Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழ் சமூகம் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது - ஊடக மத்திய நிலையம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முகமாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் பொய்யான பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான ஒரு முயற்சியே பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சியாகும். அதில் சித்திரிக்கப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு நவீன தொழிநுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் கூறியது.

இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல கைச்சாத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளதாவது உலகின் மிகப்பிரசித்தி பெற்ற பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டது.

இந்தத் தோல்வியினைப் பொறுத்துக் கொள்ளாத நிலையில் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழ் சமூகத்தினர் இலங்கை இராணுவத்தினர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இராணுவத்தினர் தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்வதைப் போன்ற காட்சிகள் பித்தானியாவின் செனல் 4இல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டன. இதன் மூலம் சர்வதேசத்தின் முன் இலங்கை அரசாங்கத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகக் காணப்படுகிறது.

இருப்பினும் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த காட்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளின் போது அவ்வியக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களே மீண்டும் அவ்வியக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குமுன்னரும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றின் உண்மைத் தன்மை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

ஜனநாயகத்தை விரும்பும் ஊடகவியலாளர் அமைப்பொன்றே மேற்படி காட்சியை வீடியோ ஒளிப்பதிவு செய்து சட்டவிரோதமான முறையில் சர்வதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவ்வாறானதொரு அமைப்பொன்று நாட்டுக்குள் செயற்பட்டு வருவதுமில்லை. அது தொடர்பில் எவரும் கேள்விப்பட்டதுமில்லை என்பதே உண்மையாகும்.

இந்த வீடியோ காட்சியானது போர்க்களத்திலுள்ள சக படைவீரர் ஒருவரால் கையடக்க தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென்றால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும். அத்துடன் காட்சியின் பின்னணியில் தோன்றும் நிலப் பரப்பு போர் இடம்பெற்ற ஒரு பிரதேசம் போல தோன்றவில்லை.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளும் படை வீரர் வீடியோக் காட்சிக்கு வலப்பக்கத்திலிருந்தே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்கிறார்.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிழப்பவர்களும் தமது முகங்களைக் திரைக்கு காண்பிக்காத வகையிலேயே காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சில அம்சங்கள் குறித்த புகைப்படக் காட்சி போலியானது என்பதற்குரிய சந்தேகத்தை எழுப்புகின்றது.

மேற்படி காரணிகள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது புலனாகிறது. எவ்வாறெனினும் இந்த வீடியோக் காட்சியில் எவ்வித உண் மையும் இல்லை என்பதே அரசாங்கத்தின் ஆணித்தரமான உண்மையாகும்.

என தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை உடன் மேற்கொள்ளுங்கள், அல்லது குற்றத்தினை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும் - ரில்வின் சில்வா

தாய் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செனல் 4 வீடியோ தொடர்பில் பாராமுகமாக இருக்காது சர்வதேச மட்டத்திலான சுயாதீனமான விசாரணை ஒன்றிற்கு இலங்கை அரசாங்கம் செல்ல வேண்டும்.. அப்போதுதான் நாட்டினதும் அரசாங்கத்தினதும் நேர்மைத் தன்மை உலக நாடுகளுக்கு வெளிப்படும் என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

முகாம் மக்களின் மீள் குடியேற்றம் உட்பட உள்நாட்டில் அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளில் பொறுப்பற்ற தன்மையே தேவையற்ற தலையிடிகளுக்கு காரணமாகியுள்ளன.

இவ்வாறு அரசின் பொறுப்பற்ற தன்மை தொடருமேயானால் நாடு பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

செனல் 4 வீடியோக் காட்சி தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை கருத்து தெவிக்கையிலேயே டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கைக்கு எதிராக செயற்படும் தீய சக்திகள் இன்னும் ஓயவில்லை. அவர்கள் ஏதோ ஒருவகையில் உள்நாட்டிற்கு ஊடுருவ அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளது. செனல் 4 வீடியோவும் அவ்வாறான ஒன்றே. எனவே அரசாங்கம் செனல் 4 வீடியோ தொடர்பில் காலதாமதம் இன்றி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

விசாரணைகளை ஆரம்பிக்காது அரசாங்கம் பின்வாங்குமேயானால் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு சமமாக போய்விடும்.

அநாவசிய தலையீடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி நாட்டின் பெயரை மேலும் அபகீர்த்திக்கு உட்படுத்தாது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.