Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

வீரகேசரி இணையம் 12/10/2009 9:01:43 AM - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

தேர்தலை பகிஷ்கரித்தல்,தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல்,யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல்,தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு,தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளனர்.

நேற்றையக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன்(தற்போது இந்தியாவில்), எஸ்.ஜெயானந்தமூர்த்தி(தற்போது லண்டனில்), சதாசிவம் கனகரத்தினம் (தற்போது தடுப்புக் காவலில்) ஆகியோர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு தவறான முடிவும் அதன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும். வரலாற்று ரீதியான இந்தத் தருணத்தில் இவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு முடிவுக்கு வருவது என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஒருவேளை ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட்டால் மக்கள் தம்மை நிராகரிக்கக் கூடும் என்ற அச்சம் இருக்கலாம். ஆனால் நடந்து முடிந்த யாழ் மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளாத நிலையில் பெருவெற்றி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, மக்கள் தம்மை நிராகரிக்கக் கூடும் என்று அச்சம் எழ வாய்ப்புகள் இல்லை. சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வெற்றியை வாக்குகளாக சரத்தும், மகிந்தவும் ஓரளவுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளப் போகும் நிலையில் வெற்றியைத் தீர்மானிக்கின்ற வாக்குகளாக சிறுபான்மை வாக்குக்கள் இருக்கப் போகின்றன.

மகிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டுவரத் துடிக்கும் இந்தியாவின் சதிவலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிவிட்டது போல தோன்றுகின்றது. நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் இறுதி முடிவு மகிந்தவை ஆதரிக்குமாறு மக்ககளைக் கோருவதாகவே இருக்கும். மீண்டும் ஒரு இந்தியத் துரோகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஈழத்தில் அரங்கேறப் போகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாவிட்டால் செய்யவேண்டியது இந்தியத் தூரோகத்துக்கு ஆதரவளிக்காமல் இருப்பது மட்டுமே. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பகிஷகரிப்புஇதனி வேட்பாளர் நிறுத்துதல்இவாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

மேற்படி 3 உருப்படியான விடயங்களைக் கை விட்டு விட்டு உருப்படியில்லாத முடிவை ததேகூ எடுத்திருப்பது.தமிழ் வேட்பாளர் நிறுத்தப்படாவிட்டால் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் இதுவே மக்கள் எடுக்கும் முடிவு.இந்தியாவை நம்பி ஆட்டம் போடும் இவர்கள் அரசியல் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கப் போகிறது.தலைவர் இல்லை?யென்ற தைரியத்தில் தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள். காலம் பதில் சொல்லும்.

தேர்தல் என்ற ஒன்று வந்த பின் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் தனது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாது போனால்

குறைந்த பட்ச தகுதியையும் இழக்கவேண்டிவரும்.

இங்கு ஆதரிக்குமளவில் எந்தவொரு வெட்பாளருமில்லை அப்படியுக்கு இனியும் என்ன கிடக்கு.

எவன் ஒருவன் தமிழன் துணிந்து கேட்கிறானோ அவனுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றே நான் எதிர் பார்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்பார்த்த முடிவுதான்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.