Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி:1 இந்தியர்+2 பேரின் தலை துண்டித்து தண்டனை

Featured Replies

FRON__002312_1025.jpg

ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

மரியம் ஹூசேனின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றி வந்த ஹலிமாவின் உதவியுடன் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து கொள்ளையடித்தனர்.

இதையடுத்து ஹலிமா உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெட்டாவில் இவர்கள் மூன்று பேரும் வாளால் தலை துண்டித்து மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 59 பேருக்கு இவ்வாறு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 102 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷிராய சட்டப்படி, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவை மரண தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தற்ஸ் தமிழ் / deathpenaltynews

இதுக்கே இப்படின்னா...

என்னுடைய பட்டியலில் இந்திய இலங்கை அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்...

சவுதி ஷேக் அவர்களே, இவர்களையும் சேர்த்து தண்டிப்பீர்களா?

கடந்தகிழமை கொழும்பில் ஓர் இளைஞனை நூறுபேர் வேடிக்கை பார்க்க ஐந்து குண்டர்கள் சேர்ந்து பொல்லுகளால் அடித்து கடலில் கொன்றார்களே.. அவற்றைவிடவா இது மோசம்? இதாவது பரவாயில்லை.. ஒரு சீவலில் உயிர்போய்விடும், வேதனை இல்லை. ஆனால்.. அந்த இளைஞன் துடிதுடித்து இறந்தானே. அது கொடூரம்.

நம்ம ஊரில நடக்காத கொலைகளா? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. நமது ஊரிலோ.. மண்வெட்டி தொடக்கம் உளி, screwdriver வரை எத்தனைவிதமான ஆயுதங்களால் அப்பாவிகளை கொலை செய்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் சில அப்பாவி வெளினாட்டவர்களும் பொய்யான குற்றங்களுக்கு தண்டனைக் உள்ளாக்கப்படுவார்கள்.

ஆனால் சிங்களச்சிறையில் கைது செய்யப்பட்டவர்கள் சாகும் வரை தினமும் தினமும் சித்திரவதைக்கு உட்புகுத்தப்படுவார்கள்.

இதாவது பரவாயில்லை

? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. .

கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை.அது மனிதன் எழுதிய சட்டமாகவோ அல்லது அல்லாவின் சட்டமாகவோ இருந்தாலும் யாரும் யாரையும் கொல்ல உரிமையில்லை

கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்களும் உண்டு. மச்சி உங்களுக்கு தெரியாத என்ன? :wub:

Edited by Jil

  • தொடங்கியவர்

கடந்தகிழமை கொழும்பில் ஓர் இளைஞனை நூறுபேர் வேடிக்கை பார்க்க ஐந்து குண்டர்கள் சேர்ந்து பொல்லுகளால் அடித்து கடலில் கொன்றார்களே.. அவற்றைவிடவா இது மோசம்? இதாவது பரவாயில்லை.. ஒரு சீவலில் உயிர்போய்விடும், வேதனை இல்லை. ஆனால்.. அந்த இளைஞன் துடிதுடித்து இறந்தானே. அது கொடூரம்.

நம்ம ஊரில நடக்காத கொலைகளா? இவனாவது விசாரிச்சுப்போட்டு கொலை செய்கிறான்.. நமது ஊரிலோ.. மண்வெட்டி தொடக்கம் உளி, screwdriver வரை எத்தனைவிதமான ஆயுதங்களால் அப்பாவிகளை கொலை செய்கின்றார்கள்.

அரபு நாடுகளில் சில அப்பாவி வெளினாட்டவர்களும் பொய்யான குற்றங்களுக்கு தண்டனைக் உள்ளாக்கப்படுவார்கள்.

ஆனால் சிங்களச்சிறையில் கைது செய்யப்பட்டவர்கள் சாகும் வரை தினமும் தினமும் சித்திரவதைக்கு உட்புகுத்தப்படுவார்கள்.

பம்பலப்பட்டி கொலை துயரமான உண்மைதான்....அதனுடன் சிறைகளில் தமிழர் வேதனைகள் சொல்லி மாளாதது...

கொலை செய்ய யாருக்கும் உரிமையில்லை.அது மனிதன் எழுதிய சட்டமாகவோ அல்லது அல்லாவின் சட்டமாகவோ இருந்தாலும் யாரும் யாரையும் கொல்ல உரிமையில்லை

கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்களும் உண்டு. மச்சி உங்களுக்கு தெரியாத என்ன? :lol:

மச்சி நாம இப்ப அலசிகிட்டிருக்கறது...தப்புக்கு தண்டனை கொடுக்குற நாட்டிற்கும் தப்பே செய்யாததற்கும் கொடுக்குற நாட்டிற்கும் இதுல கொலை செய்தவனையும் உயிர்வாழவிட்ட,வாழவிடுகின்ற நாடுகளும் சமுகங்க பத்தி நமக்கேன் மச்சி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.