Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்றம் என்ற பேரில் வவுனியா முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட 35 ஆயிரம் தமிழர்கள் வேறு முகாம்களில்: சம்பந்தன்

Featured Replies

வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களில் சுமார் 35 ஆயிரம் பேரை மீள்குடியேற்றம் செய்வதாக அங்கிருந்து வெளியே கொண்டுசென்ற சிறிலங்கா அரசானது யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் அமைந்துள்ள வேறு முகாம்களில் அவர்களை அடைத்து வைத்திருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் முன்னர் எங்கு இருந்தார்களோ அந்த இடங்களிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்திய சம்பந்தன், அவர்களை விடுதலை செய்வதாகக் கூறி ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றும் செயற்பாடுகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியிருக்கின்றார்.

வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த இரா.சம்பந்தன், இவ்வாறு ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு அகதிகளை இடமாற்றம் செய்வதால் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதியை வழங்குவது என அரசு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்றுள்ள அவர், 2 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ள தமது சொந்தங்களை வெளியே கொண்டுசெல்வதற்கு முன்வந்திருப்பதையிட்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதேவேளையில், வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் தமது சொந்தப் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்த அமைசசர் அநுர பிரியதர்சன யாப்பா, ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறு அவசரப்பட்டு மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருக்கின்றது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. அதன் பின்னர் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்த பின்னர் அரசு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

இதேவேளையில் வவுனியா முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்துக்காக என அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை அரச அதிகாரிகள் பலரும் உறுதிப்படுத்தியிருக்கின்றா

தங்கட மலசல கூடங்களை தமிழர் தாங்களே கழுவாமல் மற்றவர் கழுவி தரவேண்டும் எண்று எண்ணும் நிலை மாறாதவரை எதுவும் மாறப்போவது இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த, தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

நீண்ட கால இடைவெளிக்கு பின்பு தரை வழி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விற்பனைக்கான முச்சக்கரவண்டிகளும் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

யுத்தம் முடிவடைந்து நிலைமை வழமைக்கு வந்து கொண்டு இருப்பதினால் அனைத்து பொருட்களையும் கொழும்பு விலையில் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு விற்பனை செய்ய வசதி வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஏ-9 வீதி வழியாக பொருட்களை ஏற்றிச் செல் லும் லொறிகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் புறப்பட்டு வருகின்றன.

அதேநேரம் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடை யிலான பயணிகள் இபோச பஸ் சேவை தினமும் 10 முதல் 15 வரையில் இரு வழி பயணத்தினை மேற்கொள்கின் றன. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் திராட்சைப்பழங் கள் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனைக்கு வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=539557 :unsure::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.