Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தி ஈழத்தமிழர்களின் முகத்திலறைந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரை வாழ்த்தி அல்லது அல்லது அவர் செய்த நற்செயல்களைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துவது தான் தமிழர் மரபு. அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர்கள், மகிந்த ஈழத்தமிழர்களைக் கொன்றதைப் பாராட்டுகிறார்களா? அதற்காக வாழ்த்துகிறார்களா? அல்லது எதற்காக பொன்னாடை போற்றினார்கள்.

பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சகோதரர்களைப் பார்க்க, அனுமதி பெற்றுச் செல்லும் எவனாவது, அவனைச் சிறைப்பிடித்து வைத்திருப்பவனைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கட்டியணைத்து, பசப்பு வார்த்தை பேசுவதுண்டா? சிறையிலிருக்கும் உறவினர்களைப் பார்க்கப் போகிறவர்கள், சிறையின் வார்டனுக்கு பொன்னாடையணிவிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை.

06_0.jpg

இந்த இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்களை உண்மையாகச் சகோதரர்களாக எண்ணினால், அவர்களின் நலன்களின் அக்கறையிருந்தால், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பார்த்து விட்டு, இந்தப் பொன்னாடை, பன்னாடை எல்லாம் போர்த்திக் கொஞ்சிக் குலாவாமல், வெளியேறியிருக்கலாம். அதற்குப் பதிலாக, ஈழத்தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், யாரால் ஈழத்தமிழர்களின் குழந்தைகளும், உறவுகளும், எந்தவித உலக சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல், அழிக்கப்பட்டனரோ அவர்களுக்கே தங்கள் கைகளால் பொன்னாடை போர்த்தி, ஈழத்தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டனர்.

இந்தப் பொன்னாடை ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்குச் சிறிதும் மதிக்களிக்காமல், அவர்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் போல் தான் தோன்றுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தான் முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு கேட்கிறார்கள். அந்த வெள்ளைக்காரர்கள் கூட தமது கசப்புணர்வைக் காட்டும் வகையில் மகிந்தவுக்கு எந்தவிதமான பந்தாவும் செய்வதில்லை. அது மட்டுமல்ல, பல ,மேற்குலக நாடுகளின் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதியை தமது நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதையும் நிறுத்திக் கொண்டனர். ஈரான், லிபியா, கியூபாவை விட்டால் மகிந்தவை அழைக்க எந்த மேலைநாடுகளும் தயாராக இல்லை. மகிந்தவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் கூட, ஈழத்தமிழர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து, அவர்களின் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற பயம் பல வெள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு.

இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் கூட்டத்துக்குப் போகாததன் காரணமே மேலை நாடுகளின்

தலைவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள், அல்லது மகிந்தவின் சந்திப்பை வேண்டுமென்றே (snubbing) தவிர்த்துக் கொள்வார்கள், அல்லது ,முகாம்களிலுள்ள தமிழர்களின் விடுதலை பற்றி ஏடாகூடமாக ஏதாவது கேட்டு விடுவார்கள் என்ற பயத்தினால் தான். அப்படியிருக்க, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இவ்வளவு நெருக்கமாகக் கொஞ்சிக் குலாவுகின்றனர். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இதைப்பற்றிப் பெரிது படுத்த மாட்டார்கள், அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்காகப் பெரியளவில் ஆதரவில்லை என்பதால் தான், அவர்கள் துணிந்து இப்படியொரு காரியத்தைச் செய்திருக்க முடியும்.

தமிழ்நாட்டவர்களுக்கு உண்மையில் ஈழத்தமிழர்களின் மீது அக்கறையிருந்தால், இந்த்ப் பொன்னாடை தவிர்த்திருக்க வேண்டிய, தேவையில்லாத விடயம். மகிந்தவுக்குப் பொன்னாடை போர்த்தியவர்கள், ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் சம்பந்தனுக்கும் ஒரு மலிவான, சின்னத்துண்டு பொன்னாடையாவது போர்த்தியிருந்தால், வெறும் சம்பிரதாயத்துக்காகத் தான் தமிழர்கள் பொன்னாடை போர்த்துவது வழக்கம் என்று, தமிழ்நாட்டுத் தலைவர்களை ஜோக்கர்கள் எனக் கூறி, எங்களை நக்கலடிக்கும் சிங்களவர்களிடம் நாங்களும் சப்பைக்கட்டுக் கட்டியிருக்கலாம்.

http://unarvukall.blogspot.com/

Edited by Aaruran

அவர்கள் தாங்கள் அப்படித்தான் எண்று நீண்டகாலமாகவே எங்களுக்கு சொல்லி வருகிறார்கள்.... நாங்கள் தான் கேட்ப்பதில்லை...

please instruct me how to write in tamil in this format

ASAP

Edited by Jil

ASAP

please instruct me how to write in tamil in this format

ASAP

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

OR

ஈகலப்பையை தரவிறக்கி கொண்டு பயன் படுத்தலாம்

ஈகலப்பைக்கான லிங்

http://ezilnila.thivyan.com/wp-content/uploads/ekalappai20b_anjal.exe

மற்றும் பயர்பொக்ஸை(fire fox) உபயோகப்படுத்துங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சொன்னோம் கருணாநிதி அப்படித் தான் என்று கேட்டாங்களா.. இண்டைக்கு :lol::lol:

please instruct me how to write in tamil in this format

ASAP

இங்கை போய் எழுதுங்கோ http://www.tamileditor.org/

Thank you very much Thaya and Kudypayan

ராஜீவுக்கு பூமாலை போட்டு

எதிர்ப்பை காட்டிய எம்மவர் எங்கே?

பொன்னாடை போர்த்து மகிழும்

தமிழ்நாட்டு பன்னாடைகள் .............

பன்னாடைகள்''''''''''

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.