைத்து சின்னாபின்னப் படுத்துவதில் திரும்ப வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.