Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?

Featured Replies

மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?

கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் உதவ ஏதுவாக இருந்தது. இருப்பினும் தற்போதைய பூகோள அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டால் கியூபா நாடானது இலங்கைக்கு பல உதவிகளை வழங்கிவருவதுடன், ஆயுதக் கொள்வனவில் எவ்வகையான ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய வேண்டும் என அறிவுரைகளையும் கூறிவருகிறது.

இதேபோல பாலஸ்தீன நாடும் தற்போது பல பின்னடைவுகளைச் சந்தித்து, "ஹமாஸ்", "பத்தா" என இரு போராட்ட அமைப்பு தமக்குள்ளே பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, வேறு நாடுகளில் உள்ள போராட்டங்களுக்கு உதவும் என வெளிப்படையாகக் கூறமுடியாது.

அத்துடன் இலங்கை அரசின் முகமூடியைக் கிளித்து பல விடையங்களை தமிழர்களுக்குச் சார்பாக எழுதி, உண்மை நிலையை வெளியுலகிற்க்குக் கொண்டுவந்து, தமிழர்களின் அபிமானத்தை பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம் ஊடாக இந்தச் செய்தி ஏன் வெளிவரவேண்டும் ? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஹம்சா இங்கிலாந்தில் செயல்பட்டுவருவதால், இவரூடாக இச் செய்திகள் பிரசுரமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறான ஒரு ஊடகத்தில் செய்தி வந்தால் தமிழர்கள் நம்புவார்கள் என ஹம்சா நிணைத்திருக்கலாம். நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா ?

இனிக் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள இந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் நோக்கம் என்னவாக இருக்கலாம் என ஆராய்ந்தால், இதுவரை காலமும் தளபதி ராம் அவர்களை வைத்து இலங்கை அரசு ஆடிவந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதால், கிழக்கில் உள்ள சில தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களைக் கொடுத்து புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு சில தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

இலங்கையில் தேர்தல் சூடு பிடித்துள்ளவேளையில், எதிர்கட்சிப் பிரமுகர்கள் சிலரை இலங்கை அரசானது மறைமுகமாக தீர்த்துக்கட்ட இது ஒரு முணைப்பாக இருக்கலாம். எதிர்க் கட்சிப் பிரமுகர்களை தீர்த்துக்கட்டிவிட்டு, அதனை முன்போல விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என தற்போது கூறமுடியாது. அப்படியாயின் தென்னிலங்கையில், மகிந்தவின் அரசு செல்வாக்கை இழக்கநேரிடும். அதற்காக இப்படி ஒரு அமைப்பை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நின்றுவிடாமல் புலம்பெயர் மக்கள் அல்லது ஈழத்தில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தொடங்க நினைத்திருந்தால், மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே இனி நாம் ஏன் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என எண்ணுவார்கள். அதைவிட அது உண்மையான போராட்ட இயக்கம் என சில இளைஞர்கள் எண்ணி சேரவும் நிணைப்பார்கள், அப்படி சேர நினைக்கும் இளைஞர்களையும் இலங்கை அரசு இலகுவாக இனம்காண முடியும். எனவே மக்கள் விடுதலை இராணுவம் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளது ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தவா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

இவர்கள் உண்மையான போராட்ட இயக்கமாக இருந்தால் விரைவில் இவர்கள் நடவடிக்கை மூலம் இது தெளிவாகத் தெரியும். தற்போது உள்ள சூழ் நிலையில் எதையும் எடுத்த எடுப்பில் நாம் நம்பிவிட முடியாது என்பதே யதார்த்தம்.

அப்படியே ஒரு புதிய ராணுவக் கட்டமைப்பு இந்த 7 மாதத்தில் கொமாண்டர் கோணேஸ் உருவாகியிருந்தாலும், தம்மை ஒரு இராணுவக் குழு என இவர்கள் இவ்வளவு வேகமாக ஏன் தம்மை அறிமுகப்படுத்தவேண்டும் ? அவ்வாறு அவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை ஏன் சிங்கள ஊடகங்கள் பெரும்செய்தியாக வெளியிடவேண்டும், குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதின் அர்த்தம் என்ன ? இவற்றை எல்லாம் பொறுத்திருந்து மிக அவதானமாக தமிழ் மக்கள் நிதானத்துடன் பார்க்கவேண்டும் என அதிர்வு இணையம் மக்களை வேண்டி நிற்கிறது. உண்மையாகப் போராடும் அமைப்பை மிகச் சுலபமாக நாம் அடையாளம் காணலாம் என்பதில் ஜயமில்லை. இதனையே நாம் செய்தும் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு உண்மையான போராட்ட அமைப்பு களமிறங்கும். அது விடுதலைப் புலிகளின் அதி நவீன படை அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மலரும் தமிழீழம் விரைவில்... ஏன் என்றால் மாண்ட மாவீரரின் இலட்சியம் அதுவென்றபடியால்...

உண்மையிலும் உண்மை. புதிதாக ஒன்று உருவாக இதைவிட வேறு காரணம் இல்லை அதிலும் அம்சா ஒரு தொப்பி பிரட்டி என்பது தமிழர் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுவே மக்கள் விடுதலை இராணுவம் - மனோ கணேசன்

கிழக்கில் தோற்றம் பெற்றுள்ள மக்கள் விடுதலை இராணுவம் என்ற ஆயுதக் குழு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆயுதக் குழுவானது எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட முக்கிய எதிர் கட்சி பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/4520/54//d,view.aspx

‘மக்கள் விடுதலை இராணுவம்’ ஒரு புஸ்வாணம்? இது ஈரோஸ் சங்கர்ராஜி அணியா?

nesanshankarrajee.jpg

Nesan Shankar Rajee

மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் புதிய மார்க்ஸிய இயக்கம் தோற்றம் பெற்றுள்ளதாக பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகையில் அன்ரனி லொய்ட்ஸினால் எழுதப்பட்ட கட்டுரைக்குப் பின்னணியில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி நேசன் அணியே பின்னணியில் இருப்பதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை ஈரோஸ் அமைப்பின் நேசன் அணியினர் மறுக்கின்றனர். மக்கள் விடுதலை இராணுவம் அல்லது மக்கள் விடுதலைப் படைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே தங்களது உத்தியோகபூர்வமான அறிவிப்பு எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி தளநிலைமைகள் எப்படி என்று தன்னால் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ரைம்ஸ் பத்திரிகையாளர் அன்ரணி லொய்ட் தனது நண்பர் என்று தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இன்னும் சில தினங்களில் இவ்வமைப்புப் பற்றிய மேலதிக செய்திகள் ரைம்ஸ் பத்திரிகையில் வர இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்த இருப்பதாக இன்று (Dec 7) அன்ரணி லொய்ட் தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (Dec 7) ரைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவருவதற்கு முன்னதாகவே நேசன் சங்கர்ராஜி, சக்தி ஆகியோர் இலங்கை அரசு அரசியல் தீர்வு காணாதபட்சத்தில் அழுத்தம் டகொடுக்கும் நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்ற வகையில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் சிறிய அளவிலான தாக்குதல்கள் பற்றியும் உரையாடி இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் வரை பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சங்கர் ராஜி நேசன் திடீரென இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது பற்றியும் பேசியது முரண்நகையாகவே இருந்தது.

இன்று ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை இராணுவத்தின் ‘தளபதி’ கோணேஸ் என்பவருடன் தொடர்பு கொள்ளமுற்பட்ட போது இலங்கையில் உள்ள ஒரு கைத்தொலைபேசி இலக்கம் தேசம்நெற்க்கு வழங்கப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்புகொண்டால் கோணேசுடன் பேச முடியும் எனவும் சொல்லப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்பு கொண்டு கோணேஸா பேசுகிறீர்கள் என்று கேட்ட போது ஆம் என்று பதில் வந்தது.

தேசம்நெற்றை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்கள் விடுதலை இராணுவம் பற்றிக் கேட்ட போது அவர் ஈரோஸின் வரலாற்றை அளக்க ஆரம்பித்தார். அந்த அறிமுகமான குரலைக் கொண்டு ‘சக்தி’ பேசுகிறீர்கள் என்ற போது அவர் ‘ஓம்’ என்றார். இவரை சில வாரங்களுக்கு முன் தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு ஒன்றில் லூசியம் சிவன் கோவிலில் சந்தித்து இருந்தேன். அந்த அறிமுகம் இருந்தது.

நீங்கள் தான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளீர்கள் என்று கேட்ட போது அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார் சக்தி. ‘உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளதா எனக் கேட்டபோது ‘நிச்சயமாக. இலங்கை அரசு அரசியல் தீர்வை முன் வைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்படும்’ என்றும் சக்தி தெரிவித்தார்.’ யார் அந்த மக்கள் விடுதலை இராணுவம்?’ எனக் கேட்டபோது ஒரு மணி நேரத்தில் மீண்டும் அழையுங்கள் முழுத்தகவல்களையும் பெற்று வைக்கின்றோம் என்றனர்.

அவ்வாறே சில மணி நேரங்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘சில விசயங்களை எப்படி உங்களுக்குச் சொல்வது’ என்று கதைத்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துணடிக்கப்பட்டது. மீண்டும் பலமுறை முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குகணேஸ் என்ற முன்னால் போராளி ஒருவர் ஈரோஸ் நேசன் அணியில் உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. நேசன் அணிக்கும் பிரபா அணிக்கும் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரேயே மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மக்கள் பாதுகாப்புப் படை’ இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இவர்கள் புலிகளைப் போன்று பாஸிஸ அமைப்பாகச் செயற்பட மாட்டார்கள் என்பது அவர்களுடைய மார்க்ஸிய கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாகத் தெரிவித்தார்.

ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ள கோணேஸ் என்ற தளபதிக்கு மக்கள் பாதுகாப்புப் படை வழங்கிய பெயர் குகணேஸ் என்றும் அது தவறுதலாக கோணேஸ் என பிரசுரிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் அன்ரனி லொயட் தெரிவித்ததாக நேசன் சங்கர்ராஜி தெரிவித்தார்.

அன்ரனி லொய்ட் என்ன சொன்னார் என்பதை நேசன் சங்கர்ராஜி சொல்கிறாரா அல்லது நேசன் சங்கர்ராஜி விரும்புவதை அன்ரனி லொய்ட் ஊடாகத் தெரிவிக்கிறாரா என்ற குழப்பம் தவிர்க்க முடியாதது. அன்ரனி லொய்ட்க்குப் பின் நேசன் சங்கர்ராஜியும் அவருக்குப் பின் மக்கள் பாதுகாப்புப் படையும் அதற்குப் பின் இலங்கை அரசும் றிற்கின்றதா என்ற சந்தேகத்திற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.

ரைம்சில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வல ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற அமைப்பின் பெயரை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவர்களை அரசியல் நிர்வாகரீதியாகக் கையாள்வதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழலில் இவ்வாறான அமைப்புகள் தோண்றுவது உலகில் சகஜம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்க வரலாறுகளின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பு இந்திய இராணுவத்திடமும் பாலஸ்தீனத்திலும் பயிற்சி எடுத்திருந்தது. ஆனால் தற்போது ஈரோஸ் பலவாகச் சிதறியுள்ளது. அதில் நேசன் அணி தனது தந்தை சங்கர்ராஜியின் நிழலில் இயங்குகிறது. இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக இருந்த இவ்வமைப்பு தற்போது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் து}க்கவும் தயார் எனத் தெரிவிக்கின்றனர். இவர்களது கதையை கேட்க எத்தனை பேர் தயார் என்பதும் இவர்கள் தான் மக்கள் விடுதலை இராணுவமா என்பதையும் அறிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி ஏற்படாது.

இந்த மக்கள் விடுதலை இராணுவத்திற்குப் பின் மக்களல்ல இலங்கை அரசு செயற்படுகின்றது என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது. இவை பற்றிய உண்கைள் விரைவில் துலங்கும் என நம்பலாம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி அணி ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேசன் சங்கர்ராஜி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

2 மாங்காய் என்ன மாமரத்தையே சாய்சிடலாம் மாப்பிள்ளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.