Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனவரி மாத இறுதிக்குள் தமிழ் மக்கள் வீடுகளுக்கு திரும்புவர்: ஐ.நா.வுக்கு ராஜபக்ச மீண்டும் உறுதி

Featured Replies

வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையிடம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கின்றார்.

சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே இன்று வெள்ளிக்கிழமை காலை மகிந்தவை சந்தித்துப் பேசினார்.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு நேற்று சென்ற பாஸ்கோவே அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். வடபகுதியில் இடம்பெற்றுவரும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், முகாம்களின் நிலைமை மோசமாக இருக்கின்றது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் வழங்கிய கடிதத்தையும் அவர் மகிந்தவிடம் கையளித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக அனைத்துலக சமூகம் கொண்டுள்ள கவலை குறித்து அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத

முகாம் மக்களைப் பொறுப்பேற்கும் விண்ணப்பங்களை ஏற்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வீரகேசரி இணையம் 9/18/2009 3:05:27 PM -

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்பதற்கான விண்ணப்பங்களை ஏற்குமாறு கோரி வவுனியா செயலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்க விரும்புபவர்கள் அதற்கென மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் விபரங்களைத் தெரிவித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு ஊடக விளம்பரத்தின் மூலம், மீள்குடியேற்ற அமைச்சு கோரியிருந்தது.

இதற்கமைய வவுனியாவில் உள்ள பலர் இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வவுனியா செயலகத்தில் கையளித்து வந்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் இந்த விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் பிரதேச செயலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்பதற்கு விரும்பிய பலர் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இவ்வாறு ஏமாற்றமடைந்த பலர் நேற்று வவுனியா செயலகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிய போதிலும், அவ்வாறான சந்திப்பு இடம்பெறவில்லை.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17624

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.