Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு கூட்டமைப்பினர் வரவேற்பு(!)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கிலும் கிழக்கிலும் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர். நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அரசினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். கூட்டமைப்பினர் இப்போது சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் எம்பி சட்டத்தரணி சிறிகாந்தா, பாராளுமன்ற உறுப்பினரும் சனாதிபதியின் ஆலோசகருமான பசில்ராஜபக்ஸவையும் அமைச்சர் றிசாட் பதிவூதீனையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் பசிலும், றிசாட்டும் மிகவும் அர்ப்பணிப்புடன்(?) ஆற்றும் சேவைக்கு பாராட்டு மழை பொழிந்தார்! பாராட்டாமல் விட்டால் நாம் அரசியல் நாகரீகம் அற்றவர்களாகிவிடுவோம். வடக்கு கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உதவதயாராகவுள்ளது எனவும் சட்டத்தரணி காந்தா சபையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி:-

வவுனியா மன்னார் வீதி குருமண்காட்டு சந்தியிலிருந்து- நெளுக்குளம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செய்ய முடியாது உள்ளதாக வீதியினை பயன்படுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வீதி அண்மையில் சீர் செய்யப்பட்டது மீண்டும் பழுதடைந்து குன்றும் குழியுமாகவே காட்சி தருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இதுவாகும்.

கல்வி, சுகாதாரம் ,வீதி, நீர்பாசனம் தொலைத் தொடர்பு சேவைகள் போன்ற பாரிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது. மக்களுடைய தேவைகள் இனம் காணப்பட்டு(?) .

தொடர்புபட்ட செய்தி:-

வவுனியா மன்னார் வீதி குருமண்காட்டு சந்தியிலிருந்து- நெளுக்குளம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து செய்ய முடியாது உள்ளதாக வீதியினை பயன்படுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வீதி அண்மையில் சீர் செய்யப்பட்டது மீண்டும் பழுதடைந்து குன்றும் குழியுமாகவே காட்சி தருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இதுவாகும்.

மகிந்தா தமிழில் தமிழர்களுடன் கதைக்கும் பொழுது ,தமிழ் எம் பி மகிந்தாவை பாராட்டினா என்ன தப்புங்கோ?

பிழைக்க தெரிந்த ஈழத்தமிழன் வாழ்க

மகிந்தா தமிழில் தமிழர்களுடன் கதைக்கும் பொழுது ,தமிழ் எம் பி மகிந்தாவை பாராட்டினா என்ன தப்புங்கோ?

பிழைக்க தெரிந்த ஈழத்தமிழன் வாழ்க

தமிழ் மக்களை மனிதகேடயமாக விடுதலை புலிகள் பயண்படுத்தினார்கள் - சிறீகாந்தா எம்பி.

தமிழ் மக்களை மனிதகேடயமாக விடுதலை புலிகள் பயண்படுத்திய போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை விடுதலை செய்யும்படி கேட்கமால் அவர்களின் அழிவுக்கு காரணமாய் இருந்துள்ளது என சுட்டிகாட்டியபோது அது ஒரு நியாயமான குற்றசாட்டு என கூறிய அவர்

யுத்தம் நிறுத்தபட்டால் மட்டுமே மக்களை அழிவில் இருந்து காபற்றமுடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு திடமாக நம்பியதாகவும் குறிப்பிட்ட அவர் மக்களை விடுதலை செய்யும்படி விடுதலை புலிகளிடம் தலைகீழகாக நின்று கேட்டிருந்தாலும் கூட நிச்சயமாக புலிகள் அவர்களை விடுதலை செய்துயிருக்கமாட்டார்கள் ஏன்னெனில் பொதுமக்கள் அவர்களுக்கு கேடயமாக தேவைபட்டார்கள் பொதுமக்களை அவர்கள் வெளியே விட்டு விட்டு புலிகள் யுத்தம் செய்வார்கள் என நான் நாங்கள் கற்பனை செய்யும் அளவிற்க்கு முட்டாள்கள் அல்;ல எனவும் கூறினார். அத்தோடு எங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள் எனவும் பட்டம் சூட்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார.; அதற்காகவே நடைமுறையில் சாத்தியமான போர்நிறுத்தம் ஒன்றைகேட்தாக தெரிவித்தார்.

Edited by Bond007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.