Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது யாருக்கு? ஓர் ஆய்வு.

Featured Replies

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது யாருக்கு? ஓர் ஆய்வு.

மகிந்தவுக்கு வாக்களித்தாலும் சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தாலும் தமிழ்மக்களுக்கு ஒன்றும் நன்மை வரப்போவதில்லை.

இரணடு பேரும் தமிழினப் படு கொலையை முன்னின்று செய்தவர்கள் இரண்டு பேரையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வெளிப்படையானது. இத் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாம் அவ்வாறு செய்தாலும் இருவரில் ஒருவர்தான் ஜானாதிபதியாகப் போகிறார் என்பது நிச்சயம்.

இவ்வாறுதான் இருக்கிறது தமிழ் மக்களின் அரசியல் பலம். இதற்கு என்னதான் தீர்வு? யார் வந்தால் நமக்கென்ன என்று இருக்கப் போகிறீர்களா? இந்த இக்கட்டான நிலையில் இந்தியாவினால்தான் ஏதாவது பலன் தமிழ் மக்களுக்குண்டு. அப்பிடியானால் இந்தியாவோடு தமிழ் மக்கள் ஒன்றிப் போக வேண்டும். இப்படித்தானே தமிழ் மக்கள் இதுவரை இருந்து வந்தார்கள். தமிழர்களை கைவிடாது என்று இறுதிவரை நம்பியிருந்தார்கள் இதனால் தமிழ் மக்களுக்கு இந்தியாவால் அழிவைத்தவிர என்னத்தைப் பெற்றுத் தந்தார்கள் அத்தோடு மட்டுமில்லாமல் தமிழர்களை அழிப்பதில் துணைபோயுள்ளது.

தமிழர்கள் தயவு செய்து இந்தியாவை இனியும் நம்பி ஏமாற வேண்டாம். இந்தியா நமக்கு நன்மை செய்வது போல் நாடகமாடி தமிழர்களைக் கருவறுக்கின்றது. சிங்களவனின் விருப்பத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது தன்னை வல்லரசு என்று தம்பட்டம்மடிக்கும் இந்தியா. இந்த சிறிய நாடு என்ன சொல்லுதோ அதை மீறி இந்தியாவால் ஒன்றும் செய்துவிமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு பல காரணங்களுண்டு சீனாவின் வளர்ச்சி மற்றும் சீனா பாகிஸ்தான் இலங்கையோடு கொண்டுள்ள நட்பு என்பவற்றைக்குறிப்பிடலாம். அப்படியானால் என்னதான் இதற்கு தீர்வு. இப்போதுதான் தமிழர்கள் நன்கு சிந்தித்து செயற்படவேண்டிய தருணம்.

இதுவரை காலமும் இந்தியாவோடு தமிழர்கள் நட்பாக இருந்ததால்தானே இந்த நிலைமை இனிமேல் எமக்கு சிங்களவர்களோடு ஒட்டி உறவாடிவரும் இந்தியாவையும் எதிர்க்க வேண்டும் இதைத்தான் தலைவர் அன்றைக்கே நமது மண்ணில் வைத்து எதிர்த்து களமாடினார். பின்னர் நன்மை செய்வது போல் நாடகமாடி கருவறுத்திருக்கிறது. இன்றய நிலையில் எப்படி தமிழ் மக்கள் எதிர்க்க முடியும் என்று எண்ணவேண்டாம். இந்தியா யாரை இலங்கையில் ஜனாதிபதியாக்க விரும்பவில்லையோ அவரையே தமிழ்மக்கள் தேர்வு செய்யவெண்டும். என்பது எனது நிலைப்பாடு. இதனால் தமிழர்களுக்கு உடனடியாக ஒன்றும் நிகழ்ந்து விடாட்டியும் தமிழர்களை அழித்தொழிக்கத் துணைபோன இந்தியாவுக்கு நல்ல பாடத்தைக் கற்பிக்க முடியும். இதற்கு பின்னர் தமிழர்களை தன் நலனுக்காக பகடைக்காயாய பயன்படுத்த முயலாது. மாறாக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் தமிழர்களுக்கு சார்பான நிலையை எடுக்க நேரிடும்.

சரத்பொன்சேகாவை ஜனாதிபதியாக்க இந்தியா விரும்பவில்லை காரணம் பாகிஸ்தானோடு நெருக்கமானவர் என்பதோடு அமெரிக்காவுக்கும் சார்பானவர். இதனால் இந்தியா கதிகலங்கிப்போய் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவுக்கு சாட்டை அடிகொடுக்க வேண்டும். இதன்பின்னர் இந்தியா தமிழர்களுக்கு வால்பிடிக்க வரும் என்று எண்ணுகிறேன். இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாக்கிலதான் தங்கியுள்ளது யார் ஜனாதிபதி ஆவது என்பது. இருந்தது போதும் இதுவரை செருப்பாய் எழுந்து நில் எவன் எதிரி என்று கண்டு சம்மட்டியடி கொடுக்கத் தயாராக வேண்டும். அழிவைத் தந்தவுனுக்கே அதைத் திருப்பிக்கொடு.

http://tamilnilam.webs.com/

Edited by suryaa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சனாதிபதியினாலும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வை தரமுயாது என்று தானே 2004ல் தேர்தலை புறக்கணித்தோம். இன்றைக்கு எந்த வகையில் எமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுவிட்டோம் இவர்களை ஆதரிப்பதற்கு ??? அழிவைத் தந்தவுனுக்கே அதைத் திருப்பிக்கொடுப்போம், அதற்காக ஈனபிறவிகளை ஆதரித்து வெற்றிபெறவைக்க வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை. இந்தமுறையும் தமிழன் (நான்) இத்தேர்தலை பகிஸ்கரிப்பேன்.சிங்கள நாட்டுக்கு சனாதிபதி யார் என்பதை அவங்களே தீர்மானிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவனை ஆதரித்தாலும் தமிழனுக்கு அழிவு அழிவுதான் அன்று தொடக்கம் இன்று வரை ஜனாதிபதியான எவனாலும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவனை ஆதரித்தாலும் தமிழனுக்கு அழிவு அழிவுதான் அன்று தொடக்கம் இன்று வரை ஜனாதிபதியான எவனாலும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை

ஜநாதிபதிய விடுங்கோ அவன் சிங்களவன்....

உந்த எம்பிமாரால?

புலியளால?

புலம்பெயர் தமிழரால(என்னையும் சேத்து)

எப்பவும் அழிவுதான். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜநாதிபதிய விடுங்கோ அவன் சிங்களவன்....

உந்த எம்பிமாரால?

புலியளால?

புலம்பெயர் தமிழரால(என்னையும் சேத்து)

எப்பவும் அழிவுதான். :)

அப்ப நீங்களாய்ப்பாத்து ஈழத்தமிழருக்கு ஒரு நல்லவழியை சொல்லுங்கோவன் பாப்பம் :lol:

  • தொடங்கியவர்

தமிழர்கள் இத்தேர்தலைப் புறக்கணித்தாலும் தமிழ்துரோகிகளின் துணையில் எப்படியோ ஒருவர் வரப்போகிறார். இப்படியே பார்த்துக் கொண்டிருகாமல் சிங்களவனைப் போல சாணக்கியத்தனத்தை நாங்களும் பின்பற்றவேண்டும் . சிங்களவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடக்கூடாது எதிரிகளையும் துரோகிகளையும் என்றும் மன்னிக்கவும் கூடாது மறக்கவும் கூடாது. எமது இலட்சியத்தில் உறுதியாக இருப்போம். தற்கலிகமாக ஒரு சமாதானத் தீர்வை முன்வைத்து ஊரை ஏமாற்றுவார்கள் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மதிமயங்கிவிடாமல் இறுதி இலட்சியம் வரை போராடவேண்டும். இன்று நீ போராடவிட்டாலும் உன் சந்ததி போராடவேயண்டிய நிலை கண்டிப்பாக வரும் காரணம் சிங்களவனின் இயல்பு அப்படி அவனோடு ஒன்றாய் வாழ்வது என்பது முடியாததொன்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஜநாதிபதிய விடுங்கோ அவன் சிங்களவன்....

உந்த எம்பிமாரால?

புலியளால?

புலம்பெயர் தமிழரால(என்னையும் சேத்து)

எப்பவும் அழிவுதான். :o

அட நீங்கள் எந்த எம் .பியை சொல்கிறீங்கள் எனக்கு புரியும் படியாக சொல்லுங்கள் [அட கனபேர் இருக்கிறாங்கள்]

அடுத்து புலி; அது எந்த புலிங்கோ அரசாங்கம் தானே புலிகளை அழித்து விட்டது பின்பு எந்த புலிகளிடம் எதிர்ப்பார்ப்பது ஒருவேளை சோத்துக்கும் ,சுகத்துக்கும் சோரம் போன போலி[புலி] களை சொல்கிறீரோ

புலம் பெயர் தமிழர்களால ; உங்களையும் சேர்த்து ..........உங்களை போல் ஆட்கள் இருக்கும் வரைக்கும் எப்போது விடிவு அந்த மக்களுக்கு??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.