Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில்கவனயீர்ப்பு போராட்டம்--படங்கள் இணைப்பு

Featured Replies

சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில் நேற்று 4ம் திகதி எமது உறவுகளை வதை முகாம்களிலிருந்து விடுவிக்க கோரும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மாலை 4 மணி முதல் 7 மணி வரை டவுண்கோல் சதுக்கத்தில் 300க்கும் அதிகமான மக்கள் கூடிஇ கையில் பதாகைகள் தாங்கிய வண்ணம் விழிப்பபுணர்வை எற்படுத்தினர். சதுக்கத்தை சுற்றி தமிழர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சித்தரிக்கும் படங்கள் உள்ளடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

300 ஆயிரம் உறவுகள் இன்னும் அந்த வதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களை முகாம்களுக்குள் அனுமதிக்காமல் தமிழர்களை தினம் தினம் சித்திரவதை செய்து படுகொலை செய்து வெளி உலகுக்கு போலியான ஒரு தோற்றத்தை காட்டி வருகிறது சிங்கள பேரினவாதம்.

சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சிகள் சிங்கள பயங்கரவாத அரசின் உண்மையாண முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. சிங்கள அரசு தற்போதும் கூட பொய் பிரசாரங்களை செய்து தமது குற்றங்களை மறுத்து வருகிறது.

சிங்கள அரசின் போர் குற்றங்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களான எமது கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிங்கள காடையர்களின் கொடுர முகத்தை நாம் எம்மை சுற்றியுள்ள அந்நிய சமுதாயத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.

அந்நோக்கத்துடனேயே நேற்றைய கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டவுண்கோல் சதுக்கத்தை சுற்றி இளைஞர்களும் சிறுவர்களும் அங்கு உலாவும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

அத்துண்டுப்பிரசுரத்தில் எமது உறவுகள் வதை முகாம்களில் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அவர்களை விடுவிக்க இவர்கள் மனிதாபிமானரீதியில் செய்ய வேண்டிய உதவிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தமது தொகுதி எம்பிமாறுடனும் ஊடகவியாளர்களுடனும் தொடர்பு கொண்டு எமது மக்களின் நிலமையை பற்றி உரையாடி இன்னும் அதிக விழிப்புணர்வை

ஏற்படுத்த வேண்டிய செயலில் அவர்களது பங்களிப்பை வழங்குமாறும் இலங்கை பொருட்களையும் இலங்கைக்கு சுற்றுலா செல்வதையும் புறக்கணிக்குமாறும் அத்துண்டுப்பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது.

எமது உறவுகளுக்கு ஏற்படும் அநீதிகளை வெளி உலகுக்கு எடுத்துரைத்து எம் உறவுகளை விடுவிக்க தொடர்ந்து போராட வேண்டியது அவசியம்.

வரும் 26ம் திகதி சில்வர்வோட்டர் ப+ங்காவில் (ளுடைஎநசறயவநச Pயசம) கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள வதை முகாம்களை சித்தரிக்கும் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. முற்றும் முழுதாக விழிப்புணர்வை ஏற்படத்துவதே இதன் நோக்கம். இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த விரைந்து வாருங்கள்.

படங்கள்.............

http://appaa.com/index.php?option=com_cont...6&Itemid=59

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.