Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[காணொளி இணைப்பு] முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…? - கருத்தரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[காணொளி இணைப்பு] முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…? - கருத்தரங்கம்

ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

school08092009001.jpg

இன்று 08.09.2009 மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப்பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார். ஆசிரியர் ஹென்றி மற்றும் குழுவினர் ” தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை மனிதன் நினைக்கலாமா” பாடலின் வரிகளை சிறிது மாற்றி ஈழமக்களின் பிரச்சினையையும் உணர்வினையும் வெளிப்படுத்தும் வகையில் உணர்வுப்பூர்வமாக இசையமைத்து பாடினார்.

பின்னர் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தனது உரையில் பள்ளி மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை புரியும் வகையில் பழைய வரலாற்றினை எடுத்துக்கூறி ஈழம் தமிழரின் தாயகம் என்பதை தெளிவாக விளக்கப்படுத்தினார். விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது ஏன் என்றும் , அகிம்சை போராட்டம் என்றால் என்னவென்றும் காந்தி தேசத்துக்கே உண்ணாநிலைப்போராட்டம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டிய தியாக தீபம் திலீபன் பற்றியும், தமிழீழத்தேசியத்தலைவரின் மனிதாபிமானம் பற்றியும், முள்வேலிக்குள் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் பற்றியும், பதுங்குகுழிக்குள் அமர்ந்து தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக புரியும் உரையாற்றினார்.

பின்னர் அப்பள்ளியின் தலைமையாசிரியர் நிறைவுரையாற்ற ஆசிரியர் மரியதாஸ் நன்றியுரையாற்றினார்.

http://www.meenagam.org/?p=9862

வன்னி அகதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

வவுனியா நலன்புரி முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை உடன டியாக மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை கொழும்பில்இ மாபெ ரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. தொழிற்சங்கங்கள்இ இடது சாரிக் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள்இ ஊடக அமைப்புகள் என்பன இந்த ஆர்ப் பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளன. முகாமில் இருந்து 10 ஆயிரம் பேர் காணாமல் போனார்களா அல்லது கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்வைக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாகப் பேரணி இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

புலம்பெயர் தமிழன் தமிழீழ கனவில் தூங்குகிறான் , மோட்டுசிங்களவன் போராடுகிறான்?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி அகதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

வவுனியா நலன்புரி முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை உடன டியாக மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை கொழும்பில்இ மாபெ ரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. தொழிற்சங்கங்கள்இ இடது சாரிக் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள்இ ஊடக அமைப்புகள் என்பன இந்த ஆர்ப் பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளன. முகாமில் இருந்து 10 ஆயிரம் பேர் காணாமல் போனார்களா அல்லது கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்வைக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாகப் பேரணி இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

புலம்பெயர் தமிழன் தமிழீழ கனவில் தூங்குகிறான் , மோட்டுசிங்களவன் போராடுகிறான்?

உங்கள் கருத்தெல்லாம் சரிதான்

இதுதான் கொஞ்சம் உதைக்கிறது

இரண்டு பக்கமும் அடி பட்ட தமிழனுக்கு இனி விடிவே கிடையாதா?

வன்னி அகதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

வவுனியா நலன்புரி முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை உடன டியாக மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை கொழும்பில்இ மாபெ ரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. தொழிற்சங்கங்கள்இ இடது சாரிக் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள்இ ஊடக அமைப்புகள் என்பன இந்த ஆர்ப் பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளன. முகாமில் இருந்து 10 ஆயிரம் பேர் காணாமல் போனார்களா அல்லது கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முன்வைக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாகப் பேரணி இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகின்றது.

புலம்பெயர் தமிழன் தமிழீழ கனவில் தூங்குகிறான் , மோட்டுசிங்களவன் போராடுகிறான்?

கொழும்பில் நடைபெற்ற மாபெரும் போராஆர்ப்பாட்டம் இதுதான். IMF, GSP+ கைநழுவி விடுமோ என்ற பயத்தில் ஏதேதோ நடக்கிறது. ஒன்றுமட்டும் நிச்சயம், சிங்களவனின் ஆதரவில்லமல் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற வாய்ப்பில்லை. சிங்களவன் தூரநோகக்ின்றி தமிழரில் அக்கறை எடுப்பதுமில்லை.

r3964754133.jpg

r3860546371.jpg

capt.faa30b3c72654a70959ab7d610a9c947.sri_lanka_protest__del103.jpg

capt.b2031b86b2aa4cf2afee5dd23c8e853f.sri_lanka_protest__del105.jpg

படங்கள் : Associated Press

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன்

தூங்குபவர்களை எழுப்பலாம்

நடிப்பவர்களை..............???

இப்படித்தான் நானும் 1983 ஆடிவரை......

வாங்கியபோதுதான் புரிந்தது

நான் யார் என்று.

இது யாருடைய ஊர் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான வருடங்களாக சிங்களவனுக்கு தமிழன் பொறுத்து ஒரு கொள்கைதான்

தமிழனுக்குத்தான் சிங்களவன் பற்றிய கொள்கை அது அடிக்கடி மாறுகிறது

அதனால்தான் நாம் இப்படி இறங்குமுகத்திலிருக்கின்றோம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.