Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா ‐ அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம் ‐ பாருங்கள் கேளுங்கள் காணொளியை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா ‐ அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம் ‐ பாருங்கள் கேளுங்கள் காணொளியை ‐ GTN விசேட செய்தியாளர்

அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையப் போகிறது. எதிர்வருகின்ற ஆண்டை எதிர்பார்த்து பல தரப்பட்ட அதிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் தான் கடந்த காலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கங்கள் உடைபடுகிறபோது இடையில் வெற்றிகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைப் பிடித்து விட்டு கொழும்பில் வாழ்ந்தவர்கள். அவர்கள் விடுதலைப் புலிகளின் பேச்சைக் கேட்டுவிட்டுக் கொழும்பில் இருந்தார்கள். இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு சுமுகமான சூழல் உதயமாகியிருக்கின்ற வேளையில் அதனைக் குழப்புகின்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வருகை அமைந்துள்ளது.

இது எதிர்காலத்தில் எமக்கு மிகச் சிக்கல்களைக் கொண்டு வரும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் கடந்த காலங்களில் நாம் கூறியுள்ளதைப் போல தமிழரசுக்கட்சியின் செயல் காரணமாகத் தான் இந்த ஆயுதப் போராட்டத்திற்கு ஆரம்பமே ஏற்பட்டது. சிங்களவர்கள் பிழைவிட்டார்கள். அதல்ல பிரச்சினை. அதில் ஏற்பட்ட பிரச்சினைகளை உணர்வு ரீதியாகத் தூண்டிப் பேச்சாற்றலின் ஊடாக ஒரு சமூகத்தை மோத விட்டார்கள். இன்று அதேபோன்று வந்திருக்கிறார்கள் திரும்பவும் எமது மக்களை ஏமாற்றி அரசுக்கெதிரானவர்கள் இம்மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தி எமது கட்சிக்கும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி திரும்பவும் தேசியம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தி திரும்பவும் வடக்கு கிழக்கு இணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு முயற்சி நடக்கின்றது.

இந்தக்கட்டத்தில் எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இவர்கள் கடந்த காலங்களில் செய்தவற்றைச் கூட்டிக்காட்ட வேண்டும். பயப்படாமல் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குச் சுட்டிக்காட்ட நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மாற்றாக, நீலக்கட்சிக்காரர்களுக்குச் சுட்டிக்காட்டத் தான் நீங்கள் பயப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்.

எமது பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் முரளிதரனைப் பற்றி நீங்கள் பயப்படலாம். ஏனென்றால் அவர் காலங்காலமாக ஆயுதத்துடன் இருந்து வந்தவர். ஆயுதத்தை வைத்து மிரட்டக் கூடியவர். இல்லாவிட்டால் போனில் கூட உனக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா என்று கேட்டு மிரட்டும் வல்லமை படைத்தவர். அவர் இப்பொழுது எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறார். அவரைப்பற்றி நான் நிச்சமாகச் சொல்ல வேண்டும். அவர் மாகாண சபையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார் அன்று.

அவர் மாகாணசபையைப் பற்றி விமர்சிப்பதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லை. ஏனென்றால், 13வது திருத்தச்சட்டத்தைப் பற்றியே தெரியாத ஒரு மனிதர் அவர். ஏனென்றால் கடந்த காலங்களில் எமது மாகாண ஆளுனர் எங்களுக்கெதிராகச் செயற்படுகிறார் என்று கிழக்கு மாகாண சபையில் இருக்கும் அமைச்சர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எடுக்கின்ற முக்கியமான தீர்மானம் கூட பிழை என்று எங்கேயோ இருந்தவர் வந்து சொன்னவர்.

இவரது பணி என்னவென்றால் அவரது வேலை நடக்க வேண்டுமாக இருந்தால் யாரையாவது காக்காய் பிடிப்பார். உங்களுக்குத் தெரியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய ஒரேயொரு தலைவர் தேசியத் தலைவர் தான். அவர் இருக்கும் காலங்களில் நாம் நாட்டைப் பிடித்துத் தருவோம். அவர் இல்லாவிட்டால் இங்கு எதுவுமே இல்லை. அதற்காக நீங்கள் குழந்தைகளைத் தாருங்கள். நாங்கள் ஆயுத ரீதியாகப் போராடி உங்களுக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தருவோம். அதனூடாக அபிவிருத்தி செய்வோம் என்று கூறினார்.

அவர் பேசிய பேச்சின் ஊடாகக் கிடைத்தது என்ன? மிஞ்சியது கிழக்கு மாகாணத்தில் 46000 விதவைகள். இளைஞர்களைக் கணக்குப் பார்க்க இங்கு யாரிடமும் டயறிகள் இல்லை. இருப்பது கணவனை இழந்த விதவைகள். அதிலும் இருபத்தெட்டாயிரம் பேர் 35 வயதிற்குட்பட்ட திருமணம் முடித்த விதவைகள். அதிலும் பன்னிரண்டாயிரம் விதவைகளுக்கு குறைந்தது மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் யார்? அனைவரும் தமிழர்கள்.

இவர்களில் சிலர் ஏனைய இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அல்லது பாதுகாப்புப் பிரிவினரால் சுடப்பட்டார்கள். அல்லது மாற்று இயக்கங்களால் சுடப்பட்டிருந்தார்கள். இந்த அழிவுக்கெல்லாம் யார் காரணம்? அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என பிள்ளையான் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம்

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது பிள்ளையானுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக முன்கூட்டி அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வித சந்திப்புக்களை நடாத்த பிள்ளையானுக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கவில்லை.

எனினும், பிள்ளையான் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16086&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்திலிருந்தே இந்த ஊடல் இருக்கு உங்களுக்கு இப்பதான் தெரியிது. :lol:

பாருங்கள் கேளுங்கள் காணொளியை

:lol:எங்கே காணொளி ?? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:எங்கே காணொளி ?? :huh:

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16086&cat=1# >>> Video

:blink:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது

1- சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என பிள்ளையான் தெரிவித்தார்.

என்ற சொல்வதன்மூலம் ஈழமும் வேண்டாம் ஸ்ரீலங்காவும் வேண்டாம் என்றால்

மட்டக்களப்புக்கு மட்டும் நாடு கேட்கின்றாரே

2-எமது பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் முரளிதரனைப் பற்றி

இப்படி அவர் முரளிதரன் என்று குறிப்பிட்டது

எதிரி ஆனாலும் எனக்கு பிடித்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.