Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண

Featured Replies

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண்டுவர உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விடுதலைப் புலிகளை அழித்தது யார்? என்ற பெருமையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபங்களை அடைவதில் மகிந்த சகோதர்களுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகின்றது. இந்தப் பனிப்போரை இலாபமாக்கி தேர்தலில் வெற்றிக்கனியை தாங்கள் பறித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சரத் பொன்சேகாவை தமது வேட்பாளராக்க முனைந்த எதிர்க்கட்சியினரும் ஆடிப்போகும் அளவிற்கு சர்வதேச நெருக்கடிகள் சிக்கியிருக்கின்றார் சரத் பொன்சேகா. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருக்கும் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமையதிகாரியுமான சரத் பொன்சேகாவும் தமிழினப் படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளாக இருக்கின்றனர்.

முப்படைகளின் தளபதியாக சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்து போரை வழிநடத்திய போதும், அதனை செயல்முறைப் படுத்தியதில் இந்த இருவருக்கும் முக்கிய பங்குண்டு. சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இவர்கள் நடத்திய இனப்படுகொலைகளும், அதனை நியாயப்படுத்தி இவர்கள் வெளியிட்ட கருத்துக்களும் எச்சரிக்கைகளும் சாதாரணமானவையல்ல. பயங்கரவாதம் என்ற போர்வையில் எதனை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று கருதிய இவர்கள் வன்னிப் போரை தங்கள் விருப்பம்போன்று மிகக்கொடூரமாக நடத்தியிருந்தார்கள். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளர்கள், வயோதிபர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவர் மீதும் முப்படைகளையும் கொண்டு மிகக் கடுமையான தாக்குதலை இவர்கள் நடத்தியிருந்தார்கள்.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறமுடியாதவாறு, உலகில் போரை நடத்திய கொடூரமான சர்வாதிகாரி என வர்ணிக்கப்படும் ஹிட்லர் கூட செய்யாத அளவிற்கு மருத்துவமனைகளையும் இலக்குவைத்துத் தாக்கியழித்து தங்களது காட்டுமிராண்டித் தனத்தை இவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். வினையை விதைத்தவர்கள் இப்போது அதனை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் ‘மறைவு’ சர்வதேசத்தின் பார்வையை முழுமையாக சிறீலங்காவை நோக்கி திருப்பியிருக்கின்றது. இப்போதுதான் அவர்கள் சிறீலங்காவின் உண்மையான முகத்தை கண்டுகொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். அதனால், இந்தப் படுகொலையாளர்களை நோக்கி சர்வதேசம் சுட்டுவிரலை நீட்டத் தொடங்கியிருக்கின்றது.

தங்களது நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருப்பதனால் மற்றவர்களைவிட ஒருபடி மேலே சென்று, அமெரிக்கா இவர்களை விசாரணை செய்யவும் முனைந்துள்ளது. அமெரிக்க அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த, போர்க் குற்றங்கள் தொடர்பான பட்டியலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின் 46வது பக்கத்தில், வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளை உயிருடன் விடாமல் கொன்று குவிக்க வேண்டும் என்றும், இதற்காக போரின் போது கடைப்பிடிக்கப்படும் எந்த நியதியையும் பார்க்கத் தேவையில்லை என்றும் தனது படைத் தளபதிகளுக்கு சரத் பொன்சேகா உத்தரவிட்டுள்ளார்.

சும்மாவா விடுமா????? 20000 மேற்பட்ட உயிர்களை ஒரேநாளில் கொன்றவர்களை தெய்வம் நின்று நிதானமாகதான் எல்லாம் செய்வார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்..... 2005 ம் ஆண்டு மாவீரர்நாள் உரைப்படி போகேல்ல..... 2009 திட்டம் 27 ம் திகதி வரும் மகிந்தவ நரியனாவும் சரத் பொன்சேகாவ நல்லவரா சேத்திட்டா போகிது. :)

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

??

Edited by Mathivathanang

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.