Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போதுதான் பெரியவரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதுதான் பெரியவரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது? ‐ அருந்ததி.

இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி. தென்னிந்திய மொழிகளின் தொட்டில். உலகப் பொதுமறையை உவந்த தமிழ். யாதும் ஊரே யாரும் கேளீர் என்று மானுடப் பொதுமையை பகர்ந்த மொழி.என்றெல்லாம் சிறப்புப் பெற்ற மொழி தமிழ். ஆனால் தமிழர்கள். அவர்கள் அறுபதுகளில் மொழிக்காக போராடியவர்கள். ஈழத்தில் எழுபதுகளில் போராடினார்கள். தமிழகத்தில் கிளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தன் சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் அறிஞர் அண்ணாதுரையும் முதல்வர் கருணாநிதியும். அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காட்டிக் கொடுத்தது திமுக இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. முதல்வர் கருணாநிதி பேசிய இனம், மொழி, தன்மானம் பதவி அரசியலுக்கு வந்தபிறகு காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் நாற்பாதாண்டுகாலமாக தான் தமிழுக்கும் இந்த இனத்திற்கும் ஏராளமாக செய்து விட்டதாக வாய் வர்த்தையாலேயே வாய்க்கால் கட்டி அதில் கண்ணீர் கப்பல்களை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

உண்மையில் மொழி என்பதென்ன?

மொழி மனித உறவுகளுக்கு அடிப்படையான தொடர்பு சாதனம். உற்பத்தி உறவுகளுக்கான ஒரு கருவி. இவைகள் யதார்த்தமான அணுகுமுறையாக இருக்கும். மொழி என் உயிரிலும் மேலானது. மொழி புனிதமானது என்பது திமுக கருணாநிதியின் அணுகுமுறை. உற்பத்தி உறவுக்களுக்கான கருவியான மொழி உற்பத்தியில் பங்கேற்கிறதா? என்றால் இக்கட்டுரை எழுதவும், இது போன்ற எழுத்துத் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இன்னும் சிலருக்கும் பயன்படுகிறதே தவிற வேறு உற்பத்தியோடு தொடர்பில்லாமல்தான் தமிழ் இருக்கிறது.

கிராமத் தொழில்களில் தமிழ் பயன்பட்ட்டாலும் அது சந்தை மொழியாக இல்லை. அங்கே ஆங்கிலம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்த திமுக ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதிலும் நாடகம்தான். விளைவு தமிழே தெரியாத தலைமுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு நகர்ப்புரங்களில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க கிராமப்புரங்கள், சிறிய நகரங்களில் தமிழைத் தவிற வேறு மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் எங்கள் உயிருக்கு நிகர் என்றவர்கள் கிராமப்புரங்களில் தமிழ் மட்டுமே தெரிந்த சந்ததியை உருவாக்குவது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்த தலைமுறைக்கு சேவை செய்யவா? என்றெல்லாம் கேள்விகள் இருந்தாலும். தமிழ் மொழியை கட்டாயமாக்கவோ, தமிழில் மொழிச் சீர்திருத்தம் செய்யவோ இன்றளவும் முன் முயர்ச்சிகள் எடுக்கப்படவில்லை. தமிழ் சைவத்தாலும் வைணவத்தாலும் கறைபட்ட மொழி என்றார் பெரியார். பெரியாருக்குப் பிறகு அதை எவளவு கறைபடுத்த முடியுமோ அவளவு கறைபடுத்தி விட்டார் கருணாநிதி. தன் அரதப் பழைய தமிழ் நடையால்.

சரி மொழிதான் இப்படி இருக்கிறது தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்.

தமிழ் மொழி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் தமிழர்கள் உயிரோடும் உயிருக்கான உத்திரவாதட்தோடும் இருக்க வேண்டும்.

இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் கருணாவையும். டக்ளஸ்தேவானந்தாவையும், ஆறுமுகத் தொண்டைமானையும், முத்து சிவலிங்கத்தையும் நான் சொல்லவில்லை. ஈழ மக்களைச் சொல்கிறேன். ஒப்பீட்டளவில் இலங்கையும் கடந்த முப்பதாண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அப்படித்தான் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இடப்பெயர்வு, கொலைகள், காணாமல் போதல் என பல்வேறு காரணங்களால் இந்த ஜனத் தொகை வீழ்ச்சி ஏற்பட்டுகிறது. ஆக தமிழ் பேசும் மக்கள், தமிழ் மொழிபேசுவோரின் தாயங்கள் என்று அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக வடக்கு கிழக்கில் குறைவான எண்ணிக்கையில் உள்ளார்கள். அல்லது குறைந்து கொண்டு வருகிறார்கள். இப்போது முதல்வர் கருணாநிதியும் பேராசிரியர் சிவதம்பியும் காப்பாற்ற வேண்டியது தமிழையா? தமிழர்களையா?

இப்படியான ஒரு கேள்வியை நாம் கேட்டால் உடனே முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதமிருந்து மூன்று மணி நேரத்தில் போரை நிறுத்தி ஈழ மக்களைக் காப்பாற்றவில்லையா? பத்து எம்பிக்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை முகாம்களில் இருந்து விடுவிக்க வில்லையா? என்று கேட்கிறார்கள். அவர் கூட்டும் செம்மொழி மாநாட்டுக்கு ஈழத் தமிழறிஞராக நீங்கள் செல்லக் கூடாது என்று நாம் பேராசிரியர் சிவத்தம்பியை பார்த்துக் கேட்டால்? அவரோ இதை அரசியல் ஆக்காதீர்கள்? இது அரசியல் மாநாடல்ல? மொழிக்கான மாநாடு? என்று திமுகவினர் பேசுகிற மாதிரியே பேசுகிறார். ஐம்பதாயிரம் மக்கள் படுகொலையாகி, தமிழர்கள் தங்களின் நிலப்பரப்பையும் இழந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போதேனும் இதை அரசியல் ஆக்காவிட்டால் எப்போதுதான் பெரியவரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது?

பெரியவர் சிவத்தம்பி வீரகேசரிக்கு அளித்துள்ள நேர்காணல் இன்றைய யதார்த்த நிலைகளுக்கு புறம்பாக உண்மைகளை மறைத்து அல்லது, உண்மைகளை பேச மறந்து விடப்பட்ட நேர்காணலாகும். அதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை வரவேற்க வேண்டும் என்றும். கூறியிருக்கிறார்.

கோவையில் முதல்வர் கருணாநியின் விருப்பத்திற்கிணங்க நடைபெறப் போவது உலகத் தமிழ் மாநாடே அல்ல. முதன் முதலாக நடைபெறும் செம்மொழி மாநாடு. இந்தச் செம்மொழி மாநாடு நடத்துவதன் நோக்கமே ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக கருணாநிதி மீது எழுந்துள்ள கசப்புகளை மறைத்து. உலகத் தமிழர்களின் ஒரே உரிமையாளர் தான் தான் என்று பரைசாற்றவும். ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையோ, அரசியல் கோரிக்கைகளோ ஒரு பொருட்டே அல்ல, என்னால் எந்தச் சூழலிலும் எம்மாதிரியான மாநாடுகளையும் தனது ஆதரவாளர்களைக் கொண்டு நடத்த முடியும் என்று அதிகாரத்தில் இருந்து கொண்டு சுய இன்பம் காணுகின்ற ஒரு மாநாடாகும்.

இன்றைய இலங்கைச் சூழலில் ஆட்சியாளர்கள் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளிடம் சிக்கித் திணறுவதை நாம் கண்டு வருகிறோம். போருக்குப் பின்னர் சர்வதேச நாடுகள் பல் வேறு நெருக்கடிகளை இலங்கைக்குக் கொடுத்து வருகின்றனர் என்பதோடு, இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான மிகப் பெரிய இனப்படுகொலை நடந்திருபப்து உண்மைதான் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் சுமூக நிலை நிலவுவதாகவும், தமிழர்கள் பிரச்சனைகள் இன்றி அல்லது மிகக் மிக குறைவான சோப்பு, சீப்பு, கண்ணாடி இல்லாமல் சின்ன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவல்லாமலும் இலங்கை அரசின் இனவெறிப் பாசிஸ்டுகளோடு நெருக்கம் பேணுவதையும் நாம் காண முடிகிறது. மிக மோசமான கொலைகள், முகாம்கள், நிலங்களை இழத்தல் என்னும் நிலை இலங்கையில் நிலவும் போது இம்மாதிரியான செம்மொழி மாநாடே அவசியம் இல்லை என்பதுதான் பெரும்பலான தமிழகத் தமிழ் மக்களின் கருத்தும்.

ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி மாநாட்டிற்கு செல்லும் முடிவை எடுத்து விட்டதாகவும், வயது மூப்பின் காரணமாக ஓடியாடி வேலை செய்ய இயலாத நிலையில் அவரின் சிந்தனைப்படி செயல்படவே அவர் நினைக்கும் காரியங்களை முடிக்க ஆய்வரங்கத் தலைவராக பேராசிரியரோடு கனிமொழியும் நியமிக்கப்பட்டதாகவும். நேரடியாக கருணாநிதியே பேராசிரியரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்ட பின்பே ஆய்வரங்கப் பதவி நியமனம் பெற்றதாகவும் செய்திகள் கசிந்து கிடக்கின்றன.

நாம் பேராசிரியரிடம் கேட்க விரும்பிவது ஒன்றைத்தான். இலங்கையின் இராணுவச் சூழலுக்குள் வாழும் உங்களால் இனக்கொலை குறீத்து பேச முடியாது. அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக நீங்கள் கடைபிடிக்கும் இதே மௌனத்தை ஒரு ஆயுதமாக ஏன் முதல்வர் கருணாநிதி கூட்டும் மாநாட்டிற்கு எதிராக பிரயோகிக்க முடியாது.

மக்கள் மாநாட்டிற்கு எதிராக இருக்கும் போது தமிழறிஞர்கள் மட்டும் தமிழர்களை மற்ந்து விட்டு தமிழை அரியணையேற்ற நினைப்பது எவளவு நீசத்தனமான காரியம்? இது தொடர்பாக உலகெங்கிலும் வாழும் ஈழ மக்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான். போர்க்குற்றவாளிகளான ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு கருணாநிதி படையல் வைத்தால் அவர் துரோகி, திருமாவளவன் சால்வை போடால் துரோகி, கனிமொழி பரிசு வாங்கினால் துரோகி, ராமதாஸ் பதவியை இழக்க மறுத்தால் துரோகி ஆமாம் இதெல்லாம் துரோகங்கள்தான். அப்படியான துரோகிகள் கூட்டும் மாநாட்டிற்குச் செல்லத் துடிக்கும் பெரியவர் யார்? அப்படியான ஒரு சூழல் வரக்கூடாது பேராசிரியராவது தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுவே உலகத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16611&cat=5

பேயென்ற ஒன்று கிடையாது@ பேய்க்குச் சொல்லப்படும் இலட்சணங்கள் தான் மனித உருவில் நடமாடுகின்றன. சூது செய்து பிறர் சொத்தை சுரண்டிப் பிழைப்பவன் ஒரு பேய். பாடுபடுபவன் வாழ்க்கையைப் பாலைவனமாக்கிவிட்டுஇ சொந்த வாழ்க்கையை மட்டும் நந்தவனமாக்கிக் கொள்ளும் நயவஞ்சகன் ஒரு பேய் - எச்சில் பணத்துக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழிகுணத்தான் ஒரு பேய்!

- மு. கருணாநிதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.