Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஈழம் – மௌனத்தின் வலி”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் – கூத்தாடிகள், கூலிக் கவிஞர்களின் ஒப்பாரி! யார் இந்த ஜெகத் கஸ்பார் ?

சர்வதேசியவாதிகள் எழுதியது 21 மறுமொழிகள்

பகுப்புகள்: இனவெறி, ஈழம், கம்யூனிசம், சினிமா, சீனா, தமிழ் பார்ப்பனியம், தமிழ்தேசியம், பாசிசம், பிழைப்புவாதம், புரட்சி, போலி சுதந்திரம் மேலும் மனித உரிமை

Tags: இக்ஷா யோகா, இந்திய மேலாதிக்கம், இந்தியா, இனவெறி, ஈக்ஷா யோகா, ஈழம், உளவாளிகள், கம்யூனிசம், கவிதை, காங்கிரஸ், காந்தி, குழந்தைகள், சர்வதேசியம், சினிமா, சீனா, சுதந்திர தினம், ஜக்கி வாசுதேவ், ஜனநாயகம், ஜெகத் கஸ்பார், தமிழகம், தமிழ்தேசியம், நக்கீரன் கோபால், நிழற்படங்களின் தொகுப்பு., நூல் வெளியீடு, பாசிசம், பிரகாக்ஷ்ராஜ், பிரபாகரன், பிழைப்புவாதம், புகைப்படம், புரட்சி, புலிகள், மனித உரிமை, மௌனத்தின் வலி, வர்க்கம், விழா, வெளியீடு

ஈழத்தில் மிக வக்கிரமான ஒரு இனப்படுகொலையை இந்த‌ உலகமே வேடிக்கை பார்க்க பார்க்க நடத்தி முடித்திருக்கிறது சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாத அரசு. உலகில் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஐ.நா மன்றம், உலகின் ஒற்றை துருவ மேலாதிக்க ரவுடியாக திரியும் அமெரிக்கா, மற்றும் பல்வேறு போலி சோசலிச குடியரசுகள் வரை ஒட்டு மொத்த உலகின் அனுமதியுடன் தான் இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டது. இந்த இனப்படுகொலையை ந‌டத்திய போர் குற்றவாளிகளில் முதல் குற்றவாளி, நமது நாட்டில் ஒழுங்காக‌ ஒரு கக்கூசை கூட கட்டி பராமரிக்க வக்கற்ற இந்திய அரசு தான். பாசிச வெறியர்களின் இரத்தக்கள‌ரி முடிந்து இன்று ஐந்து மாதங்களாகிறது. இன்றோ மூன்று இலட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலிக்கப்பால் வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். முள்வேலி சிறைக்குள்ளும் வதை முகாம்களிலும் அடைத்து சித்தரவதைக்குள்ளாக்கப்படும் ஈழ மக்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் தமிழகத்திலும் உலக அளவிலும் பல்வேறு முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பிட்ட‌ சில நாடுகள் மட்டும் புலம் பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்களின் அழுத்தம் காரணமாக‌ ஈழத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய‌துடன், கண்துடைப்புக்கு ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளன.

தமிழகம் மற்றும் இந்தியாவை பொருத்தவரை ‘ஈழம்’ என்ற சொல் இது வரை தீண்டத்தகாததாகவும், ஈழ மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை பயங்கரவாதிகளின் மீதான அழித்தொழிப்பு என்று சித்தரித்ததன் மூலம் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இரக்கமற்ற‌ வேட்டைக்கு நியாயம் கற்பித்த இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்பிக்களும், தேர்தலுக்கு முன் “காங்கிரஸை முறியடிப்போம்” என்று சீறி, பிறகு தேர்தல் வந்ததும் “காங்கிரசுடன் கூட்டணி தர்மம் காப்போம்” என்று கருணாநிதியின் கட்டளையை காத்த எம்பியும், ஈழத்திற்காக ‘அரைநாள் உண்ணாவிரதம்’ என்னும் கலியுக காவியத்தை கண்ணகி சிலை அருகில் உலகத்தமிழர்களுக்கே நடத்தி காட்டிய கருணாநிதியின் வாரிசுமான‌ கனிமொழியும் சேர்ந்து மொத்தம் பத்து எம்.பிக்கள் வதை முகாம்களில் உள்ள ஈழ மக்களை நேரில் கண்டுவர சமீபத்தில் சென்று வந்தார்கள்.

இவர்கள் ஈழ மக்களின் உரிமைகளை கோர சென்றார்களா அல்லது சுற்றுப்பயணம் சென்றார்களா என்ற கேள்வி எழும் அளவிற்கு வெறும் கண் துடைப்பிற்காகவும், பதவி நலனுக்காகவுமே செயல்படும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது நம் எல்லோருக்குமே நன்றாக‌ தெரியும். சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துக்கொண்டிருந்த போது இந்த எம்.பிக்கள் யாரும் வாயை கூட திறக்கவில்லை, அல்லது தமது இரு கரங்களையும் பின் பக்கமாக கொண்டு சென்று பதவியை பத்திரமாக பிடித்துக்கொண்டு வார்த்தைகளை அளந்து அளந்து போட்டார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் திடீரென்று வேறு சில அமைப்புகள் ஈழ மக்களுக்கான‌ பிரச்சாரங்களையும், ஈழ துயரத்திற்கெதிரான கண்டனங்களையும் தெரிவிக்கின்றனர். போராட்டங்களையும் நடத்துகின்றனர். இவர்கள் ஈழ மக்களுக்காக கவலைப்படட்டும் கண்ணீர் விடட்டும் போராட்டம் நடத்தட்டும். ஆனால் ஈழத்தமிழர்களின் கவலைகளுக்கும் கண்ணீருக்கும் காரணமானவர்களுடனே கைகோர்த்துக்கொண்டு கவலை தெரிவிக்கும் கண்ணீர் விடும் இந்த புதிய‌ கனவான்கள் யார் என்பது தான் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

நேற்றைய முன்தினம் (14-11-09) ‘நாம்’ என்னும் அமைப்பும், ‘போருக்கெதிரான பத்திரிக்கையாளர் அமைப்பு’ என்கிற‌ அமைப்பும் ‘நல்லேர்’ பதிப்பகத்துடன் இணைந்து ஈழமக்களின் துயரங்களை கவிதை வடிவில் தெரிவிக்கும் ‘ஈழம் மௌனத்தின் வலி’ என்னும் நூல் வெளியீடு நிகழ்ச்சியை சென்னை எழும்பூரில் நடத்தினார்கள்.

இவர்கள் யார் என்று அறிந்து கொள்வதற்காகவே கடுமையான மழையிலும் நனைந்து கொண்டே நாம் நிகழ்ச்சி நடக்கும் அரங்கை அடைந்தோம். அரங்கிற்குள் நுழைந்ததுமே நமக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக ஈழம் பற்றிய பொது கூட்டமோ, அரங்க கூட்டமோ எது என்றாலும் அதிக அள‌வில் இளைஞர்கள் இருப்பதை காணலாம். அதுவும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்களாகவே இருப்பார்கள், ஏதோ ஒரு வகையில் அவர்கள் முற்போக்கு வட்டத்துடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த கூட்டத்தில் அதிகமாக பெண்கள் அதுவும் பணக்கார மற்றும் மேல் நடுத்தர வர்க்க பெண்கள் குடும்பத்தோடு அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. எங்கு பார்த்தாலும் வித விதமான பெர்ஃப்யூம் வாசனைகள். ஆண்கள் தங்கள் மனைவி குழந்தைகள் சகிதமாக ஏதோ சினிமாவிற்கு வருவதை போல நல்ல மேக்கப்புடன் வந்திருந்தார்கள். அதுவும் அந்த பெருமழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். நாம் ஏதோ பார்ப்பன திருமணத்திற்கு தான் வழி தவறி வந்து விட்டோமோ என்கிற அளவுக்கு நம்மை சுற்றியிருந்த சூழல் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேடையில் நடிகர் சிவக்குமார், ஜக்கி வாசுதேவ், நக்கீரன் கோபால், பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் அமர்ந்திருக்க “ஈழம்- மௌனத்தின் வலி” என்ற வாசகத்துடன் நல்லேர் பதிப்பகத்தின் பெயருடனும் ‘நாம்’ அமைப்பின் பெயருடனும் அமைக்கப்பட்டிருந்த மேடை இது திருமண நிகழ்சியல்ல புத்தக வெளியீட்டு விழா தான் என்பதை உத்திரவாதப்படுத்தியது.

ஆனாலும் ஆச்சரியம்! இது போன்ற கூட்டத்திற்கு எப்போதும் வந்திராத பெண்கள் இத்தனை பேர் குடும்பத்துடன் எப்படி வந்திருக்கமுடியும்? ஒருவேளை இவ்வளவு நாளாக சமூகத்தின் மீது வராத அக்கறை இவர்களுக்கு திடீரென்று வந்திருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பெரும்பாலானோரின் கழுத்தில் ருத்திராட்ச மாலை, மற்ற அடையாளங்கள் கொண்டு பார்த்ததில் தான் தெரிந்தது அவர்கள் ஜக்கி வாசுதேவின் பக்தர்கள் என்று. இந்த கும்பல் ஈழத் துயரத்தை பகிர்ந்து கொள்வதற்காக‌ வரவில்லை. ஜக்கி வாயை திறப்பதை வேடிக்கை பார்க்கவே வந்திருந்தது. அதில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இது போன்ற ஆன்மீக அடிமைக்கூட்டம் தான்.

சரி ஜக்கி வாசுதேவை அழைத்து வெளியிடப்படும் இந்த நூலில் அப்படி என்னதான் உள்ளது?

இந்நூலின் உள்ளடக்கமே ஈழம் பற்றிய கவிதைகள் தான்.

அருந்ததிராய் போன்ற ஜனநாயகவாதிகளின் வார்த்தைகள், உணர்வுள்ள தமிழ் கவிஞர்களின் கவிதைகள், அத்துடன் பூக்களைக் கொண்டு மலத்தை மறைக்கும் விதமாக ரஜினி முதல் கமலஹாசன் வரையிலான தமிழ் சினிமா கூத்தாடிகளின் கவிதைகளும், கோடம்பாக்கத்தில் கூலிக்கு மாரடிக்கும் கக்கூசு பேரரசு வைரமுத்து வகையறாக்களின் கவிதைகளும், அத்துடன் அத்தனைக்கும் ஆசைப்படும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் கவிதையும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியின் வரவேற்புரை முடிந்ததும் புத்தகம் வெளியிடப்பட்டு பிரபலங்களின் உரை ஆரம்பித்தது.

முதலில் இயக்குனர் முருகதாஸ் பேசத் துவங்கினார். அவருடைய‌ அறிவு ஒரு முட்டாளுக்கு கூட இருக்க முடியாது. இவரெல்லாம் எப்படி சினிமா டைரெக்ட்டர் ஆகித்தொலைத்தாரோ! அவர் பேசினார், இந்த புத்தகத்திலிருக்கும் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை! (புத்தகம் முழுவதும் இருப்பது சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் கொடூரமான புகைப்படங்கள் மட்டும் தான்) நம்முடைய பார்வைக்கு இதெல்லாம் வரவே இல்லையே என்று நினைக்கும்போது அது யாருடைய‌ தப்பு? ஏன் இந்த‌ தகவல் தொழில் நுட்ப யுக‌த்திலும் இவ்வளவு மோச‌மாக இருக்கிறோம்? நிலவுக்கு போய் விட்டோம் என்கிறோம். ஆனால் இந்த படங்கள் எல்லாம் நமக்கு தெரியவே இல்லையே? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கொடூரம் எதனால் நடந்தது? ஏன் ஊடகங்கள் இச்செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை? என்று பாமரத்தனமாக கூட்டத்திடமே கேள்வி கேட்டு விட்டு அமர்ந்தார். ஒருவேளை பேச வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் யாராவது தனக்கு பதில் சொல்வார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் ஒரு பொது மேடையில் இந்த ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பேசினார்.

அடுத்து பேசிய நக்கீரன் கோபால் வழக்கம் போல‌ அந்த மேடையை திமுக பிரச்சார மேடையாக மாற்றினார். இவரின் ஈழம் பற்றிய கருத்துகள் செய்திகள் அனைத்தும் கருணாநிதியின் எல்லைக்குட்பட்டதே என்பதை மறுபடியும் நமக்கு நிரூபித்தார். ‘ஈழத்தில் மக்கள் சாவதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை என்றால் இறப்பவர்கள்’ ‘பா’ என்று ஆரம்பித்து வார்த்தையெடுத்தார் ஏனோ தெரியவில்லை அத்துடன் அவ்வார்த்தையை விழுங்கி விட்டு ‘இட்லிகாரன் அல்ல, இந்தி காரன் அல்ல, சீக்கியன் அல்ல’ என்று தடுமாறினார். அங்கே இறப்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்ல என்பதை தான் அவர் சொல்ல வாய் எடுத்தார், ஆனால் ஜக்கி கோபித்துக்கொள்ள மாட்டாரா? இந்தியா கோபித்துக்கொள்ளாதா? எனவே விழுங்கிவிட்டார். பிறகு ‘இறப்பவர்கள் தலையிலோ மார்பிலோ பிறக்காதவர்கள். அவர்கள் காலுக்கு கீழே பிறந்தவர்கள்’ என்று சுற்றி வளைத்து ‘சூத்திரர்’ என்கிற வார்த்தையை சொல்வதற்கும் கூட‌ படாதபாடுபட்டார் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்ற‌ம் குற்றமே’ என்கிற லேபிளுடன் பத்திரிகை நடத்தும் ‘நக்கீரன்’ கோபால். பார்ப்பான் என்பதை நாலு பேருக்கு முன்னால் பயமின்றி சொல்லக்கூட திராணியில்லை. ஆனால் மீசை முறுக்குக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

புலிகள் மீதான தடை முதல் ஈழம் வாங்கி தருவதாக சொன்னது வரை ஜெயலலிதாவை பற்றி குற்றம் கூறிய கோபால், கருணாநிதியின் துரோகம் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஈழத்தாய் என்று ஜெயலலிதாவிடம் சரணடைந்தவர்களை சாடியவர், ஏனோ கருணாநிதியின் காலை நக்கி பிழைப்பவர்களை பற்றி பேசவேயில்லை. ஜெயலலிதாவின் நாடகத்தை எடுத்துரைக்கும் கோபாலுக்கு கோபாலபுர குடும்ப நாடகத்தை எடுத்துரைக்க தெரியவில்லையா? அல்லது விருப்பமில்லையா? கருணாநிதியின் கயமைத்தனங்களை மட்டும் மறைத்து விட்டு ஜெயலலிதாவின் குற்றங்களையே சுட்டிக் காட்டினார். சும்மா சும்மா கருணாநிதியை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது. இன்று இந்த அளவிற்காவது நாம் ஈழத்தை பற்றி தமிழகத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்காக‌ க‌லைஞ‌ருக்கு நாம் நன்றி தான் செலுத்த வேண்டும் என்றார்!

யாருக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்? ஆயுதத்தின் வாயில் ஈழ மக்கள் இறந்துகொண்டிருக்கும் போது பதவிக்காக எதுவும் பேசாமல் அமைதி காத்த கருணாநிதியின் கயமைத்தனத்திற்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமா? ஈழமக்களுக்காக தமிழத்தில் போராட்டங்களில் குதித்த மாணவர்களின் மண்டையை உடைத்த‌ கருணாநிதிக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமா? கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க சொல்லி கருணாநிதியின் மீதான விசுவாசத்தையும் பத்திரிக்கை துறையில் தனது பிழைப்புவாதத்தையும் வாந்தி எடுத்தார் கோபால். தமிழர்களை கொல்ல மேலாதிக்க‌ இந்திய அரசு போருக்கு உதவிய‌ போது கருணாநிதியும், தமிழக எம்.பிக்களும் யார் மயிரை புடிங்கிக்கொண்டிருந்தார்கள்? இதை கருங்காலி கருணாநிதியிடம் கேட்கக்கூடாது என்றால் அதற்கு இந்த நக்கீரன் கோபால் தான் பதில் சொல்ல வேண்டும்? இந்திய அரசுக்கு கூஜா தூக்கிய துரோகி கருணாநிதியை காப்பாற்றுவது தான் மேடைக்கு மேடை இந்த கோபாலுக்கு வேலை. அந்த வேலையை இந்த மேடையிலும் கச்சிதமாக செய்து விட்டு அமர்ந்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த அரசியலும் இன்றி மனித நேய‌ அடிப்படையில் அவருடைய கருத்துக்களை தெரிவித்தார். ஈழம் என்றதும் தமிழகத்தில் இரு போக்குகள் நிலவுவதாக குறிப்பிட்டார். ஒன்று அதிகமாக கூச்சலிடுகிறோம். மற்றொன்று மௌனமாகிறோம். மௌனதிற்க்கு பின்னால் எத்தனை காரணங்களோ, நலன்களோ இருந்தாலும் நிச்சயமாக நியாயம் இல்லை. போர் என்பது குற்றமென்றால் மௌனம் என்பது பாவம். இப்போதாவது உலகின் அதிகாரத்திலிருக்கும் தலைவர்களும் நாடுகளும், மனிதம் சாவதை வேடிக்கை பார்க்காமல் ஈழமக்களை காக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னுரையை முடித்துக்கொண்டார்.

நடிகர் சிவக்குமார், வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள சில கவிதைகளை மட்டும் வாசித்தார். மணிக்கணக்காக‌ கம்பராமாயணம் கதாகாலட்சேபம் வாயார பேசும் இந்த பேச்சாளர் ரெண்டு கவிதை வாசித்ததை தவிர வேறெதுவும் பேசவில்லை. ஒருவேளை துயரம் அதிகமாகி தொண்டை அடைத்துக்கொண்டிருக்கும் போலிருக்கு.

கடைசியாக பேசிய சிறப்பு பேச்சாளர் ஜக்கி வாசுதேவ் ஈழ மக்களின் துயரம் பற்றி பேசினார் என்று சொல்வதை விட மயக்க நிலைக்குள் தள்ளும் சொற்பொழிவாற்றினார் என்றே சொல்லவேண்டும். ஆம், அப்படி தான் அவரது உரை இருந்தது. ஜக்கி பேச ஆரம்பித்தவுடன் இருகரம் கூப்பிய பக்தர்களில் பலர் அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை கையை கீழே இறக்கவேயில்லை. அவர்களை பொருத்த‌வரை அது அரங்கமல்ல கோவில். ஜக்கி பிராடு அல்ல சாமி. எனவே பரவச நிலைக்கு போனவர்கள் அப்படியே உறைந்து போனார்கள். கூட்டம் முடிந்த பிறகு கடைசியாக அவர்களிடம் போய் ‘ஈழம்’ என்று சொல்லியிருந்தால் என்ன அது என்று தான் கேட்டிருப்பார்கள். அந்தளவிற்கு அவர்கள் அனைவரும் ஜக்கி போதையிலிருந்தார்கள். இதுவரை யாரும் ஈழ விடயத்தில் சொல்லத்தவறிய(!) மனிதாபிமானத்தை பற்றித்தான் பேசினார் ஜக்கி. ஆனால் வழக்கமான பாணியில் ஆனந்த நிலையில் லயித்து போகாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டே பேசினார். பேச்சின் நடுவில் ‘அங்க மனித்தர்கள் சாக்கிறார்கள் என்னா அங்க மனித்தன் சாகவில்லை, மனித்தமே சாக்கிறது’ என்று சொன்னவுடன் ஒரு நொடி அவருடைய பக்தர்கள் கொட்டிய ‘உச்’ ‘உச்’ அதை பஞ்ச் டைலாக்காக மாற்றியது.

உலகில் போரே வேண்டாம் என்று பேசிய ஜக்கி முதல் உலகபோரில் ஐந்து கோடி மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகபோரில் ஏழு கோடி மக்கள் இறந்தனர் என்று போகிற போக்கில் தனது கம்யூனிச எதிர்ப்பையும் விசம் போல உலகப்போர்களுடன் கலந்து விட்டு கடந்து சென்றார். ரஷ்ய புரட்சியின் போது இரண்டரை கோடி மக்கள் இறந்து போனார்கள் என்று அதையும் கொலை பட்டியலில் சேர்த்துக்கொண்டார். மக்கள் இகலோக வாழ்க்கையை விட‌ உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்காக போதிக்கும் இந்த நவீன போலிசாமியாருக்கு உலக போரில் இறந்த மக்களின் புள்ளிவிவரம் கூட தெரியவில்லை. அந்தளவிற்கு மாங்காயாக இருக்கிறது! ஆனால் அவரை சுற்றியிருந்த ஆன்மீக‌ அடிமைக்கூட்டமோ பரவச நிலையில் வாயடைத்து போய் விட்டது. இந்த ஆளிடம் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களை இர‌ண்டு வகையிலும் (போலி ஆன்மீகத்திலிருந்தும் இயல்பான மன‌நிலைக்கும் திரும்ப‌) மருத்துவர் ருத்ரன் போன்றவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

மேலும் அவர் அகிம்சை பற்றி போதிக்கும் போது “இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இரண்டாம் உலகபோரும் மூண்டது. முதல் உலகப்போரின் போது போரில் ஈடுபட்டிருந்த‌ இங்கிலாந்து பலமிழக்கும் நேரத்தில் நாம் இந்திய சுதந்திரத்திற்கான‌ போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்ற வாய்ப்பு கிடைத்த போது மகாத்மா என்ன கூறினார் தெரியுமா? எதிரி பலவீனமான நிலையில் இருக்கும் போது நாம் தாக்கக் கூடாது. அது மனித நேயத்திற்கு எதிரானது. எனவே இரண்டாம் உலக போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாகதான் நாம் ராணுவம் அனுப்பவேண்டும் என்று காந்தி சொன்னார்” என்று காந்தி செய்த துரோகத்தை மனிதநேயத்தின் பெயரில் நியாயப்படுத்தினார். இவ்விடயத்தை கூறிய ஜக்கிக்கு நாம் நன்றி கூறியாக வேண்டும். ஆம் காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் செய்த துரோகத்தின் ஒரு பகுதியை ஒப்புக்கொண்டதற்கு நாம் நன்றி கூறியே ஆகவேண்டும்.

அகிம்சை தத்துவத்தின் அடிப்படையில், மனித நேயத்தின் அடிப்படையில் எதிரியை கூட நாம் அடிக்க கூடாதென்றால் எதிரிக்கு எதிரியான இன்னொருவனை அடிக்க ஆள் அனுப்பது மட்டும் அகிம்சைக்கு சரியா? எங்கேயோ இடிக்கிறதே! அகிம்சைக்கும் ஒத்து வராத கருத்தாக இருக்கிறதே! என்று யோசிக்கும் சாதாரண மக்களுக்கும் ‘அதன் பெயர் அகிம்சை இல்லை. இந்திய மக்களுக்கிழைத்த துரோகம்’ என்று புரியும். ஆனால் இந்த முட்டாள் ஜக்கி வாசுதேவுக்கு ஏன் புரியவில்லை? அவருக்கு புரியாமல் இல்லை, நம‌க்கு எதுவும் புரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த ஜட்டி இருக்கிறது சாரி ஜக்கி.

மேலும் மனித நேயத்தை பற்றி பேசும் போது எல்லா உயிர்களும் போராடுகின்றன. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. அடிக்கும் போது திருப்பி அடிக்கக் கூடாது. உரிமைகள் மறுக்கப்படும் போது வன்மையாக போராடக்கூடாது. மனித‌ நேயத்தை வெறும் சொல்லாக அல்ல, அமைப்பாக கலாச்சாரமாக மக்கள் மனதில் ஏற்க வேண்டும் என்றும் போதித்தார். யாருக்கு தான் முரண்பாடு இல்லை என்று சொன்னவர், குடுபத்திற்குள் இருக்கும் கணவன் மனைவி முரண்பாட்டையும், இனவெறி முரண்பாட்டையும் ஒப்பிட்டு புதிய முரண்பாட்டு கொள்கையை விளக்கி கூறினார்.

நம் அனைவருக்கும் மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் தான் அவற்றை ஒடுக்குமுறையாக வன்முறையாக மாற்றுகிறோம் என்று சொன்னதன் மூலம் உலக நாடுகளில் மக்களின் உரிமைகள் பரிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போது அதை எதிர்த்து போராடிய அம்மக்களையும் அவர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் ஜக்கி கொச்சைபடுத்தினார்.

ஈழத்தில் நடப்பதற்கு பெயர் வெறும் முரண்பாடு இல்லையடா முட்டாள் ஜக்கியே! அதற்கு பெயர் இனப்படுகொலை என்று எல்லாம் தெரிந்த உனக்குத் தெரியாதா? சிங்கள் இனவெறி அரசின் வக்கிரங்கள் இந்த மூதேவியின் ஞான கண்களுக்கு மட்டும் தெரியவில்லையே ஏன்? அல்லது ஆனந்த பரவசநிலையில் லயித்த கண்கள் அதை பார்க்கத் தவறிவிட்டதா? பார்க்கவில்லையானாலும், காதால் கூட செஞ்சோலையிலிருந்து வதை முகாம்கள் வரை அரற்றிய பிஞ்சுகளின் குரலும் சிங்கள இலங்கை அரசின் இனவெறி கொக்கரிப்பும் கூட இந்த செவிட்டு ஜக்கியின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக மக்கள் போராடுவது வெறித்தனமா?

வன்முறை ஏவப்படும் போது அதற்கெதிராக மக்கள் போராடுவதும் வன்முறையா? மனிதம் அழியும் போது அதற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காமல் போராடும் மனிதன் கூட மனிதாபிமானத்திற்கு எதிரானவனா?

இதை தான் அன்றைக்கு கபட வேடதாரி காந்தி சொன்னார். இன்று இந்த‌ ஜக்கி சொல்கிறது.

அன்று மக்களின் விடுதலை போராட்டங்களை எல்லை மீறாமல் மழுங்கடித்து மக்களுக்கு அகிம்சை என்று போதித்து ஆங்கிலேயனை பாதுகாத்து, சுரண்டுபவன் மேலும் பல ஆண்டுகள் தங்கி சுரண்ட வாய்ப்பு வழங்கிய அகிம்சா துரோகி காந்தி! அதே அகிம்சை தத்துவத்தை கூறி அதே போன்று அநீதிக்கெதிரான மக்களின் போராட்டங்களை கொச்சைபடுத்தும் இன்றைய அகிம்சா துரோகி ஜக்கி வாசுதேவ்!

ஆளும் வர்க்கத்திற்கு வேண்டிய அமைதியை நிலை நாட்ட வேண்டிய அடியாள் வேலையை தான் இது போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் செய்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டாலும் அதை எதிர்த்து சிறு அளவில் கூட வன்முறை இருக்கக் கூடாது. வன்முறை, ஒன்று கூடுவது என்பதை கேட்டாலே ஆளும் கும்பல் எப்படி நடுங்குகிறதோ அதே போல தான் இந்த போலி சாமியாரும் இறுதியில் பேசினார். அப்போது தான் இந்த‌ ஜக்கி வாசுதேவின் நோக்கம் என்ன என்பது நன்றாக விளங்கியது.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே!” என்கிற‌ சே குவேராவின் மேற்கோளை குறிப்பிட்ட ஜக்கி, இது மிகவும் மோசமான வன்முறை கருத்து. சேகுவேராவின் கருத்துக்கு எதிராக இருப்பது தான் நல்லது, எனவே சேகுவேராவின் இந்த கருத்துக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் அனைவரும் நம் சகோதரர்களே என்று கூறினார்.

கடைசியாக இந்த போலி சாமியார் ஈழப்பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு சொன்னார்? மக்கள் ஒவ்வொருவரும் மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று கூறியதை தவிர வேறு ஒன்றையும் சொல்லவில்லை. ஈழக்கூட்டம் ஆன்மீக கூட்டமாக்கப்பட்டதுடன், உண்மையான ஈழ ஆதரவாளர்களிடம் ஈழமக்களின் துயரத்தை விட இக்கூட்ட்த்திற்க்கு வந்த துயரம் மேலோங்கியிருந்ததை காண முடிந்தது.

ஜக்கி வாசுதேவ் என்கிற இந்த எல்லாம் துறந்த (பன்னாடை) பரதேசி ஈழம் தொடர்பாக இதற்கு முன்பு நடந்த அத்தனை கூட்டங்களையும் இழிவு படுத்திவிட்டுச்சென்றார். வதை முகாம்களில் வாடும் மக்களையும் இதை விட யாரும் இழிவு படுத்த முடியாது.

கடைசியாக நன்றியுரை கூறிய மருத்துவர் எழிலன் ‘நன்றி, எதற்கு சொல்ல வேண்டும் நன்றி’ என்று ஏதோ வித்தியாசமாக சொல்லப்போவதாக நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார். ஆனால் ‘சாமி’ மேடையை விட்டு இறங்கி விட்டதால் அனைவரின் கண்களும் ஜக்கியின் மீதே இருந்ததால் இவரின் இந்த வித்தியாசமான உரையை பாவம் யாரும் கேட்க கூட முடியவில்லை. மக்களின் விடுதலைப் போராட்டங்கள் அனைத்தையும் கேவலப்படுத்தி விட்டு சர்வதாராணமாக ஒரு போலி சாமியார் பரதேசி மேடையை விட்டு கீழே இறங்கிக்கொண்டிருக்கும் அந்த‌ ஜக்கியை கண்டுகொள்ளாமல் பல்லை இளித்துக்கொண்டு நன்றியுரை ஆற்றிக்கொண்டிருந்தார் எழிலன்.

உலக மக்களின் போராட்டங்களையே கொச்சைபடுத்தியதுடன் ஈழப்போராட்டத்தையும் கொச்சை படுத்திய ஜக்கியை பற்றி அரங்கில் யாருமே கண்டுகொள்ளாததற்கு என்ன காரணம்?

காரணங்கள் காண்பதற்கு முன் நிகழ்ச்சி ஏற்பாட்டின் பிண்ணனியை பார்ப்போம். பிரபலங்களின் கவிதைகளை தொகுத்து பிரபலங்களை வைத்தே நூலை வெளியிட்ட‌ இந்த‌ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யாரெனில், கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்ற அரசியல் பிரபலங்களின் நட்பு வட்டாரத்தில் உள்ள பாதிரி ஜகத் கஸ்பார்.

இன்றைய ஈழ உணர்வுள்ளவர்களிடம், குறிப்பாக ஈழ உணர்வுள்ள சில IT இளைஞ‌ர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஜெகத் கஸ்பாரும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பணிபுரிந்து தற்போது நடிகர் நடிகைகளுக்கு ‘பல்வேறு’ ஏற்பாடுகளையும் செய்து வருபவரும் ஞானவேல் என்பவரும் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். இந்த கவிதை நூலில் உள்ள புகைப்படங்கள் இவரின் தேர்வுகளே.

பாதிரியராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று பல‌ கோடிகளுக்கு சொந்தக்காரரான ஜகத் கஸ்பார் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். உலக நாடுகளை ஊடகம் மூலம் உளவு பார்க்கும் நிறுவனமாகத்தான் வெரித்தாஸ் வானொலி நிலையம் துவங்கப்பட்டது. உளவு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் தான் ஈழத்தில் நடேசனுடன் தனக்கு நேரடி தொடர்புள்ளதாக நக்கீரனில் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்றோரின் நட்புடன் உள்ள இவர் ஆளும் வர்க்கத்தெற்கெதிரான, அரசுக்கெதிரான மக்களின் போராட்டங்களை மழுங்கடிப்பவர். வெரித்தாஸ் வானொலியின் உளவு நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் நடேசனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இவரே குறிப்பிட்டதில் இவர் உளவாளி என்பதை இவரே நமக்கு அறிவிக்கிறார்.

இந்த கவிதை தொகுப்பு நூலில் எமது அமைப்பின் கவிஞர் தோழர் துரை சண்முகம் அவர்களின் கவிதையும் இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர் அமைப்பு என்கிற பொதுவான பெயருடன் எம்மிடம் அறிமுகமான இவர்கள் ‘நாம்’ அமைப்பை பற்றியோ, அதற்கு பின்னால் இருப்பவர்கள் பற்றியோ, உளவு ஏஜெண்ட் ஜெகத் கஸ்பார் பற்றியோ எதையும் கூறாமல் நம்மையும் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக, “நாங்கள் பொதுவான பத்திரிகையாளர்கள். நாங்கள் ஒரு கவிதை நூலை வெளியிடுகிறோம் அதற்கு உங்களின் பங்களிப்பும் வேண்டும்” என்று கூறி தோழரிடம் ஒரு படத்தையும் கொடுத்து அதற்கு கவிதையையும் எழுதி வாங்கிக் கொண்டு பதிப்பித்து விட்டார்கள். எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள்! ஒரு புரட்சிகர அமைப்பையே ஏமாற்றி இவர்களுடன் நம்மையும் நிற்க வைத்து படமெடுத்துக்கொள்ள என்ன ஒரு கிரிமினல் புத்தி பாருங்கள். உளவாளிகள் தான் இது போன்ற வேலைகளை நேர்த்தியாக செய்து முடிப்பார்கள். இப்படி திருட்டுத்தனமாக எம்மையும் இந்த ஏஜெண்ட் கும்பல் தம்மோடு சேர்த்துக்கொண்டது மட்டுமின்றி, படைப்பாளியின் அனுமதியின்றி கவிதையிலும் கை வைத்திருக்கிறார்கள். கவிதையிலுள்ள முக்கியமான இரண்டு அரசியல் சொற்களை கத்தரி போட்டு வெட்டி எறிந்துவிட்டார்கள். இதை எடிட் செய்தவன் எவன்? ஜெகத் கஸ்பாரா, ஞானவேலா? உங்களுடைய நோக்கம் என்ன? எதற்காக அந்த வார்த்தைகளை வெட்டினீர்கள்? இந்த உளவாளிகள் கவிதையிலிருந்து நீக்கிய வார்த்தைகள் இரண்டும் போரில் இந்திய அரசை அடையாளம் காட்டும் வரிகளாகும்.

“தேர்தலுக்காக இரத்தத்தைத் திருடிய உங்களிடம்

ஒப்படைக்க முடியாது எங்கள் கண்ணீரை.

இந்தியக் கொலைக்கரத்தை முறிக்காமல்

எம் பிள்ளை துயிலாது”

என்று தோழர் துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் ‘தேர்தலுக்காக’ என்பதையும் ‘இந்தியக் கொலைக்கரத்தை’ என்பதையும் வெட்டி நீக்கி விட்டே பதிப்பித்திருக்கிறார்கள் இந்த யோக்கியவான்கள்.

மக்களின் இந்த துயரநிலைக்கு காரணம் யார்? என்ன பின்னணி? என்பதை பற்றி பேசாமல் நடத்தப்படும் கூட்டங்களும் போரட்டங்களும் நேர்மையானதாக இருக்க முடியாது. இதன் பின்னால் இருக்கும் ஏகாதிபத்திய நலன்களை பற்றியும், இந்திய மேலாதிக்க நலன்களை பற்றியும் அம்பலப்படுத்தாமல் நடத்தப்படும் போரட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் பின்னால் ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஒளிந்திருக்கும். இவர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஜக்கியின் இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு விமர்சன கருத்துக்களை பதிக்காத ஜகத்கஸ்பார் பற்றியும், மருத்துவர் எழிலன் என்பவர் தமிழக திட்டக் குழுவின் துணை தலைவர் மு. நாகநாதனின் மகன் என்பதை பற்றியும் உற்றுநோக்கினால் இந்த கூட்டம் யாரால் நடத்தப்பட்ட கூட்டம் யாருடைய நலனுக்காக‌ கூட்டப்பட்ட கூட்டம் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். இந்த கூட்டம் நடத்திய அமைப்புகளின் பின்னே ஏகாதிபத்திய நலன்களும், ஆளும் வர்க்க இந்திய அரசின் நலன்களும், கருணாநிதியின் குடும்ப நன்களும் இருப்பதையே தெள்ளத் தெளிவாய் காட்டுகின்றன.

தமிழகத்தில் நடக்கும் பல்வேறு ஈழ ஆதரவு போராட்டங்கள், அக்கூட்டங்களில் திரளும் இளைஞர்கள் அனைவரும் இந்திய அரசுக்கு எதிராக திரும்பி விடாதபடி அவர்களை வேறு பக்கத்திற்கு மடை மாற்றி விடும் மகத்தான ப‌ணியை தான் இந்த ஜெகத் கஸ்பார் என்கிற உளவாளி பாதிரி செய்துகொண்டிருக்கிறார். இவருடைய‌ சகாக்களாக அல்லது சக உதவியாளர்களாக ஞானவேல், எழிலன் இன்னும் வெளியில் வராத பெயர் தெரியாத‌ பலரும் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இவர் துவக்கத்தில் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றியவர். வெரித்தாஸ் வானொலி சி.ஐ.ஏ வால் இயக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தின் நலனுக்காக செயல்பட்ட வானொலி. தேசிய இயக்கங்களின் போராட்டங்களுக்குள் நுழைந்து கொண்டு அதைக் கைப்பற்றி எதிர்ப்பை நிறுவனமயமாக்கும் வேலையை வெரித்தாஸும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இது போன்ற பல்வேறு நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஈராக் மக்களின் போராட்டங்களை நீர்த்து போக வைக்க அம்மக்களின் போராட்டங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா சேவை அமைப்புகள் போன்ற‌ பல்வேறு என்.ஜி.ஒ நிறுவன‌ங்களையும் அங்கு இற‌க்கி விட்டுள்ளது. அது போன்ற ஒரு நிறுவனம் தான் வெரித்தாஸ். அதில் பணி புரிந்தவர் தான் இந்த கஸ்பார்.

அப்போது அவருக்கு பல்வேறு புரோஜக்ட் கொடுக்கப்பட்டிருக்கும். தனது திட்டத்தை சிரத்தையாக ஏற்றுச்செய்த‌ இவர் எதற்காக இந்தியாவிற்கு வந்தார் என்பதே சந்தேகத்திற்குறிய கேள்வி. அதன் தொடர்ச்சியாக இவர் நக்கீரனில் எழுதி வருவதும், இளைஞர்களை அரவணைப்பதும் நமக்கு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. அதற்கேற்பவே இவர் மே17 இயக்கம் என்கிற இயக்கத்தை நடத்துகிற திருக்குமரன் என்பவரை பற்றி நக்கீரனில் பாராட்டி எழுதியுள்ளார்.

இந்திய அரசு பற்றி இவர் சாடி எழுதுவதே இல்லை. பேசும் இடங்களிலும் இவர் இந்தியா பற்றி பேசுவதில்லை. தற்போது வெளியிட்டுள்ள நூலும் இதற்கு நல்ல சான்று. அதில் தேடிப்பார்த்துவிட்டோம். இந்தியா என்கிற ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படியான ஈழமக்களை கொன்றொழித்த‌ போரில் போர் குற்றவாளியான‌ இந்திய அரசின் பங்கை இந்த ஜெகத் கஸ்பார் மறைக்க முயலுவதன் நோக்கம் என்ன?

அவை விரைவில் வெளிவரும். முழுமையாக தமிழ் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்படும். அப்போது ஜெகத் கஸ்பார்களும், ஞானவேல்களும், எழிலன்களும் தமிழ் மக்களிடம் விளக்கம் கூற வேண்டியிருக்கும்.

தமிழ் உணர்வுள்ள ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களே, இவர்களைப் போன்ற சந்தேகத்திற்குரிய நபர்களிடம் நெருங்காதீர்கள். ஆனால் இவர்களை உற்று கவனியுங்கள். இவர்கள் என்ன பேசுகிறார்கள் யாருக்காக பேசுகிறார்கள் என்பதை கவனித்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இவர்கள் மீது விமர்சனம் வந்து விட்டது என்பதால் இவர்கள் அடுத்த சில நக்கீரன் இதழ்களில் இந்தியாவிற்கு எதிராக கூட எழுதலாம். சில கூட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக கூட பேசலாம். அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி விடாதீர்கள். நம்பகத்தன்மை ஏற்படுத்த‌ இடைக்காலமாக‌ அப்படி பேச இது போன்ற ஆட்களை இந்திய அரசே அனுமதிக்கும். நம்பாதீர்கள்! எச்சரிக்கை!!

“ஈழம் – மௌனத்தின் வலி” – இது இந்திய மேலாதிக்கத்திற்கு ஆதரவான உளவாளிகளின் கள்ளமௌனத்தை மறைக்கும் நிழற்படங்களின் தொகுப்பு.

மிக அருமையான கருத்துகள், ஆய்வுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே நிகழ்வு பற்றிய இன்னொரு எழுத்தாளரின் ஆக்கம்.....

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

குறிச்சொற்கள்: Eelam Media அடக்குமுறை அடிவருடிகள் அன்பழகன் அமெரிக்கா அமைதி அம்சா அயோக்கியத்தனம் அரசியல் அரசு அல்லேலுயா ஆசியா ஆசிரியர் ஆடியன்ஸ் ஆதிக்க வெறி ஆனந்தவிகடனின் ஆப்கான் இந்தியா இராணும் இராணுவம் இறையாண்மை இலங்கை ஈராக் ஈழத் தமிழர்கள் ஈழம் உண்ணாவிரதம் உத்திரவாதம் உரிமை உளவாளி உளவியல் உளவு ஊடகங்கள் எதிர்ப்பு ஏ.ஆர் முருகதாஸ் ஐ.நா ஓட்டு ஓட்டுச் சீட்டு கண் தெரியாதவர்கள் கண்ணீர் அஞசலி கனிமொழி கமலஹாசன் கமல் கம்யூனிசம் கருணாநிதி கறவை மாடு கலாப்பிரியா கலாம் கலை கலைஞர் கவி கவிஞர் கவிதா பாரதி கவிதை கவிதைகள் காங்கிரஸ் காந்தி கார்த்திக் சிதம்பரம் காஷ்மீர் குணசேகரன் குரு கூட்டணி கூலி கைகள் கொலை கொளத்தூர் மணி கோவை இராமகிருட்டிணண் சதி சதீஷ் நம்பியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தர்ப்பவாதிகள் சன்மானம் சமூக ஆர்வலர்கள் சரத்பொன்சேகா பிரபாகரன் சர்வாதிகாரி சாதி சாதி வெறி சாமி சாமியார் சாமியார்கள் சி.ஐ.ஏ சிதம்பரம் சினிமா சினிமா விமர்சனம் சிறை சிவக்குமார் சீட்டு சீமான் சூர்யா சென்னை செய்தி சேகுவேரா சேரன் சொறி நாய் சோ ஜக்கி ஜெ ஜெகத் கஸ்பார் ஜெகத்கஸ்பார் வழக்கறிஞர்கள் ஜெயலலிதா ஜே ஞானவேல் டாங்கிகள் டைம்ஸ் ஆப்ஃ இண்டியா தட்டக்குழு தணிக்கை தண்டனை தந்திரம் தனம் தன்னார்வக் குழுக்கள் தமிழ் தற்கொலை தி.மு.க தியாகம் திருச்சபை திருமா திருமாவேலனும் திரை தில்லை துப்பாக்கி துரை.சண்முகம் துரோகம் துரோகி துரோகிகள் தெனாலி தேசிய விடுதலை தையல் கலைஞர்கள் தொடர்ந்து தோழர் தோழர்கள் நக்கீரன் நடக்க நடிகர்கள் நடேசனை நல்லேர் பதிப்பகம் நாகநாதன் நாடகம் நாய் நிகழ்வுகள் நீதி நீலிக் கண்ணீர் நெடுமாறன் நையாண்டி பஞ்ச் டயலாக் படப்பிடிப்பு பண மோசடி பணக்காரர்கள் பணம் பண்ணை பண்ணைகள் பதவி பத்திரிகையாளர்கள் பந்தி பாதிரி பாரதி பால் பி.ஆர்.ஓ பிரகாஷ்ராஜ் பிரணாப்முகர்ஜி பிரமுகர்கள் பிராந்திய வல்லரசுகள் பிலிப்பைன்ஸ் பிள்ளை பிழைப்புவாதிகள் புயல் புலிகள் பெண் பெண்கள் பெரியவர் பேச்சு பேரழிவு பொன்சேகா போராட்டம் போராளி போர் போர் இன்னும் முடியவில்லை போலி போலீஸ் ப்ராஜக்ட் மக்கள் மணி மதுரை மனித உரிமை அமைப்பினர் மருத்துவர் எழிலன் மறைவு மலை மலையப்பன் சின்னப்பா மழை மாடு மாணவர் மாணவர்கள் மீனவர்கள் முத்துக்குமார் முள் முள்ளிவாய்க்கால் மை மொக்கை மோசடி மௌனத்தின் வலி யானை யூதாஸ் ரஜினி ரஜினிகாந்த் ரவி ராஜபட்சே ராஜீவ் ராஜுமூருகன் கவிதைகள் மொக்கைகள் ராமதாஸ் வங்கி வன்னி வன்முறை வரி வல்லரசு வானொலி விஜய்நம்பியார் விடுதலை விமானங்கள் விவசாயி விவசாயிகள் வீரம் வெண்மணி வெரித்தாஸ் வெளி வேலை வைகோ

தமிழ்மணம் பரிந்துரை : 21/23

Pathivu Toolbar ©2009thamizmanam.com

ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார்.

மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட ஈழம் எனும் பசுவின் மடியிலிருந்தும் கூட பால் கறக்க முடியும் என்பதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெகத் கஸ்பார் எனும் பாதிரி.

“ஈழ மக்கள் மீதான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து, யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நூறு பேர் கவிதை எழுதுகிறார்கள் நீங்கள் கவிதை கொடுக்க வேண்டும்” என்று த.செ.ஞானவேல் என்பவர் பலரிடமும் கேட்டிருந்தாராம். அவருக்காக ஆனந்தவிகடனின் திருமாவேலனும், டைம்ஸ் ஆப்ஃ இண்டியா இதழின் குணசேகரன் என்னும் பத்திரிகையாளரும் கூட இப்படிப் பலரிடமும் கவிதை கேட்டிருக்கிறார்கள். நூலை ஞானவேல் எனும் பத்திரிகையாளர் வெளியிடப் போவதாகச் சொல்லித்தான் அனைவரிடமும் கவிதை வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு வழியாக “ஈழம்…. மௌனத்தின் வலி” என்ற அந்தக் கவிதை நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான “நல்லேர் பதிப்பகம்” சார்பில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். ஞானவேலோ அவர் அமைப்பாளராக இருக்கும் “போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்போ” இந்நூலை வெளிக் கொண்டுவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரவர்க்கங்கள், புகழ்பெற்றவர்கள் என்னும் வரிசைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள அந்நூல் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை என்னும் அமைப்பில் பல நண்பர்கள் தோழர்கள், சமூக ஆர்வலர்களின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது.

“ஈழம்…. மௌனத்தின் வலி” என்னும் தலைப்பிலான அக்கவிதை நூலின் முதல் கவிதையை கமலஹாசனும், கடைசிக் கவிதையை ரஜினிகாந்தும் எழுதியிருக்கிறார்கள். கமல் எழுதிய கவிதை தெனாலி படப்பிடிப்பின் போது எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக் கவிதையை அவர் இவர்களுக்காவே எழுதிக் கொடுத்தாரா? அல்லது ஏதாவது மேடைகளில் உதிர்த்த முத்தா ? என்று தெரியவில்லை. மற்றபடி தோழர் துரை.சண்முகம், இயக்குநர் கவிதா பாரதி, கலாப்பிரியா, ராஜுமூருகன் உள்ளிட்ட இன்னும் சிலரின் கவிதைகளைத் தவிர பெரும்பாலான கவிதைகள் மொக்கைகள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நிருபர் குணசேகரன், “ஈழம் தொடர்பான புகைப்படங்களைப் பொருத்தமான கவிதையுடன் வெளியிட இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் சேர்ந்து வெளியிடும் இந்த கவிதை நூலுக்கு நீங்களும் ஒரு கவிதை தர வேண்டும்” என்று தோழர்.துரை சண்முகத்திடம் கவிதை ஒன்று கேட்டாராம். “தன்னார்வக் குழுக்கள் வெளியிடுவதாக இருந்தால் கவிதை தரமுடியாது. கவிதையில் ஒரு சொல்லைத் தணிக்கை செய்வதாக இருந்தாலும் கவிதை தர முடியாது” என்று குணசேகரனிடம் கூறியிருக்கிறார் துரை.சண்முகம். இரண்டிற்கும் குணசேகரன் உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கவிதையையும் தந்திருக்கிறார்.

இரக்கம் காட்டுவதாய்

நீங்கள் ஒரு அறிக்கை விடுவதற்கு

இன்னும் எத்தனை வேண்டும் ஈழப்பிணங்கள்….

தேர்தல் செலவுக்காக

எங்கள் இரத்தத்தையே திருடிய உங்களிடம்

ஒப்படைக்க முடியாது கண்ணீரை

தலை சிதறிப் போனாலும்

எம் தலைமுறைகள் மறவாது

இந்திய கொலைக்கரம் முறிக்காமல்

எம் பிள்ளை துயிலாது

என்று துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் “தேர்தலுக்காக” என்ற சொல்லும் “இந்திய கொலைக்கரம்” என்ற சொற்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்.

ரஜனிகாந்த் கமலஹாசன் போன்ற கவிஞர்கள் எல்லாம் எழுதப்போகிறார்கள் என்ற விசயமும் துரை சண்முகத்துக்கு சொல்லப்பட வில்லையாம். இயக்குநர் சேரன் போன்றவர்கள் எழுதிய அயோக்கியத்தனமான கவிதைகளும் உண்டு. அழுது வடிந்து ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற தந்திரக் கவிதைகளும் உண்டு. நூறு ரூபாய் விலையில்,”மனித நேயமிக்க எவரும் மறுபதிப்புச் செய்யலாம்” என்னும் அறிவிப்போடு பளபள காகித்தத்தில் வெளிவந்திருக்கும் நூலை, கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பார் ராஜ் வெளியிடுகிறார் என்பது தெரிந்திருந்தால் பாதிக்கும் மேலானவர்கள் கவிதை கொடுத்திருக்க மாட்டார்கள். ஏன் ஞானவேல் இப்படிச் செய்தார் என்று பலரும் இப்போது புலம்பித்திரிகிறார்கள்.

ஞானவேல் பத்திரிகையாளரா? என்று சிலர் கேட்டார்கள். அவர் ஆனந்த விகடனில் நிருபராக வேலை பார்த்ததாகவும் அதில் கிடைத்த தொடர்புகள் மூலம் அதிகார மட்டங்களில் உறவுகளை வளர்த்த பிறகு கலைக்குடும்பமான நடிகர் சிவக்குமார், அவரின் வாரிசு நடிகர் சூர்யா ஆகியோரின் பி,ஆர்.ஓவாகவும், சூர்யா ரசிகர் மன்றம், அவர்களின் அறக்கட்டளை வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜிற்கும் பி.ஆர்.ஓவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வப்போது “உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” என்னும் திடீர் பணக்காரர்கள் குறித்த தன்னம்பிகை கட்டுரைகளை சிலிர்க்க சிலிர்க்க உருட்டி உருட்டி எழுதுகிறவர் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஞானவேல் என்ற நபர் என்ன தொழில் செய்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல, ஆனால் இன்றைய இவரது நடவடிக்கை ஈழப் பிரச்சனை என்னும் பொதுப் பிரச்சனையில் அசிங்கமான அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை இங்குள்ள அதிகார பீடங்களிடமும், சந்தர்ப்பவாத சாமியார்கள், பெரும் பண்ணைகளிடமும் கொண்டு போய் அடகு வைத்து இவர்களை ஈழ நாயகர்களாக உருவாக்குகிற ஆளும் வர்க்க நலன் சார்ந்த தந்திரமாக உருவெடுத்திருக்கிறது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர் என்ற அமைப்பு என்ற ஒன்றைத் துவங்குவதோ, அதற்கு அமைப்பளாராக ஞானவேல் இருப்பதோ, ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ தவறிலை, ஆனால் தனக்குத் தெரிந்த பணக்காரர்கள், ஆளும் வர்க்க அடிவருடிகள், நடிகர்கள், என்ற இவர்களின் பின்னணியில் ஜெகத் கஸ்பார் என்னும் ஆளும் கட்சி ஆதரவுபெற்ற ஒரு நபரின் நிதி உதவியோடு வெளியிடுவதும் , அதற்குப் பத்திரிகையாளர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் இங்கு பிரச்சனை. ஞானவேல் “அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம்” சார்பில் இதைச் செய்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.

போருக்கு எதிரானவர்கள் யார்?

மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப்பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே வன்னிப் போரில் அதிகம்.

இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார பாசிஸ்டுகளான ராஜபட்சே சகோதர்களை பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மையுள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள். போரை நடத்திய இந்திய, இலங்கை கூட்டு இராணுவப் படைகள் கொன்றொழித்தது புலிகளை மட்டுமல்ல ஐம்பதாயிரம் வன்னி மக்களையும்தான்; இனப்படுகொலையின் சூத்திரதாரி இலங்கை மட்டுமல்ல மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான்.

போரை நிறுத்தாமல் அதை வேகமாக முடிக்க நெருக்கடி கொடுத்த இந்தியா இன்று ராஜபட்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்குமிடையிலான போரை தீர்த்து வைக்க விரும்புகிறது. சமாதானம் பேசவே கொழும்பு சென்றிருக்கிறார் பிரணாப்முகர்ஜி. வன்னி மக்களைக் கொன்றொழித்த மத்திய காங்கிரஸ் அரசு, போர் நிறுத்தம் கோரிய ஜனநாயக சக்திகளின் நண்பனா? எதிரியா?

இதற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். கட்டுரையை எழுத நினத்ததன் தேவையே அங்கிருந்துதான் உருவாகிறது. அதைச் சொல்வதற்கு முன்னால், வேறு சில விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் மத்திய மாநில அரசு அதிகாரங்களை துய்த்து வரும் தி.மு.க இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சியோடு பதவியை பங்கிட்டிருக்கும் கட்சி. தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட போது கருணாநிதி தன் பதவி அதிகாரத்தைப்ப பாதுகாத்துக் கொள்வற்காக ஈழம் தொடர்பாக நாடகங்களை அரங்கேற்றினாரே தவிர கடைசி வரை ஈழ மக்களிடம் கரிசனம் காட்டவில்லை. மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது அவர் புலிகளின் சகோதரப் படுகொலை பற்றி பேசினார். வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்ற போது பிரபாகரன் சர்வாதிகாரி என்றார். ஈழம் தொடர்பாக மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார் கருணாநிதி.

கருணாநிதி மட்டுமல்ல அவரோடு அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்த டாகடர் ராமதாஸ் கூட சூழலுக்கு தக்கவாறு பேசியே நாடகங்களை அரங்கேற்றினார்.போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பார்ப்பனத் திமிரோடு பேசிய ஜெயலலிதாவோ, கருணாநிதியின் பெயர் கெடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஈழப் பிரச்சினையை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். மக்கள் அதை நம்பவில்லை என்பது தனிக்கதை.

கடைசியில் புலிக்கோஷமிட்டவர்களாலேயோ, நாடகங்களை நடத்தியவர்களாலேயோ, ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். இவர்களால் உள்ளூர் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை இன்றைக்கு மீனவர் பிரச்சனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைகோ, திருமா, கருணாநிதி, ஜே, நெடுமாறன், என எல்லா தலைகளும் சந்தர்ப்பவாதிகளே என்பதை தீயில் எரிந்து முத்துக்குமார் உணர்த்தினான். முத்துக்குமாரின் தியாகத்தை தற்கொலை என்றார் திமுகவின் அன்பழகன். இதெல்லாம் போரின் போது நடந்த சில கசப்பான உண்மைகள்.

ஜெகத்கஸ்பார் கும்பல் சொல்கிற மாதிரி அமைதியாக மௌனமாக இல்லாமல் தமிழகத்தின் இரண்டு துருவ அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகளும்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை அமைப்பினர், கண் தெரியாதவர்கள், தையல் கலைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், என பலரும் போராடினார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மட்டும் போருக்கு எதிராக போராடவில்லை. ஒரு வேளை அப்போது இந்த அமைப்பு துவங்கப்பட்டு போருக்கு எதிராக போராடியிருந்தால் சீமானையும், கொளத்தூர் மணியையும், கோவை இராமகிருட்டிணனையும் ஏனைய தோழர்களையும் சிறையில் தள்ளி ஒடுக்கிய கருணாநிதி, இந்த பத்திரிகையாளர்களையும் உள்ளே தான் தள்ளியிருப்பார்.

ஈழப்போருக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் எது கிடைத்ததோ, அதுவே பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். போராட்டம் என்பதன் வலியறியாத பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக போராடவில்லை என்றால், சில பிழைப்புவாத துரோகிகளோ அம்சாவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இது குறித்தெல்லாம் ஏற்கனவே விரிவாக வினவில் எழுதியிருக்கிறோம். போர் நடக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது போருக்கு எதிரான அமைப்பு என்று துவங்கியிருக்கிறார்களே, எந்த போருக்கு எதிரானது இந்த அமைப்பு என்று அதன் அமைப்பாளர் ஞானவேல் சொல்வாரா?

வடகிழக்கில் இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருக்கிறதே அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களே வீரம் செறிந்த போர், அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது ஆப்கான் போருக்கு எதிரானதா? அல்லது இந்திய அரசு விரும்பாத போராக சரத்பொன்சேகாவிற்கும், ராஜபட்சேவுக்கும் இடையில் தற்போது நடக்கும் போருக்கு எதிரானதா?

ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி

இன்று இந்தப் பாதிரியார் குறித்து எழுத பலரும் பயப்படுகிறார்கள். சிலர் இவர் பிரபாகரனோடு உண்டு உறங்கி வாழ்ந்தவர் என்று மிரட்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ இவர் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம், சிதம்பரம் என பெரிய இடத்து தொடர்புகள் உள்ளவர் அதனால் வம்பு வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள். இன்னும் சிலரோ இவர் பின்னால் திருச்சபை இருக்கிறது. மிகப் பெரிய அதிகார பீடமது. அதனால் நாம் இவரை பகைத்துக் கொள்ள முடியாது என்று ஒதுங்குகிறார்கள். மே 18க்குப் பிறகு இவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகளை பதிவுலகில் பலர் வெளியிட்டு ஜெகத் கஸ்பாரை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள்.

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்கு “காலம் உருவாக்கித் தந்த கறவை மாடு. அவருக்கு ஈழத்தின் மீதோ, திமுக மீதோ, கருணாநிதியின் மீதோ அபிமானமோ, பற்றோ கிடையாது. பெரிய மனிதர்களின் பழக்கமும் தனது தன்னார்வக்குழுவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் ஜெகத்தின் நோக்கம்.

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் – இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து – முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த நக்கீரனில் ”வன்னியில் என்ன நடந்தது?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான் முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள் நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த “சரணடைவு நாடகம்” என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி… அண்ணனின் கையில் சமாதானப்புறா….. இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது, இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள் 21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே “மறுப்பு மாதிரி” ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

ஞானவேல்.. வளர்ந்து வரும் ஜெகத் கஸ்பாரே!

ஜெகத்தின் நல்லேர் பதிப்பகத்தின் நிதியில் பத்திரிகையாளர்களின் பெயரில் நூல் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதில் ஏழுதிய ஏராளமானவர்களையும் ஏமாற்றி, சக பத்திரிகையாளர்களையும் ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் ஞானவேல். பொதுவாக எதிர்ப்பியக்கங்களின் போராட்ட வடிவங்களெல்லாம், இன்றைய அரசு அடக்குமுறைகளின் விளைவாக போர்க்குணமிக்க வடிவத்துக்கு மாறும் காலம் இது. அது போல அரசு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது, மனுக்கொடுப்பது, கண்ணீர் அஞசலி செலுத்துவது போன்ற அபத்த நாடகங்கள் இந்தியாவில் காமெடியாகிவிட்டது. மக்கள் இவ்வாறு போராடி போராடி அலுத்துப் போய்விட்டார்கள். அப்படி போராடுகிறவர்கள் மண்டையை பிளக்கிறது போலீஸ் அராஜகம். இப்போது இம்மாதிரி போராட்டங்களில் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால்தான் போர் நடைபெற்ற காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களும் வன்முறை வடிவம் எடுத்தன. அப்போது ஜெகத் மௌன ஊர்வலம் நடத்தினார்.

அதாவது யாரைப் பற்றியும் எதுவும் பேசாமல் ஒரு ஊர்வலம். அதாவது கொலை செய்கிற இந்தியாவைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார அரசுகளைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார இந்திய அரசோடும், அதற்கு துணைபோகும் மாநில அரசோடும் சேர்ந்து கொண்டு “ஏதாவது” செய்ய வேண்டும். இதுதான் கஸ்பாரின் கொள்கை. அந்தக் கொள்கையை இப்படித்தானே அமல் படுத்த முடியும்?

மக்களின் எதிர்ப்பு வடிவங்களை அரசியல் அற்ற ஒன்றாக மாற்றுவதும் அதை அரசு நிறுனத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதும்தான் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரியின் வேலை. பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரிகளின் வேலையும் இதுதான்.

அயோக்கியத்தனத்தின் ஒரு போராட்ட வடிவமாக மௌன ஊர்வலத்தையும், மெழுகுவர்த்தி பிரார்த்தனயையும் நடத்தினார் ஜெகத். அதன் போருக்குப் பிந்தைய இன்னொரு வடிவம்தான் இந்த ”மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழா. கருணாநிதின் பெயரை சரி செய்யும் முயற்சியும், போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியும் கூட இந்த விழாவில் இருக்கிறது. அதாவது அனைத்து பத்திரிகையாளர்களும், கலைத்துறையினரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்களின் பின்னால் நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை ஞானவேலும், ஜெகத்தும் தோற்றுவித்திருக்கிறார்கள். கவிதை வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் மேடையில் பேசினார்கள்.

பிரகாஷ்ராஜ் அவர் என்ன பேசினார் தெரியுமா? மௌனமாக இருந்து விட்டோம் என்று குறைபட்டார். ( மௌனமாக இருந்த ஞானவேல் பக்கத்தில் இருந்தார்) சிவக்குமார் பேசவே இல்லை ஏதோ கவிதை படித்தார். போலிச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் “அன்பும் கருணையும் பொழியட்டும், மக்கள் போராடக் கூடாது, சேகுவேராவை யாரும் பின்பற்றக் கூடாது” என்றான் அந்த தாடிக்கார சொறி நாய்……”நான் விரைவில் ஈழ மக்களுக்காக ஒரு ப்ராஜக்ட் செய்யப் போகிறேன்” என்று ஆட்டையப் போட்டான் அந்தப் பாவி. ஏ.ஆர் முருகதாஸ் ஏதோ பேசினார்.

அந்த விழாவில் கடைசியாக நன்றி சொன்னது யார் தெரியுமா? மருத்துவர் எழிலன். அவர் திட்டக்குழு தலைவரும் தீவிர திமுக அனுதாபியுமான கருணாநிதியின் செல்லப் பிள்ளையுமான நாகநாதனின் மகனாம். துரோகங்களை என்ன மையிட்டு மறைத்தாலும் அது இந்த புயல் மழையில் கரைந்து கொண்டே இருக்கும்தானே? எவருடைய பேச்சிலும் அரசியல் இல்லை. போரின் இந்திய முகத்தை சுட்டிக் காட்டவோ, தமிழக துரோகத்தை தோலுரிக்கவோ முடியாத ஆளும் வர்க்க பெரும்பண்ணைகள் தங்களின் சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க நலனை முன்னெடுத்தே இதில் பேசினார்கள்.

வந்திருந்த கூட்டத்தில் பாதி அல்லேலுயா கோஷ்டிகள். மீதி பேர் சத்குருவின் பக்தர்களாம். கூட்டம் முடிந்ததும் சத்குருவைப் பார்த்து அழுது அரற்றினார்களாம். சத்குருவிடம் அழுதால் கஷ்டங்கள் மறைந்து விடும் என்று சாங்கியம் இருப்பதால் அப்படியாம். ஆக ஈழத்துக்காகப் போட்ட கூட்டத்தில் ஆடியன்ஸ் அழுதது சத்குருவுக்காக.

இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ பிஷப் மலையப்பன் சின்னப்பா, இறைவன் ராஜபக்சேயை தண்டிப்பான் என்று பேசினார். தங்களைப் போன்ற யூதாஸ்களுக்கு என்ன தண்டனை என்பதை அவர் கூறவில்லை. கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் பெரும்பலான பாதிரிகள் சாதி வெறியர்கள். பண மோசடிப் பேர்வழிகள். கிறிஸ்தவ மீனவர்களுக்காக வந்த நிதிகளை பெருமவளவு மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பாதிரிகளுக்கு உண்டு. இந்த சென்னை மயிலை பிஷப் மலையப்பன் சின்னப்பாவோ திமுக ஆதரவாளர். ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து தங்களின் மத நிறுவனங்களுக்கு அனுகூலங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

ஜெகத் தனது “நாம்” அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும்,இந்த மௌனத்தில் வலி நூலிற்கும் 68,லஸ் கோவில் சாலை என்னும் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது கிறிஸ்தவ நிறுவனமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் முகவரியாகும். ஆக ஜெகத்தின் இன்றைய ஈழம் சார்ந்த துரோகக் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க கிறிஸ்தவ திருச்சபையின் ரப்பர் ஸ்டாம்ப்

இறுதியாக,

பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ, அதற்காக போரடுவதோ தவறில்லை, ஆனால் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த பத்திரிகையாளர்கள் எங்கே போயிருந்தார்கள் ? போருக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்நூல் நல்லேர் எனப்படும் ஜெகத்தின் பணத்தில் ஏன் வெளிவரவேண்டும்? “நாம்” அமைப்பின் நிறுவனர்களாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் போன்ற ஈழக் கொலைகாரர்களின் பணம் “நாம்” அமைப்பிடம் இல்லை என்பதற்கு பத்திரிகையாளர்களின் பெயரில் ஜெகத்திற்கு பந்தி வைத்த ஞானவேல் ஏதாவது உத்திரவாதம் தருவாரா? அல்லது நல்லேர் பதிப்பகத்தின் செலவில் வெளிபட்டப்பட்டிருக்கும் இப்பணம் என்பது புலிகளை கடைசி நேரத்தில் எளிதாக சரணடைய வைத்ததற்காக இந்திய உளவு நிறுவனம் ஜெகத் கஸ்பருக்கு சன்மானமாக வழங்கப்பட்ட பணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை என்று உத்திரவாதத்தையாவது ஞானவேல் கொடுப்பாரா?

அன்பான ஈழத் தமிழர்களே!புலத்து மக்களே! தமிழக மக்களே! வித விதமான குரலில் பேசி உங்கள் கழுத்த்தறுத்த இந்த துரோகிகளை இனம் காணுங்கள். இன்னும் நீங்கள் இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஈழத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களைக் கூட இந்த இரத்த வெறியர்களிடம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இந்தத் துரோகிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். துரோகத்தை மறைக்க வித விதமான முகமூடிகளோடு வந்து தங்கள் கறைகளை கழுவ நினைக்கும் இந்த கைக்கூலிகளை அம்பலப்படுத்துங்கள். புதிய அரசியல் பாதையை உங்களின் சொந்த அரசியல் அறிவில் முன்னெடுங்கள்.

- கட்டுரையாளர்: வெண்மணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.