Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாமாகவே உறுதிப்படுத்தும் சிங்களம்

Featured Replies

கடந்த ஞாயிற்று கிழமை சரத்பொன்சேகா சண்டே லீடருக்கு அளித்த செவ்வியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களை கொல்லும்படி கோத்தபாயதான் 58 வது டிவிசன் தளபதிக்கு கட்டளையிட்டார் என கூறினார். பின்னர் அதனை தமக்கு ஒரு பத்திரிகையாளர்தான் சொன்னதாகவும் அந்தவேளை தான் சீனாவில் நின்றதாகவும் கூறினார்.

இதே நேரம் சரத் பொன்சேகாவின் நேர்முகத்தின் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சரத் பொன்சேகாவினது கூற்றினை வைத்து எவ்வாறு அவரை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு துரோகியாக்கி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்யலாம் என்பதில் மிகவும் மூர்க்கமாக இருப்பதால் அவர்களின் பதிலடி நடவடிக்கைகள் சரத் பொன்சேகாவின் கூற்றை நிரூபிப்பதாகவே அமைகின்றது.

சரத் பொன்சேகாவின் பாடசாலை நண்பரும் மஹிந்தவின் தீவிர ஆதரவாளருமான நிமால் தயாசிறி அவர்கள் சரத் பொன்சேகாவின் கூற்று ஒரு அரச இரகசியம் என்றும் ஆனால் அதனை அவர் வெளியிட்டது தவறு என்றும் கூறியுள்ளதுடன் இவ்வாறான அரச இரகசியங்களை பகிரங்கபடுத்தியது அரசமைப்பின் 1955 ஆம் ஆண்டின் 6 பிரிவு ஈ இல் உள்ள விதிகளை மீறியுள்ளார் என்றும் சட்டம் பேசியுள்ளார்.

இதன் மூலம் சரத்பொன்சேகா சொன்னவை உண்மை ஆனால் அவர் சொன்னது அரச இரகசியம் அதனை பகிரங்கப்படுத்தியதுதான் தவறு என நிரூபித்துள்ளார். அடுத்ததாக மஹிந்த ஆதரவு கட்சியான விமல் வீரவன்சவின் தேசிய மக்கள் முன்னணி கருத்து கூறுகையில் ஜே.வி.பி இன் தலைவர் ரோஹன விஜய வீரவை சரணடைந்த போது சுட்டு கொல்லுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அரசு உத்தரவிட்டது. அப்போது ரணில் இருந்தார் ஆனால் ஏன் அதனை தடுக்க முடியவில்லை அல்லது ஏன் அதனை பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் இப்போது புலிகளின் தலைவர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது மட்டும் ஏன் பகிரங்கபடுத்துகின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இதன் மூலம் மேலும் மஹிந்த அரசு செய்த போர்குற்ற மீறல்களை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றது சிங்கள பேரினவாதம்.

அடுத்ததாக சனல் 4 தொலைகாட்சி மீண்டும் நேற்று மாலை ஏற்கனவே தம்மால் வெளியிடப்பட்ட சிங்கள அரசின் போர் மீறல்கள் குறித்த வீடியோ ஆவணம் ரைம்ஸ் சஞ்சிகை மூலம் உண்மை என உறுதிப்படுத்தியதாக ஒளிபரப்பியது. அத்துடன் அந்த செய்தியில் ஆய்வு செய்த தடையவியல் நிபுணரையும் நேர்முகம் செய்து ஒளிபரப்பியது. இதன்போது ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் தடுப்பு ஆணையாளரையும் செவ்வி கண்டபோது அந்த அதிகாரி இது ஒரு உண்மையான சாட்சி என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த செய்திக்கு கருத்து கூறுவதற்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் சரியான காரணங்களை தெரிவிக்கவில்லை என பார்வையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதே நேரம் சனல்4 ஒளி நாடா பொய் என சிங்கள அரசாங்கம் கூறியது மட்டுமன்றி அதற்காக சனல்4 நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விரட்டியது. ஒரு சட்டவாளரையே பிரித்தானியாவுக்கு அனுப்பியது. ஆனால் அது கதையாகவே போனதாக செய்திகள் கூறுகின்றன.

ஆகவே எதிர்காலத்தில் இன்னமும் பல முடங்கிய சாட்சிகள் வெளிவரும், கண்கண்ட சாட்சிகள் கூட வெளியே வரத்தொடங்கியுள்ளன. ஆனால் இந்த சாட்சிகளையும் அதனை தொடர்ந்து வரும் குற்றசாட்டுக்களும் ஐக்கிய நாடுகளாலும் மேற்கத்தைய நாடுகளாலும் தமது நோக்கத்தை அடைவதற்காக சிங்கள அரசை மிரட்டி பணிய வைப்பதற்கே பயன்படுத்தப்படும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இதில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.